பேச்சு:திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில்
பெயர் மாற்றம்[தொகு]
- வெளியிணைப்பாகிய தினமலர் நாளிதழில் கூட, "பாடலீசுவரர் (பாடலீசுவரர், கன்னிவனநாதன், தோன்றாத்துணைநாதன்,.." என்றுதான் உள்ளது. பாடலீசுவரர் என்று மாற்றுவது தேவை.--செல்வா (பேச்சு) 14:09, 20 சூன் 2013 (UTC)
- பல இடங்களில் பார்த்தவாறு, திருப்பாதிரிப் புலியூர் என்று "ப்" இடையே வர வேண்டும். எ.கா. "ஜீ".ச. முரளி எழுதிய 'தேவார்த் தலங்கள்- நடு நாடு" (சதுரா பதிப்பகம்), பக்கம் 337-356. பற்பல பாடல்களிலும் திருப்பாதிரிப்புலியூர் என்று "ப்" சேர்ந்தே வந்துள்ளது. முரளி அவர்களின் புத்தகத்தில் பாடல்களும், தொன்மக் கதைகளும், கோயிலின் தரைப்படமும் தந்துள்ளார்.--செல்வா (பேச்சு) 15:27, 20 சூன் 2013 (UTC)
- மேலும் முரளியின் நூலில் "பாடலேசுவரர்" என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்ற வேண்டும் என்று நினைக்கின்றேன். --செல்வா (பேச்சு) 15:30, 20 சூன் 2013 (UTC)
- தொடர்ந்து தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் மீது கவனம் செலுத்துவதற்கு நன்றி. மாற்றங்களை தாரளமாக செயல்படுத்துங்கள். பேச்சுப் பக்கத்தில் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமில்லை. எவரேனும் மாற்று கருத்து தெரிவித்தால் பிறகு அதைப் பற்றி பேசுவோம் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:13, 20 சூன் 2013 (UTC)
- மேலும் முரளியின் நூலில் "பாடலேசுவரர்" என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்ற வேண்டும் என்று நினைக்கின்றேன். --செல்வா (பேச்சு) 15:30, 20 சூன் 2013 (UTC)