பேச்சு:கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்றம் செய்த வல்லுநர் வையாபுரிப்பிள்ளை போன்ற அறிஞர்களைக் கருதியிருக்க வேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 00:50, 10 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஓலைச்சுச்வடியையே உங்களுக்குக் காட்டுகிறேன். பார்த்துப்படித்துத் தெரிந்துகொள்ளவும்.

//வையாபுரிப்பிள்ளை போன்ற அறிஞர்களைக் கருதியிருக்க வேண்டும்.//

அவர் யார் சொன்னதை வைத்து எழுதினார்? கீழுள்ள ஓலைச்சுவடியில் இரண்டாவது வரியின் தொடக்கம் முதல் பாருங்கள்.

கொற்றனை கருவூர்க்கந்தப்பிள்ளை சாத்தனார்......'

எனத் தொடங்குவதைப் பார்க்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:00, 10 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஓலைச்சுவடி இணைப்பு.[1]

  • தாங்கள் காட்டிய சுவடி அகநானூற்றுப் பாடல் கொண்ட சுவடி.
  • இதில் தாங்கள் திருத்தியவாறு உள்ளது என்பது கட்டுரையில் முன்பே காட்டப்பட்டுள்ளது.
  • வையாபுரிப்பிள்ளை பிற நூல்களின் பதிப்புக்கு எந்தெந்த ஓலைச்சுவடிகளை ஒப்புநோக்கியுள்ளார் என்பது அவரது நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தாங்கள் அகநானூறு பாடல் குறிப்பைப் பின்பற்றியிருக்கிறீர்கள்.
  • இருக்கட்டும்.
  • உங்கள் கருத்தை நான் மாற்றவில்லையே.
  • ஏற்றுத்தானே கட்டுரையில் செப்பம் செய்திருக்கிறேன்.
  • ஓலைச் சுவடிகளை ஒப்புநோக்கும் அளவுக்கு நம் விக்கியில் பயனர் ஒருவர் இருக்கிறார் என்பது பெருமைப்படத்தக்க செய்தி.
  • அகவை மூப்பால் வாழ்த்தி மகிழ்கிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 21:07, 14 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஓ அது இன்னொரு பாடலா? அதுக்கும் பார்த்துவிட்டு சொல்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:28, 14 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]