பேச்சு:கஞ்சிரா கலைஞர்கள்
பெயர்களுக்கு முன் உயர்திரு போன்ற பட்டங்கள் தேவையா? தேவையில்லை என்பது என் கருத்து. தேவை என்று கருதும் பிற பயனர்கள் எந்தெந்த இடங்களில் இதைப் பயன்படுத்துவது என்று நடைக்கையேட்டில் பரிந்துரைக்கவும் --ரவி 11:00, 4 ஜூலை 2006 (UTC)
- திரு என்று அடைமொழி கொடுத்தாலே போதும் என்றுதான் நினைக்கிறேன். இசை உலகில் இவர்களை ஸ்ரீ என்று அடைமொழி கொடுத்து அழைக்கின்றனர். --C.R.Selvakumar 11:08, 4 ஜூலை 2006 (UTC)செல்வா
திரு உள்ளிட்ட எவ்வித அடைமொழிகளையும் கூட யாருக்கும் தர வேண்டாம் என நினைக்கிறேன். அனைவரும் மனிதரே. சந்தனக் கடத்தல் வீரப்பனாயிருந்தாலும் பெரிய புலவராயிருந்தாலும் ஒரே விதமாகத் தான் கலைகளஞ்சியத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது என் கருத்து. பெயரை மட்டும் குறிப்பிடுவதால் எவ்வித மரியாதை குறைவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளை சிறீ உள்ளிட்ட அடைமொழிகள் அவர்கள் பெயருடன் ஒட்டிக் கொண்டிருந்தாலும் (எ.கா. சிறீ சிறீ ரவிசங்கர்), கட்டுரையில் ஒரே ஒரு முறை மட்டும் அவர் இவ்வாறு பொதுவாக அழைக்கப்ப்டுகிறார் என்று குறிப்பிடலாம்.--ரவி 09:23, 6 ஜூலை 2006 (UTC)