பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரியகுளம் பாலசுப்பிரமணியன் சுவாமி கோயில் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் பெரியகுளத்தில் வராகநதிக்கரையில் உள்ள ஒரு இந்துக் கோவில் ஆகும். இது பரப்பளவில் பெரிய கோவில் ஆகும். இங்கு மூன்று முக்கிய சன்னதிகள் இருக்கின்றன. நடுவில் கம்பீரமாக இருப்பது இராசேந்திரசோழீஸ்வர் சன்னதி. அங்கே சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.  சிவபெருமானுக்கு வலப்புறம் அறம் வளர்த்த நாயகியும் இடப்புறம் வள்ளி தெய்வானையுடன் கூடிய பாலசுப்பிரமணியன் சுவாமியும் வீற்றிருக்கின்றனர். இயற்கைஎழில் மிகுந்த இத்திருத்தலம் பெரியகுளம் புதியபேருந்துநிலையத்தில்இருக்கும் சுமார் 1கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கோவிலில் ஒரே நாளில் பல திருமணங்கள் நடைபெறும். அருகில் அழகுநாச்சியம்மன் திருத்தலம் உள்ளது.