பேச்சு:தமிழ்நாட்டில் சைனர் கோயில்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாட்டில் சைனர் கோயில்கள் என்னும் கட்டுரை சமணம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சமணம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கருத்து[தொகு]

// இரதியோடு காமன் இருக்கும் காட்சி, இந்திரன் பூனை உருவில் வந்து அகலிகையை ஏமாற்றிய காட்சி, அகலிகை கணவன் கவுதம முனிவன் அகலிகையைக் கல்லாக்கிய காட்சி முதலானவை அங்குச் சிற்பமாக்கப்பட்டிருந்தன. இந்தச் செய்தியைக் கூறும் பாடலடிகள் இரட்டுற மொழியப்பட்டுள்ளன எனக் கண்டால், கவுதமன் என்பது புத்தனையும், சினன் எனபது சினேந்திரனையும் குறிப்பதாக எடுத்துக்கொள்ளமுடியும்//

இது கட்டுரை ஆசிரியரின் சொந்தக் கருத்து போல் தெரிகிறது. இரட்டுற மொழிதலாயினும் இராமாயணத்தில் வரும் அகலிகையை கௌதம புத்தரோடும், சமனரோடும் இணைத்து கூறப்பட்ட வேறு தொன்மங்கள் ஏதேனும் ஆதாரம் காட்டினால் நன்று. இல்லையெனில் இக்கருத்து நீக்கப்பட வேண்டும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:05, 4 சூன் 2013 (UTC)[பதிலளி]

சமணம் – சொல்விளக்கம் பகுதியை சமண சமயம் அல்லது சமணர்கள் கட்டுரையில் இணைக்கலாம். கோவில்களுக்கு சமண சமயத்தவர் ஏதேனும் பெயர் வைத்திருந்தால் அதனைப் பற்றி இங்கு குறிபபிடலாம். விக்கியன்பர்கள் கவனிக்கவும். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:03, 5 சூன் 2013 (UTC)[பதிலளி]

தலைப்பு[தொகு]

தென்காசி, எதற்காக இதன் தலைப்பை மாற்றினீர்கள்? இப்போதுள்ள தலைப்புக்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லாமல் உள்ளது.--Kanags \உரையாடுக 11:53, 14 செப்டம்பர் 2016 (UTC)

சமணம் கட்டுரை பாருங்க.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:05, 14 செப்டம்பர் 2016 (UTC)

அக்கட்டுரை சமணம் என்று தானே தலைப்பிடப்பட்டுள்ளது? சமண சமயம் என்று தானே அறியப்படுகிறது? சைனர் என நான் கேள்விப்படவில்லை. ஜைன மதம் என்று ஒன்றுள்ளது. ஜைனமும் சைனமும் சமணமும் ஒன்று தானா? அப்படியானால் சமணம் என்று அழைப்பதில் என்ன தவறு? இக்கட்டுரையில் சைனம் என்ற சொல்லை மருந்துக்கும் காணவில்லையே?--Kanags \உரையாடுக 12:09, 14 செப்டம்பர் 2016 (UTC)

சமணம் கட்டுரையை படித்துவிட்டு பேசவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:11, 14 செப்டம்பர் 2016 (UTC)

தேவைப்பட்டால் en:Sramana கட்டுரையும் துணைக்கு அழைக்கப்படும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:06, 14 செப்டம்பர் 2016 (UTC)

என்றோ யாரோ சொன்னது.

//:இந்தக் கட்டுரை சமணம் பற்றியதாகவே இருக்கட்டும். இதன் தலைப்பை மாற்ற வேண்டாம். நீங்கள் விரும்பினால் ஜைனம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றைத் தொடங்குங்கள். அதன் பின்னர் (தேவை ஏற்படின்) இரு கட்டுரைகளையும் வேறுபடுத்தலாம், அல்லது இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 20:14, 4 திசம்பர் 2013 (UTC)//[பதிலளி]

--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:13, 14 செப்டம்பர் 2016 (UTC)

உங்களுக்கு குழந்தைகளுக்கு சொல்வது போல மிகவும் விளக்கமாக எழுதினால் தான் விளங்கும். சரி அப்படியே எழுதுகிறேன். இக்கட்டுரைத் தலைப்புக்கும் கட்டுரைக்கும் ஏதாவது தொடர்புள்ளதா? அப்படியாயின் கட்டுரையில் அதைப்பற்றி விளக்கவும். தலைப்பு தமிழ்நாட்டில் சைனர் கோவில்கள். ஆனால் கட்டுரையில் சமணக் கோயில்களே பட்டியலிடப்பட்டுள்ளதாகக் கட்டுரையின் ஆரம்பம் தெரிவிக்கிறது. தலைப்புக்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லாமல் உள்ளது. கட்டுரையை புதிய தலைப்புக்கு ஏற்ப திருத்தி எழுதுங்கள். அல்லது தலைப்பை மீண்டும் மாற்றப் போகிறேன்..--Kanags \உரையாடுக 12:19, 14 செப்டம்பர் 2016 (UTC)

எதிர்தரப்பு வாதியை தூண்டிவிடுவது போல் பேசுவது உங்கள் வழக்கமே. அதில் தோற்றுப்போவதும் உங்கள் வழக்கமே. சமணம் பொதுப்பெயர் என்பதை நீங்கள் புரியாதது போல் நடிக்கலாம். நீங்கள் மாற்றினால் நான் பொதுப்பெயரை குறிப்பிட்ட உட்பிரிவுக்கானதாக நீங்கள் மாற்ற முயல்வதாக குறிப்பிட்டு மீண்டும் மாற்றுவேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:13, 14 செப்டம்பர் 2016 (UTC)

//அக்கட்டுரை சமணம் என்று தானே தலைப்பிடப்பட்டுள்ளது? சமண சமயம் என்று தானே அறியப்படுகிறது? சைனர் என நான் கேள்விப்படவில்லை. ஜைன மதம் என்று ஒன்றுள்ளது. ஜைனமும் சைனமும் சமணமும் ஒன்று தானா? அப்படியானால் சமணம் என்று அழைப்பதில் என்ன தவறு? இக்கட்டுரையில் சைனம் என்ற சொல்லை மருந்துக்கும் காணவில்லையே?//

மேலே உள்ளது அனைத்தும் கேள்விகள். இங்கே உங்க விளக்கம் ஏதும் இல்லை. முழுதும் கேள்வியா கேட்டுட்டு விளக்கம் கொடுத்ததாக தங்களையே மெச்சிக்கொள்ளும் உங்கள் சுட்டிக்குழந்தை தனம் என்னை சிரிக்க வைக்கிறது. தொடரட்டும் உங்கள் மருத்துவப்பணி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:32, 14 செப்டம்பர் 2016 (UTC)

தென்காசியார், இறுதியாக எனது கேள்விகளை விளங்கிக் கொண்டு கட்டுரையில் தகுந்த மாற்றங்களைச் செய்தமைக்கு நன்றிகள். இனி ஏன் நான் தலைப்பை மாற்றப் போகிறேன். இதைத் தான் நான் உரையாடலின் ஆரம்பத்திலேயே கேட்டிருந்தேன். உங்களுக்கு அது விளங்கவில்லை அல்லது விளங்காதது போன்று வழக்கம் போல நடித்திருக்கிறீர்கள். இனிமேல் இவ்வுரையாடல் முற்றுப் பெறுகிறது.--Kanags \உரையாடுக 21:44, 14 செப்டம்பர் 2016 (UTC)

கேள்விகளாக கேட்டுவிட்டு விளக்கம் கொடுத்ததாக சொல்லும் உங்கள் சுட்டித்தனத்தை நான் இரசிக்கிறேன். உங்களால் முற்றுப்பெறத்தான் முடியும். தொடர முடியாது. காரணம் உங்க பக்கம் சரியான விசயங்கள் இல்லை.

நான் உங்களை கட்டுரையில் எதையாவது மாற்றச்சொல்லனும் என்றால் இதை மாற்றுங்கள்னு சொல்வேனே தவிர கேள்விகளாக கேட்டுவிட்டு விளக்கம் கொடுத்ததாக மெச்சிக்கொள்ளமாட்டேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:45, 15 செப்டம்பர் 2016 (UTC)

உங்கள் பேச்சு முறைக்கும் என் பேச்சு முறைக்கும் வேறுபாடு இருக்கு. நான் உங்களுக்கு என்ன நிறம் பிடிக்கும்னு நேரா கேக்குற ஆள். நீங்க எனக்கு பச்சை பிடிக்குமா? மஞ்சள் பிடிக்குமானு கேட்டுக்கோண்டே போய் கடைசியில் நீங்களாக எதையோ ஒன்னை எனக்கு பிடிக்கும்னு கற்பனையில் கட்டமைக்கும் ஒரு ஆள் அதாவது சுட்டிக்குழந்தை மாதிரி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:49, 15 செப்டம்பர் 2016 (UTC)