பேச்சியம்மன் கோயில், மதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேச்சி அம்மன் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பேச்சியம்மன் கோயில், மதுரை நகரத்தின் சிம்மக்கல் பகுதியில், வைகை ஆற்றின் தென்கரையில், பேச்சியம்மன் படித்துறையில் அமைந்துள்ளது. [1]

கோயிலின் சிறப்பு[தொகு]

இக்கோயிலில் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12 மணிக்கு பேச்சியம்மனை நினைத்து மண் விளக்கு ஏற்றினால் பெண் சாபம் விலகும் மோட்சம் கிட்டும்

வேண்டுதல்கள்[தொகு]

  • பேச்சில் குறைபாடு உள்ளவர்களும், பேச்சுத்திறமை வேண்டுபவர்களும் பேச்சி அம்மனை வழிபட்டால், பேச்சு குறைபாடு நீங்கி பேச்சுத்திறமை வளரும் என்பது நம்பிக்கை.
  • ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகருக்கு அபிஷேக, அர்ச்சனை செய்தால் தோசம் நீங்கும்.

சன்னதிகள்[தொகு]

பேச்சியம்மன் கோயிலில் விநாயகர், முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், மகாலட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, காளி, துர்க்கை, தத்தாத்ரேயர், ஆஞ்சநேயர், நவகிரகம், கருப்பசாமி, இருளப்பசாமி, அய்யனார், வீரமலை, பெரியண்ணன், சின்னண்ணன், சப்த கன்னியர் ஆகியோரை ஒரே இடத்தில் வழிபடலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பேச்சியம்மன் கோயில்

வெளி இணைப்புகள்[தொகு]