பூப்பெயர் புணர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் பூப்பெயர்கள் பிற சொற்களுடன் இணைவதைப் பூப்பெயர் புணர்ச்சி எனப்படும்.

நன்னூல் விதி (200)[தொகு]

"பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும்"

விளக்கம்[தொகு]

மேற்காணும் விதியில் முதலில் இனமென்மையும் என்ற சொல்லில் அமையும் 'உம்' என்ற சொல் பூப்பெயர் புணர்ச்சியில் மெல்லின எழுத்துக்களும் அமையும் என்ற கருத்தைக் மையப்படுத்துகிறது அதன்படி பூ+கொடி என்பது பூக்கொடி என வல்லொற்றைக் கொண்டு புணரும் மேற்காணும் விதிப்படி பூங்கொடி என மெல்லின மெய்யுடன் புணர்வதை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

பிற எடுத்துக்காட்டுகள்[தொகு]

பூ+சோலை = பூஞ்சோலை

பூ+காற்று = பூங்காற்று

பூ+சாணம் = பூஞ்சாணம்

பூ+செடி = பூச்செடி

கருவி நூல்[தொகு]

நன்னூல் மூலமும் விருத்தியுரையும் (அ.தாமோதரன் அவர்களின் பதிப்பு) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூப்பெயர்_புணர்ச்சி&oldid=3506956" இலிருந்து மீள்விக்கப்பட்டது