பெரி. சிவனடியார்
பெரி. சிவனடியார் (7 செப்டம்பர் 1929 - 19 மார்ச் 2004) தமிழகக் கவிஞர் ஆவார். பொன்னி எனும் இலக்கிய இதழ் இவரை பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர் என அறிமுகப்படுத்துகிறது.[1]
பிறப்பும் இளமையும்
[தொகு]சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிராமத்தில் பெரியண்ணன்-விசாலாட்சிக்கு மகனாக 1929 ஆம் ஆண்டு, செப்டம்பர் 7 ஆம் நாளில் பிறந்தார். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் பள்ளிப் பருவம் முதலாகவே கவிதை எழுதும் ஆர்வம் கொண்டவர். தம் வாழ்நாளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட கவியரங்குகளில் பங்குப் பெற்றுள்ளார்.
தமிழ்ப் பணிகள்
[தொகு]மதுரை (1981), தஞ்சாவூர் (1995) ஆகிய இடங்களில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் பங்கு பெற்றியுள்ளார். வடமொழி செல்வாக்கிலிருந்தும் இந்தி ஆதிக்கத்திலிருந்தும் தமிழ் மீட்சி இயக்கத்திற்குப் பாட்டு எழுதிய பலருள் இவர் பாட்டும் பலரால் பாராட்டப்பெற்றுள்ளது.[2] வான்மதி, அன்புதென்றல், பொன்னி, மாதவி, தமிழ்ச்செய்தி, கண்ணதாசன் உள்ளிட்ட பல இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார்.
படைப்புகள்
[தொகு]கவிதை நூல்கள்
[தொகு]- கனிக்குவியல்
- முருகாஞ்சலி
- சக்தி சரணங்கள்
- சக்தியும் மைந்தனும்
- பரமகுருசுவாமி பதிகம்முதலிய பல.
நாடகம்
[தொகு]- அவளுக்காக
பட்டங்கள்
[தொகு]- திருப்பனந்தாள் பாவலர் மன்றம் - சிந்தனைக் கவிஞர்
- மதுராந்தகம் குருபழநி ஆதீனம் - கவிஞரேறு
- தமிழக அரசு இவருக்கு 1985 இல் திருக்குறள் நெறித்தோன்றல் எனும் விருதினையும்,1991 இல் பாவேந்தர் விருதினையும் அளித்துள்ளது.
பெற்ற பாராட்டுகள்
[தொகு]கண்ணதாசன் இவர் கவித்திறனைப் பாராட்டி ஒரு பாடல் இயற்றியுள்ளார். அப்பாடல்:
- சிவனடியான் சிவனடியான் என்கின் றாரே'
- சிவனுக்கோ இவனடியான் இல்லை இல்லை
- இவன்பாடும் பாடல்களைச் சிவனும் கேட்பான்
- என்பதனால் இவனுக்கே சிவன் அடியான்
என்பதாகும்.
இறப்பு
[தொகு]2004 ஆம் ஆண்டு, மார்ச் மூன்றாம் நாளன்று இவர் இறந்தார்.