பெருஞ்சேரல் இரும்பொறை, தகடூர் எறிந்தவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில் கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார்.

தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் 'தகடூர் எறிந்த' என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர், துயில் கலையும் வரை, கவரி வீசினான் இவன், என்று புகழப்படுகிறான்[1]..

கருவூரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது[2].

இவனை

  • குட்டுவன் இரும்பொறை [3]
  • சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை [4]
  • தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை [5]
  • பூழியர் மெய்ம்மறை [6]
  • கொடித்தேர்ப் பொறையன் [7]
  • இயல்தேர்ப் பொருநன் [8]
  • கோதை மார்பன் [9]

ஆகிய வேறு பெயர்களிலும் குறிப்பிடுகின்றனர்.

வரலாறு[தொகு]

அரிசில் கிழார் இவனைப் பாடிய 10 பாடல்கள், 'பதிற்றுப்பத்து' நூலில், 8-ம் பத்தாக உள்ளன.

நாடு[தொகு]

  • அரிய பொருள்களை இறக்குமதி செய்யும் கொடுமணம் என்னும் துறைமுகமும், முத்துக்குப் பெயர்போன பந்தர் நகரமும், இவன் நாட்டில் இருந்தன. [10]

வெற்றிகள்[தொகு]

  • அதியமானையும் இருபெரு வேந்தர்களையும், கொல்லி மலை நீர்கூரில் நடந்த போரில் வென்று, அவர்களது முரசையும் குடையையும் கைப்பற்றிக்கொண்டான். [11]
  • அதியமானின் தகடூரையும் கைப்பற்றிக்கொண்டான். [12] [13]
  • தோட்டி நகரைக் கைப்பற்றினான். [14]
  • கழுவுள் என்பவனின் தலைநகரைப் பாழாக்கினான். [15]
  • இவனது போர்ப்படை யானைகள், கொங்கர் மேய்க்கும் ஆனிரைகள் போல மிகுதி. [16]
  • இவனது போர்க் குதிரைகள், இவன் நாட்டில் மேயும் ஆடுகள் போல் மிகுதி. [17]

இவனுக்குப் புலவர் அறிவுரை[தொகு]

  • அறிந்தவர்களையும் (உரவர்), அறியாதவர்களையும் (மடவர்) எண்ணிப்பார்த்துச் செயல்படவேண்டும். [18]
  • உன் முன்னோரின் வலிமையை உணர்ந்தவர்கள், உன் வலிமையை உணரவில்லை. அறிந்து செயல்படுக. [19]

மகன்[தொகு]

  • வீறுசால் புதல்வன் இவனுக்கு உண்டு,Peyar Padhuman. [20]

கொடை[தொகு]

  • தன்னிடம் இரப்பவர்களுக்கு வழங்கும்போது, முன்பே இரந்தவர்கள் வாழ்வுக்காகச் சேர்த்துத் தடையின்றி வழங்கினான். [21]

வாழ்த்து[தொகு]

  • புலவர் இவனை அயிரை மலை போல், நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். [22]

குணநலன்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. புலியூர்க் கேசிகன், பக். 333
  2. டான் பொஸ்கோ
  3. பதிற்றுப்பத்து, பதிகம் 9
  4. மோசிகீரனார் புறம் 50
  5. பதிற்றுப்பத்து, பதிகம் 8
  6. பதிற்றுப்பத்து 73
  7. பதிற்றுப்பத்து 73
  8. பதிற்றுப்பத்து 75
  9. பதிற்றுப்பத்து 79
  10. பதிற்றுப்பத்து 74
  11. பதிற்றுப்பத்து, பதிகம் 8
  12. பதிற்றுப்பத்து 78
  13. பதிற்றுப்பத்து, பதிகம் 8
  14. ஆர் எயில் தோட்டி வௌவினை பதிற்றுப்பத்து 71
  15. பதிற்றுப்பத்து 71
  16. பதிற்றுப்பத்து 77
  17. பதிற்றுப்பத்து 78
  18. பதிற்றுப்பத்து 71
  19. பதிற்றுப்பத்து 72
  20. பதிற்றுப்பத்து 74
  21. பதிற்றுப்பத்து 76
  22. பதிற்றுப்பத்து 79
  23. பதிற்றுப்பத்து 79

உசாத்துணைகள்[தொகு]