பேச்சு:அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)
மிக்க நன்றி மயூரநாதன். இச்சொற்கள் தொடர்பாக குளப்பத்தில் இருந்தேன். உங்கள் விளக்கம் மிகவும் எளிமையாகவும், திறனாகவும் இருக்கின்றது. குறளடி தனியே கொண்ட பாடல்கள் சில பகிர்வீர்களா? திருக்குறள் குறளடியை பின்பற்றவில்லைதானே? --Natkeeran 22:14, 17 ஜனவரி 2006 (UTC)
நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்தும், சுந்தரம்பிள்ளையின் மனோன்மணீயத்தில் இருந்தும் எடுக்கப்பட்ட சில குறளடிகளால் அமைந்த பாடல்களக் கீழே காண்க.
திருவாய்மொழி
- கண்ணன் கழலிணை
- நண்ணும் மனமுடையீர்
- எண்ணும் திருநாமம்
- திண்ணம் நாரணமே
- தானே உலகெலாம்
- தானே படைத்திடந்து
- தானே உண்டுமிழ்ந்து
- தானே யாள்வானே
- அமரர்க்கு அரியானை
- தமர்க்கு எளியானை
- அமரத் தொழுவார்க்கு
- அமரா வினைகளே
மனோன்மணீயம்
(குறளடி வஞ்சிப்பா)
- நந்தாய்தமர் நங்காதலர்
- நஞ்சேய்பிறர் நந்தாவரை
- நந்தேயமேல் வந்தேனி
- நொந்தாழ்துயர் தந்தேஇவண்
- நிந்தாநெறி நின்றாரிவர்
- தந்தாவளி சிந்தாவிழ,
- அடிப்போமடல் கெடுப்போமுகத்
- திடிப்போங்குட லெடுப்போமிடுப்
- பொடிப்போஞ்சிர முடைப்போம்பொடி
- பொடிப்போம்வசை துடைப்போமுயிர்
- குடிப்போம்வழி தடுப்போம்பழி
- முடிப்போமினி நடப்போம்நொடி.
Mayooranathan 08:13, 19 ஜனவரி 2006 (UTC)
சரியா[தொகு]
குறளடி - இரண்டு சீர்கள் கொண்டது. சிந்தடி - மூன்று சீர்கள் கொண்டது. அளவடி - நான்கு சீர்கள் கொண்டது. நெடிலடி - ஐந்து சீர்கள் கொண்டது கழி நெடிலடி - ஆறு, ஏழு அல்லது எட்டு சீர்களைக் கொண்டது. இடையாகு கழி நெடிலடி - ஒன்பது அல்லது பத்து சீர்களைக் கொண்டது. கடையாகு கழி நெடிலடி - 11 முதல் 16 வரையான எண்ணிக்கைகளில் சீர்களைக் கொண்டது.
என்று எழுதியுள்ளீர்கள்.
ஆனால்
குறளடி - இரண்டு அடிகளைக் கொண்டது.
சிந்தடி - மூன்று அடிகளைக் கொண்டது. அளவடி - நான்கு அடிகளைக் கொண்டது. நெடிலடி - ஐந்து அடிகளைக் கொண்டது கழி நெடிலடி - ஆறு, ஏழு அல்லது எட்டு அடிகளைக் கொண்டது. இடையாகு கழி நெடிலடி - ஒன்பது அல்லது பத்து அடிகளைக் கொண்டது. கடையாகு கழி நெடிலடி - 11 முதல் 16 வரையான எண்ணிக்கைகளில் அடிகளைக் கொண்டது.
என்று இரு்க்வேண்டும் எண்ணுகின்றேன் . சரியா?
அன்பன்: ந.மோகனசுந்தரம்.