பெரியமுத்தூர் செல்லியம்மன் கோயில்
அருள்மிகு செல்லியம்மன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கிருஷ்ணகிரி |
அமைவிடம்: | பெரியமுத்தூர், கிருஷ்ணகிரி வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
மக்களவைத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
கோயில் தகவல் | |
தாயார்: | செல்லியம்மன் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
பெரியமுத்தூர் செல்லியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியமுத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு கிராமக் கோயிலாகும்.[1]
வரலாறு
[தொகு]இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.
கோயில் அமைப்பு
[தொகு]செல்லியம்மன் கோயிலானது பெரியமுத்தூரில் உள்ள கிருட்டிணகிரி அணை மதகின் அருகில் உள்ள ஒரு சிறு குன்றின் அருகில் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு பதினாறு படிகள் ஏறிச் செல்லவேண்டும். கோயில் கருவறையில் இருகைகளிலும் கலசம் ஏந்திய வடிவில் செல்லியம்மன் உள்ளார், கோயிலின் மறுபக்கம் தெண்பெண்ணையாற்றுப் பாசனக் காலவாயில் எப்போதும் நீர் சலசலத்து ஒடுகிறது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
[தொகு]இக்கோயிலில் கிராம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. நவராத்திரி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. ஆடி 18 பெருக்கு மாதம் திருவிழா நடைபெறுகிறது. பெரியமுத்தூர் கிராம மக்களால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடத்தப்படுகிறது. பதினாறு ஆண்டுகளுக்கு ஒரு முறை கரகம் எடுக்கும் திருவிழாவு நடத்தப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
- ↑ திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. pp. 34–37.
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: year (link)