பேச்சு:கொங்குத் தமிழ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொங்கு கட்டுரையில் இருந்து உள்ளடக்கத்தின் தனித்தன்மை நோக்கி புதிய கட்டுரையாக ஆக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பயனர்:Kurumban இந்த தகவல்களைத் தொகுத்தார். --Natkeeran 21:48, 17 மார்ச் 2007 (UTC)

Please merge the article கொங்கு வட்டார வழக்கு அகராதி with this. பயனர்:Kurumban இந்த தகவல்களைத் தொகுத்தார். --Natkeeran 21:48, 17 மார்ச் 2007 (UTC)

கொங்குத் தமிழ் குறித்து[தொகு]

கட்டுத் தரை போன்ற சொற்கள் புதுகையிலும் புழக்கத்தில் இருக்கிறது. மலகாயிதம் என்பது மழையில் நனையாமல் இருக்க உதவும் polythene sheetஐ குறிக்கும் மழைக் காகிதம் தான். மலகாயிதம் என்பதை மழகாயிதம் என்றாவது மாற்றலாமா?

செல்வா, எச்சு என்ற சொல்லை நீங்கள் ஒரு கட்டுரையில் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். இது உரைத் தமிழில் பயன்படுத்தத்தக்கது தானா? உங்கள் கட்டுரையை பார்க்கும் வரை இது extra என்ற சொல்லின் கொச்சை வடிவமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

கட்டுரைக்கு நன்றி, குறும்பன். நானும் பல ஆண்டுகள் கோவையில் வாழ்ந்திருப்பதால் இந்த சொற்களை நினைவு கூறுவதில் நினைவுகூர்வதில் மகிழ்ச்சி--ரவி 09:27, 18 மார்ச் 2007 (UTC)

ரவி, நினைவு கூறல், நினைவு கூரல், நினைவுகூர்தல், நினைவுகூறுதல். எது சரியானது?--Kanags 11:46, 18 மார்ச் 2007 (UTC)

கனக்ஸ், நினைவுகூர்ந்ததற்கு நன்றி :) க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் நினைவுகூர் என்று தந்திருக்கிறது. அதை வாங்கி வந்தது நல்லதாய்ப் போனது !--ரவி 15:51, 18 மார்ச் 2007 (UTC)

ரவி க்ரியாவின் தற்கால அகராதி பல நல்ல அமைப்புகள் கொண்டிருந்தமொழுதும், ஏராளமான சொற்கள் விடுபட்டுள்ளுள்ளன. பல சொற்களுக்கு உள்ள பொருட்ள்கள் கொடுக்கப்படவில்லை. கழக அகராதி இதைவிட மிக நல்ல அகராதி. நினைவு கூர்தல் என்பது கூர்->கூர்தல் (to attend intelligently to something - here it means to recall with care). அடுத்ததாக எச்சு என்னும் சொல் செந்தமிழ்ச் சொல்தான். எஞ்சு -எச்சு. திருவள்ளுவர் "அவரவர் தம் எச்சத்தால்" என்று கூறுவதில் உள்ள எச்சம் என்பது எச்சு என்பதன் வழி வந்தது தான். எச்சு என்பது ஒரு கலைச்சொல்லும் ஆகும் ஓர் எண்ணை வேறு ஓர் எண்ணால் வகுக்கும் பொழுது மிஞ்சி இருப்பதும் எச்சம் தான். எச்சம், எச்சு என்பது remainder. பிற அறிவியல் பொறியியல் துறைகளிலும் residue முதலானவற்றுக்குப் பயன்படுத்தலாம். --செல்வா 02:20, 19 மார்ச் 2007 (UTC)

மலகாயிதம் என்று தான் சொல்ல வேண்டும் -- குறும்பன் 22:03, 21 அக்டோபர் 2007 (UTC)

1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்)

2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம்

3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.)

4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்]

5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை.

6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்)

7. என்றது - என்னுடையது.

8. உன்றது - உன்னுடையது.

9. அப்பச்சி- தாய்வழி தாத்தா

10. அப்பாரு- தந்தை வழி தாத்தா.

11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி

12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி

13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்)

14. நடவை - வெளிப்புறக் கதவு

15. வட்டல்- தட்டு

16. நருவசா- முழுவதுமாக

17. ஸோலி- பணி (கானங்காத்தால கடை கடையா என்ன ஸோலி உனக்கு?)

18. மடார் - உடனடியாக (ஒரு வேலையச் சொன்னா மடார்ன்னு முடிச்சுட்டு வேற ஸோலியப் பாரு)

19. மோந்துட்டு - மொண்டு (குடுவையில் நீர் மொண்டு வருதல்)

20. ஒட்டுக்கா - இணைந்து (ரெண்டு பேரும் ஒட்டுக்கா போயிட்டு வாங்க - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)

21. மொளவு சாறு- மிளகு சாறு என்பதன் மாறுபாடு (அசைவக் குழம்பைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது)

22. எகத்தாளம் - திமிரு/ நக்கல் (பெரியவங்க கிட்ட எகத்தாளமா பேசாதே)

23. இட்டாரி/ இட்டேரி - தெரு. (கிராமப்புறங்களில் குறிப்பாக மண் சாலை)

24. அவுறு - அவிழ்த்தல் (கயிற்றை அவிழ்த்து விடு)

25. அவத்தைக்கு - அங்கே

26. இவத்தைக்கு - இங்கே

27. சலவாதி - மலம்.

28. போச்சாது- "பரவாயில்லை விடு" என்பது போல (ஏதாவது பொருள் தொலைந்து விடும் பட்சத்தில் போச்சாது விடு என்று ஆறுதல் படுத்துவார்கள். போய்ச் சாகிறது என்ற சொல் இப்படி மாறி இருக்கலாம் என்பது என் தீர்மானம்)

29. போசி- பாத்திரம்

30. அலுங்காம -அசைக்காமல் (போசிய அலுங்காம எடுத்துட்டு வா - பாத்திரத்தை அசைக்காமல் எடுத்து வா)

31. சிந்திடாம - உதிராமல்/கீழே கொட்டாமல் (அரிசி சிந்தாம அள பார்க்கலாம்)

32. மலக்காகிதம் - மழைக்காகிதம் - பாலிதீன் காகிதம்

33. பொறவு - அப்புறம். (கடைக்கு பொறவு போறேன்)

34. வெசனம் - வருத்தம்/சோகம் (ஏண்டா அவன் வெசனம் புடிச்சு உக்காந்திருக்கான்?)

35, 36. கருமாந்திரம் - கருமாதி என்பதாக இருக்கலாம். பிடிக்காத ஒரு நிகழ்வில் கருமாந்திரம், கெரகம் என்ற இரண்டு சொற்களும் அடிக்கடி உபயோகிக்கப் படும். (கருமாந்திரம் புடிச்சது)

37. பொசுக்குனு - சடக்கென்று (இவனுக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வந்துடும்)

38. பொக்குன்னு - வருத்தமாக (முட்டாய் தரன்னு சொல்லிட்டு தராம இருந்தா குழந்தை பொக்குன்னு போயிடும்)

39. பவுடு- கீழ் அன்னம் (லோலாயம் பேசாதடா. பவுட்ட பேத்துடுவேன்)

40. தாவாக்கட்டை- கீழ் அன்னம்.

41. சீவக்கட்டை- விளக்குமாறு

42. கூமாச்சி- கூர்மையாக

43. தொறப்பு - பூட்டு

44. தொறப்புக் குச்சி - சாவி

45. மண்டு விடுதல்- சிறுநீர் கழித்தல்

46. வெடுக்குனு = வெடுக்கெண்டு

47. என்றது = என்ர

48. உன்றது = உன்ர

49. அப்பச்சி = அப்பு அல்லது அம்மப்பா

50. அப்பாரு = அப்பு அல்லது அப்பப்பா

51. அமத்தா = ஆச்சி அல்லது அம்மம்மா

52. அப்பாத்தா = ஆச்சி அல்லது அப்பாச்சி

53. ஸோலி = சோலி

54.விசுக்குன்னு = விறுக்கெண்டு

55.பொசுக்குனு = பொசுக்கெண்டு

56. பொறவு = பிறகு, பேந்து

57.தொறப்பு = திறப்பு

58. வெசனம் = விசனம்

59. உட்கார் = அமர் (அமர்வது) கீழே அல்லது நாற்காலியில்

60. குச்சுக்கோ = உட்காரு (குழந்தைகளை உட்கார சொல்ல பயன்படும் சொல்)

61.குத்த வச்சு = உட்கார்வதில் ஒர் வகை (இந்திய வகை கழிவறைகளில் நாம் உட்காரும் வகை தான் இப்படி அழைக்கப்படுகிறது)

பொதுவான வார்த்தைகள்

1. வங்கு - பொந்து, சந்து

2. கம்மனாட்டி - முட்டாள், மடையன்

3. உருமாளை - தலைப்பாகை

4. சிம்மாடு - தலைப்பாகை.தலைப்பாகையில் இருந்து சற்று வேறுபட்டது. ஏதேனும் பொருளை தலையில் சுமக்கும் போது நழுவி விடாமல் இருப்பதற்காக துணியைச் சுற்றி வைப்பது.

5. கருப்பு - கருமாதி(ஈமச்சடங்கு)

6. அவுசாரி - விபச்சாரி

7. கட்டுக்கொலை - தன் சாதியைச் சார்ந்த நிகழ்வுகளில் பங்கு பெறும் மற்ற சாதிகள்.உதாரணமாக, கவுண்டர் இனத்தைச் சார்ந்தவர்கள் நாவிதர்கள், குயவர்கள் போன்றவர்களை கட்டுக்கொலைக்காரர்கள் என்பார்கள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள்(சக்கிலியர், பறையர்)

8. ஓரியாட்டம் -சண்டைசொற்றொடர்: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.

9. மிஞ்சி - மெட்டி

10. பொல்லி - பொய்.

11. அக்கட்ட - அந்தப் பக்கம்.அடுப்புக்கிட்ட நிக்காத. தீ மூஞ்சிலையே அடிக்குது. அக்கட்ட போடா.

12. இக்கட்ட - இந்தப் பக்கம்.இந்த வேச காலத்துல அக்கட்ட இக்கட்ட நகர முடியல.

13. வேச காலம் - கோடை காலம்

14. ராவுடி - டார்ச்சர்அந்தப் பையன் செம ராவுடி புடிச்சவன்.

15. ராங்கு - தவறாக நடத்தல்.ஏண்டா போலீஸ்காரங்கிட்ட ராங்கு பண்ணுனா அப்பாம என்ன முத்தமா கொடுப்பான்?

16. அப்பு - அறை.அவள ஓங்கி ஒரு அப்பு அப்புடா. மொகற கட்ட பேந்து போற மாதிரி.

17. மொகற கட்ட - முகம்

18. செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி

19. அக்கப்போரு - அட்டகாசம் இந்த பிலாக் எழுதறவிய அக்கப்போரு தாங்க முடியலைடா. :)

20. பொடனி - தலையின் பின்புறம்

21. முசுவு - கவனமாக/ குறிக்கோளுடன்குடுத்த வேலைய ஒரே முசுவுல செஞ்சு முடிச்சாதான் உங்கப்பனுக்கு தூக்கமே வரும்.

22. வல்லம் - மூன்று அல்லது நாலு படி அளப்பதற்கான அளவை. (கிட்டத்தட்ட 3.5 கிலோகிராம் வரும்)

23. அலும்பு - அலம்பல்.

24. அரமாலும் - ரொம்பவும். அரமாலும் அலும்பு பண்ணுறாடா அவ.

25. திலுப்பாமாரி - மேனா மினுக்கி

26. அட்டாரி - பரண்.

27. புழுதண்ணி - இரவில் மீதியான சோற்றில் நீர் ஊற்றி வைப்பார்கள். விடிந்த பின் அந்த நீர் புழுதண்ணி.

28. மக்காநாளு - அடுத்த நாள்

29. சீராட்டு - கோபம்.கட்டிக் கொடுத்து மூணுமாசம் கூட ஆகுல. அதுக்குள்ள புள்ள சீராடிட்டு வந்துடுச்சு.

30. அன்னாடும்- தினமும்

31. பால்டாயில் - பாலிடால் என்ற விவசாய பூச்சிக் கொல்லி.

32. ஒரு ஒலவு(உழவு) மல - ('ழ'கர உச்சரிப்பு இருக்காது)மழை பெய்யும் அளவை குறிப்பது.ஆட்டுக்கல் அல்லது உரலில் இருக்கும் குழி நிரம்பினால் ஒரு உழவிற்குத் தேவையான அளவு மழை பெய்திருக்கிறது என்று அனுமானம் செய்து கொள்வார்கள்.

33.அகராதி புடிச்சவன் - விதண்டாவாதம்/குறும்பு பிடித்தவன்.

வீடு அதன் சுற்றுப்புறம் சார்ந்த சொற்கள் :

1. இட்டாரி(லி) - இட்டேறி. வழித்தடம் , சிறிய பாதை , கிளைத்தடம்

2. நடவை - கதவு

3. சீமாறு, சீவமாரு, சீவக்கட்டை. - விளக்குமாறு

4. ஈக்குமாறு. - விளக்குமாறு , தென்னைமர குச்சியில் செய்தது (வீட்டுக்கு வெளியில் கூட்ட , பெருக்க பயன்படும்)

5. தொறப்புக்குச்சி - சாவி , திறவுகோல்

6. தொற - திற

7. தொரை - பெரிய துரை இவரு. (அதாவது ஒருவர் செய்யமுடியாத செயலைச் செய்ய எத்தனிக்கும் போது, விளிக்கப் பயன்படும் சொல்.)

8. எரவாரம் - ஓட்டு வீடுகளில் திண்ணைக்கு மேல் கைக்கைட்டும் இடத்தில் அகப்படும் இடுக்கு, தாள்வாரம்

9. தாவாரம் - தாழ்வாரம்

10. நீக்கு, கதவ நீக்கு – கதவைத் திற

11. அட்டாலி , அட்டாரி - பரண்

12. போசி - சிறிய (அ) அளவான பாத்திரங்கள்

13. சால் , அண்டா, சருவம் - தண்ணீர் ஊற்றி வைக்கப் பயன்படும் பாத்திரம்

14. ஒலக்கை - உலக்கை

15. மூலை. ஓரம் , இடுக்கு

16. கண்டரை- அடுக்கு

17. சலந்தாரை , சலவாரை , சலந்தாரி - தண்ணீர் செல்லும் பாதை

18. வள்ளம் , வல்லம் , படி - அளக்கப் பயன்படுவது . சிலசமயங்களில் ‘படி’ – வெண்கலத்தால் ஆனது , எச்சில் துப்பவும் பயன்படும்.

19. நெலவு - வாசற்படி கதவு

20. பொடக்காலி - வீட்டின் பின்புறம் , குளிக்குமிடம்

21. தேகுசா , தேவுசா - பாத்திரம்

22. தயிர் சிலுப்புதல் - தயிர் கடைந்து வெண்ணை எடுத்தல்

23. மத்து - ஒரு வகைக் கரண்டி , கடைவதற்குப் பயன்படுவது

24. பராத்து - மிகப் பெரிய தட்டு

25. வட்டல் - சாப்பிடும் தட்டு

26. அன்னவாரி. - சாதம் அள்ளிப்போட உதவும் கரண்டி , அன்னக்கரண்டி

27. முக்கு - முனை , திருப்பம்

28. ஓல்லு - நெல் , கம்பு குத்த பயன்படும் ஒருவகையான செக்கு

28. ஓர் ஒளவு - ஓர் உழவு (பெய்த மழையைக் குறிக்கும் சொல் )

29. சால்பரி - கோழிகளை மூடி வைக்கப் பயன்படுவது , தண்ணீர் இறைக்கவும் பயன்பட்டது

30. நடவை - கதவு

31. லாந்தர் - அரிக்கேன் விளக்கு. Lantern என்பது மருவி வந்து இருக்கலாம்

32. துப்புட்டு - போர்வை

33. தலவாணி - தலையணை

34. கால்மாடு - கால் வைக்கும் பகுதி

35. களம் - வாசல்

விவசாயம் சார்ந்த சொற்கள்

1. மக்கிலி (மக்கிரி ) - பெரிய கூடை

2. கலப்பை - ஏர்

3. கொலுவு - ஏர் முனை , கூரான ஆயுதம்

4. மம்முட்டி , மம்பட்டி - மண்வெட்டி

5. கொத்து - சிறிய மண்வெட்டி

6. மொளக்குச்சி - ஆடு மாடுகளைக் கட்ட நிலத்தில் அடிக்கும் மரத்துண்டு

7. சாளை. இரு வேறு பொருள் – வீட்டுக்கு வெளியில் தனியாக இருக்கும் சிறிய இடம்

8. கட்டுத்தரை - மாடு கன்றுகளை கட்டி வைக்கும் தொழுவம்

9. கொடாப்பு - பிறந்த மாட்டின் இளங்கன்றுகளை அடைத்து வைக்கப் பயன்படும் சிறிய ஓலை குடிசை

10. அண்ணாங்கால் - மாட்டின் வேகத்தை மட்டுப்படுத்த ஒரு கயிறை கழுத்தில் இருந்து காலோடு சேர்த்தி கட்டி விடுதல்

11. பால் கறத்தல் - பால் பீய்ச்சுதல்

12. உருவாஞ்சுருக்கு - ஆடு மாடுகளை காட்டும் போதும் இலகுவாக அவிழ்க்கும் படியும் , அதே சமயம் கழண்டு விடாதபடியும் போடப்படும் முடிச்சு

13. அண்ணாங்கயிறு - பால் கறக்கும் போது மாட்டின் கால்களைச் சேர்த்துக் கட்டும் கயிறு

14. பட்டி - ஆடுகளை அடைத்து வைக்குமிடம்

15. தொண்டுப்பட்டி - மாடு , கன்றுகள் இருக்குமிடம்

16. அணைதல் - மாலை நேரத்தில் கோழிகள் தூங்கச் செல்லுவதைக் குறித்தல்

17. கிடாரி - இளம் பெண் மாடு (கன்று ஈனுவதற்கு முன் )young

18. காளைக்குத் திரியுது, நசியம் , பயிராவுதல் - மாடுகள் கர்ப்பமாகுதல்

19. கடவு , கடவுப்படல். - தட்டி

20. தடுக்கு - தென்னை ஓலையில் செய்யப்படும் பாய்

21. பாவை - பாய்

22. மசை பிடித்தல் - வெறி பிடித்தல்

23. தட்டக்கூடை - கொஞ்சம் பெரிய அளவிலான வாய் அகன்ற கூடை

24. செம்பிலியாடு - நாட்டு ஆடு

25. வால்கவுறு. கவுறு – கயிறு . மஞ்சியினால் திரித்த கயிறு

26. மஞ்சி - தென்னை மட்டையில் திரித்தது

27. கவலை(ளை)யோட்டுதல் - மின்சாரம் வருவதற்கு முன்பு தண்ணீர் இறைக்கப் பயன்பட்டது

28. சேந்துதல் - இறைத்தல்

29. தரம்பு கட்டுதல் - கிளுவை நொச்சிக் கட்டைகளை வைத்துக் கட்டப்படும் படல்

30. மாறு - பொதுவாக குச்சியைக் குறிக்கும் சொல்

31. பரம்பு ஓட்டுதல் - பொதுவாக ஆற்றில் ஊத்து வெட்டி தண்ணீர் எடுப்பவர்கள் , ஆற்றில் நீர் ஓடி ஊற்றை சமன் செய்துவிட்டுப் போனபிறகு மீண்டும் மண்ணைத் தோண்டி ஊற்றாக மாற்றுவர். அந்த செய்கைக்குப் பெயர் ‘பரம்போட்டுதல்'

32. மொறம் - முறம்

33. கருக்கருவாள் - பொதுவாக சிறிய இலை , தழைகளை அறுக்கப் பயன்படுவது

34. கொடுவாள் - அரிவாள்

35. களத்துமேடு - வீட்டை விட்டு தனியாக இருக்கும் வாசல். பயிர் வகைகளை பிரித்தெடுக்கப் பயன்படுவது. சேமிப்புக்கும் உதவும்.

36. பாம்பேரி - கிணறு வெட்டியதில் இருந்து வெளிவந்த மண் அருகிலேயே ஏரி போல குவித்து வைக்கப்பட்டு மேடாக மாறி இருக்கும்

37. நப்பு - வற்றிக்கிடந்த கிணறு , நீரோட்டம் பெற்று ஊற ஆரம்பித்தால் , அருகில் ஏதாவது நீரோட்டம் ,நீர்த்தேக்கம் இருப்பின் அந்த நப்பு (தாக்கம்?) இங்க அடிச்சுடுச்சு என்பார்கள்

38. ஆத்துப் பாசனம் , கிணத்துப் பாசனம். முறையே விவசாயத்துக்கு நீர் எங்கிருந்து வருகிறது என்பதைக் குறிக்கும்

39. இடால் , கண்ணி. இரண்டும் மிருகங்களைப் பிடிக்க வைக்கப்படும் பொறி .

40. பெருக்கான் - பெருச்சாளி

41. ஓடைக்காய் - ஓணான்

42. நஞ்சு - பெரும்பாலும் விஷம் என்ற பொருள்தான் . ஆனால் , ஆடு மாடுகள் குட்டி /கன்று ஈன்ற பிறகு வெளிவரும் தொப்புள் கொடியைக் குறிக்கும்

43. பாத்தி கட்டுதல் - மண்ணை நடவு நாடா , தண்ணீர் பாய சீராக்குதல்

44. முருங்க்கா பொறிக்கிறாங்க - முருங்கை பறித்தல்

45. தண்ணி வெட்டி உடுறாங்க. வயல்களுக்கு - நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல்

46. வெள்ளாம, பண்ணாமை. வெள்ளாமை – விவசாயம்

47. முட்டுவழி - முதலீடு, முதல். ஒரு பயிர் விளைவிக்க ஆகும் மொத்த செலவு

48. மேட்டாங்காடு - வானம் பார்த்த பூமி

49. தாளி - ஆடு மாடுகள் தண்ணீர் குடிக்க உதவும்

50. போர் போடுதல் - விளைந்த கொடி , தட்டுகள் , இலை தழைகள் அனைத்தையும் சேமித்து வைக்கப் போடும் அரண்

51. தோட்டத்துல இருக்காங்க - பொதுவாக ஊருக்குள் குடியிருக்காமல் விவசாயம் செய்யும் நிலத்திலேயே வீடு கட்டி வாழ்வோரைக் குறிப்பது

52. கந்தாயம் , போக்கியம் , கிரயம். நிலத்தை விற்றல் /வாடகைக்கு விடுதல் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள்

53. பண்ணை - நீர் சேமித்து வைக்கும் தொட்டி

54. பண்ணையம் - நில உடைமைகள்

55. ரீப்பர் - வீடு கட்டப் பயன்படும் ஒரு வகைக் கட்டை/தப்பை

56. கடைமடை , கடக்கோடு - இறுதி/கடைசி

57. சும்மாடு - தலைப்பாகை

58. சுழி - மாட்டுக் கன்றுகளுக்கு தலையில் இருக்கும் முடி

59. குறுக்குச்சால் - பொதுவாக எந்தச் செயலையும் நன்றாக நடக்க விடாமல் கெடுத்து விடுவது .

60. கவண் - குருவிகளை விரட்டப் பயன்படுவது . கயிற்றில் செய்யப்பட்ட நடுவில் ஒரு கல் வைத்து வீசுமளவுக்கு அகலம் உள்ளவாறு அமைக்கப்பட்டது

61. பாங்கிணறு - தூர்வாரப் படாமல் தூர்ந்து போய்க் கிடைக்கும் பழைய கிணறு.

62. ஒடுக்கு - பனையோலையை வைத்து சாப்பிட பின்னப்படும் . ஒடுக்கஞ்சோறு என்று ஒரு பதமும் உண்டு.

63. கூமாச்சி - கூர்மையான பகுதி

64. பாட்டாளி - உழைப்பாளி

65. தொக்கடா - குறுக்குவழி

66. வெள்ளத்தாரை - நீர் போகும் பாதை

67. கிட்டி - வேலி தாண்டிப் போகும் ஆடுகளுக்கு கழுத்தில் கட்டி விடப்படும் ஒரு தப்பட்டை

உணவு சார்ந்த சொற்கள்

1. வனக்குதல் - தாளித்தல் 2. மொளவாட்டி கொழம்பு வைத்தல் - தேங்காய் , கொத்தமல்லி சேர்த்து விழுதாக அரைத்து விட்டு குழம்பு வைத்தல்

3. சீடை - அரிசி மாவால் செய்யப்படும் சிறிய சிறிய உருண்டைகளான இனிப்பு

4. தெலுவு. பனை - தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் பதநீர்

5. பானக்கம் - கருப்பட்டி கலந்து செய்யப்படும் இனிப்பு நீர்

6. கல்லக்காய் - வேர்க்கடலை

7. பொவியிலை - புகையிலை

8. குச்சிக்கிழங்கு - மரவள்ளிக்கிழங்கு

9. சீம்பு - மாடுகள் கன்று ஈன்ற பிறகு மூன்று நாட்களுக்கு கெட்டியாக வரும் பாலில் இருந்து செய்யப்படும் இனிப்பு. உப்பும் சேர்க்கலாம்

10. கண்டிக்கிழங்கு - சக்கரைவள்ளிக்கிழங்கு(?)

11. சுக்கு காபி. - சுக்கு, கொத்தமல்லி ஆகிவற்றை பொடி செய்து சுடுநீரில் சர்க்கரை கலந்து செய்யப்படும்.

12. அஸ்கா - வெள்ளை சர்க்கரை

13. கரும்புச் சக்கரை - வெல்லத்தை உடைத்துச் செய்யப்படும் சர்க்கரை /ஜாஃகிரி

14. புளி தண்ணி - கம்பு சோற்றில் மீதமுள்ள தண்ணீரில் உப்பிட்டு குடிப்பர்

15. கம்மஞ்சோறு - கம்பு சோறு

16. அம்புலி - சோளச்சோறு

17. பழைய சோறு - பொதுவாக காலையில் வயல் வேலைக்குச் செல்வோர் , அதிகாலையில் காலை உணவுக்கு முன்ன இரவு மீந்த சாப்பாட்டில் தண்ணீரோ , மோரோ கலந்து சாப்பிட்டுவிட்டு செல்லுவர். அது ‘பழைய சோறானது’

18. கச்சாயம் - அதிரசம்

19. ஒப்பிட்டு - போளி

20. ஓனவா , ஒனத்தியா - வக்கனையா, நாக்கிற்கு ருசியாக

21. சீப்பை - பனங்கொட்டைகளை மண்ணில் புதைத்து வைத்து குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு , வெளியில் எடுத்தால் நடுவில் வெள்ளையாக இனிப்பானதாக நுங்கு மாறியிருக்கும்

22. பனங்கிழங்கு - பனங்கொட்டைகளை மண்ணில் புதைத்து வைத்து வளரவிட்டு கிழங்கை எடுத்து உப்புப் போட்டு வேக வைத்து சாப்பிடுவது

23. கோசக்காய் - தர்பூசணி

24. நவாப்பழம் - நாவல்பழம்

25. சந்தவை - இடியாப்பம்

26. கொள்ளுப்பருப்பு , கொள்ளு ரசம் - கொள் பயிரை வைத்து செய்யப்படும் துவையல் , ரசம்

27. பருப்புச் சாப்பாடு - அரிசி , பருப்பு சாதம்

28. வெள்ளாங்பூண்டு - வெள்ளை பூண்டு

28. சீமெண்ணை - மண்ணெண்ணெய்

29. சுண்டப்பருப்பு - முந்தைய நாள் வைத்த பருப்பை , இரண்டு அல்லது ஒரு நாள் கழித்தோ மீந்து போனால் , அடுப்பில் நன்றாக சுண்ட வைத்து சாதத்துக்குப் பிசைந்து சாப்பிடுவர்

30. ஊனு - சாப்பிட்ட தட்டில் மிச்சமிருக்கும் கடைசி கலவை

31. ராய்க்கூழு - கேழ்வரகுக் காஞ்சி

32. ரக்கிரி(லி) - கீரை

33. கருஞ்சுக்கிட்டித்தழை - மணத்தக்காளிக்கீரை

பண்டிகை சார்ந்த சொற்கள்

1. நோம்பி (ஆடி நோம்பி) - நோன்பு என்பதன் திரிபு. ஆனால் எல்லாப் பண்டிகைகளுக்கும் நோம்பி என்றே சொல்லுவது வழக்கம்.

2. போக்குவரத்து - திருமணம் நிச்சயிக்கப்படும் முன் அதே சமயம் உறுதியான பின்பு நடத்தப்படும் வைபவம். (வாங்க பழகலாம் முறையில்)

3. தெரட்டி - பூப்பு நன்னீராட்டு விழா

4. கட்டுசாதவிருந்து - மாதமாக உள்ள பெண்களுக்கு உறவினர்கள் சேர்ந்து விருந்து வைத்தல்

5. அடசல் - பொதுவாக சாமிக்கு நேர்ந்து கொண்ட கோழிகளை படைத்து விருந்தளிக்கும் முறையைக் குறிக்கும்

6. சாவக்கட்டு - சேவல் சண்டை

7. பொட்லி - கோவில்களில் வேண்டுதலின் பொருட்டு நிறைவேற்றப்படும் எழுப்பப்படும் வேட்டுச்சத்தம்

8. தண்டல்- தப்பாட்டம்

9. வான(ண)ம் உடுதல் - கோவில்களில் பூஜை நேரத்தில் விடப்படும் வெடி

10. தீர்த்தத்துக்குப் போறது - எந்தக்கோவிலிலும் விஷேஷம் இருப்பின் அருகில் உள்ள காவிரி ஆற்றிக்குச் சென்று நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தல்

11. தீர்த்தம் முத்தரித்தல் - தீர்த்தத்துக்குப் போய்விட்டு வந்தபிறகு அந்த நீரை ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வதைக் குறிக்கும்.

12. மலையேறிடுச்சு - பொதுவாக சாமி வந்தவர்கள் தன்னிலைக்கு வருவதைக் குறிப்பிடும் சொல்

13. எழுதிங்கள் - திருமணமான , பெண் குழந்தைகள் பெற்ற பெண்களுக்கு நடத்தப்படும் சீர்

14. அருமைக்காரர் - திருமண சடங்கை , சீர்களை முன்னின்று நடத்தி வைப்பவர்

15. ஒருசிந்தி (சந்தி) - விரதம் இருத்தல்

16. கிழமை பிடித்தல் - பொதுவாக வெள்ளிக்கிழமை , சனிக்கிழமை காலையில் குளித்துவிட்டு குறிப்பிட்ட தெய்வங்களுக்கு பூஜை செய்துவிட்டே பிற வேலைகளைச் செய்வது. மற்றபடி எல்லாக் கிழமைகளுக்கு பொருந்தும்

17. புண்ணியாச்சினை - புதுமனைப் புகுவிழா . பொதுவாக எந்த ஒரு நல்ல காரியத்தைத் தொடங்குவதற்கும் செய்யப்படும்

18. புள்ளார் - பிள்ளையார்

19. வாக்கு கேட்டல் - சாமியாடுபவர்கள் சொல்லும் குறி

20. சாமிக்கு விடுதல் - கடவுளுக்காக சேவல்கள் மற்றும் ஆடுகளை தியாகம் செய்வது

இரா.வெங்கடேசன். "தமிழில் வட்டார வழக்குச்சொல் அகராதி உருவாக்கம்" (ta-in).

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொங்குத்_தமிழ்&oldid=3721656" இலிருந்து மீள்விக்கப்பட்டது