பேச்சு:சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


குட முழுக்கு[தொகு]

குடமுழுக்கு எல்லா கோயில்களிலும் நடக்கும் நிகழ்வு. செய்தி போன்று உள்ளது. கவனிக்கவும். -- Mdmahir (பேச்சு) 02:18, 10 செப்டம்பர் 2015 (UTC)

வணக்கம். Mdmahir சில கோயில்களில் 12 ஆண்டுகளுக்கோ குறிப்பிட்ட ஆண்டுகளுக்கொரு முறையோ நடக்கின்றது.ஆனால் சில கோயில்களில் 50 ஆண்டுகள் கழித்துக் கூட நடக்கின்றது. பொதுவாக பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு என்ற நிலையில் முக்கியத்துவம் கருதி இவ்வாறு தந்துள்ளேன். கோயில்கள் தொடர்பான பதிவுகள் எழுத ஆரம்பிக்கும்போது குடமுழுக்கு தொடர்பாக பிறர் எழுதியிருந்ததைப் பார்த்த நினைவு. அதனடிப்படையிலும் எழுதினேன். தங்களின் கருத்தினை அறிய ஆவலாக உள்ளேன். கட்டுரைகளைப் படித்து அவற்றை மேம்படுத்த அரிய கருத்துக்களை தந்து உதவும் தங்களுக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:47, 10 செப்டம்பர் 2015 (UTC)

செய்தியைத் திருத்தியுள்ளேன்.--Kanags \உரையாடுக 08:00, 10 செப்டம்பர் 2015 (UTC)

வணக்கம் Kanags,தாங்கள் திருத்தியுள்ளவாறே 9 செப்டம்பர் 2015இல் குடமுழுக்கு நடைபெற்ற நான் பதிந்த பிற கோயில்களான கும்பகோணம் இராமசுவாமி கோயில், கும்பகோணம் கௌதமேஸ்வரர் கோயில் என்ற தலைப்பிலான கட்டுரைகளில் திருத்தம் செய்துள்ளேன். தங்களின் கருத்திற்கு நன்றி.

வணக்கம் Kanags, முந்தைய கடிதத்தினை கையொப்பமிட மறந்துவிட்டேன். பொறுத்துக்கொள்க. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:13, 11 செப்டம்பர் 2015 (UTC)

சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில்[தொகு]

கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில், திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், மேலக்காவேரி கைலாசநாதர் கோயில் மற்றும் சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில்(சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்) ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் கும்பகோணம் முதலிடத்தைப் பெறுகிறது.சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் சுந்தரேஸ்வரர் இருப்பதால் அக்கோயிலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில் என்றும் கூறுவர். தரை தளத்தில் சுந்தரேஸ்வரர் சன்னதி உள்ளது. அதில மூலவர் லிங்கத்திருமேனியாக உள்ளார். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:10, 12 சூலை 2017 (UTC)[பதிலளி]