உள்ளடக்கத்துக்குச் செல்

பூநகர் அன்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூநகர் அன்னை

பூநகர் அன்னை (வார்ப்புரு:Lang-cham, வியட்நாமியம்: Thiên Y A Na) என்பது வியட்நாமியரும் சாம் மக்களும் வணங்கும் ஒரு தெய்வம் ஆவாள். இவர் வியட்நாம் நாட்டின் காங் ஹோவா மாகாணத்தில் (Khánh Hòa Province) உள்ள நாச்சாங்க் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற "பூ நகர் பகவதி கவுதரேசுவரி ஆலயம்" (Po Nagar Cham Towers) எனும் கோவிலில் வழிபடப்படுகின்றார். இரு இனங்களிலும் இத்தெய்வத்தைப் பற்றிய பல்வேறு தொன்மங்கள் காணப்படுகின்றன. வரலாற்றில் தெற்குத் திசைக்கு விரிவடைதலும் கலாசார ஒருங்கிணைப்பும் மூலம், பூநகர் அன்னை பின்னர் வியட்நாமியத் தாய்தேவியாரின் வழிபாட்டில் ஒரு பரிசுத்தத் தாய் (Thiên Y A Na)யாக இணைக்கப்பட்டார், மத்திய வியட்நாம் பகுதிகளைக் காக்கும் தெய்வமாகக் கருதப்படுகிறார். Nguyen வம்சம் காலத்தில், Thiên Y A Na அதிகாரப்பூர்வமாக Thượng đẳng thần (உயர்ந்த தெய்வங்கள்) வரிசையில் சேர்க்கப்பட்டார். 그녀வின் கோவில்கள் தென் மத்தியக் கடற்கரைப் பகுதிகளில் இருந்து தெற்கு வியட்நாம் வரை பரவியுள்ளன; அவர் நிலத்தையும் மக்களையும் பாதுகாக்கும் தேவியாக வணங்கப்படுகிறார்.[1]

சாம் மக்களின் தொன்மம்

[தொகு]

காங்க் ஃகோவாவின் மலைப்பிராந்தியத்தில் வாழ்ந்த விவசாயக்] குடும்பமொன்றில் அவதரித்தாள் பூநகர் அன்னை. சந்தனமரத் துண்டொன்றில் அவள் கடலில் அலைக்கழிக்கப்பட்டபோது, தேவதைகளின் உதவியுடன் சீனாவைச் சென்றடைந்தாள். அந்நாட்டு மன்னனை மணந்து சம்பாவின் இளவரசியாக முடிசூடிக்கொண்ட பூநகர் அன்னை, இருகுழந்தைகளுக்கும் தாயானாள்.[2] அவள் மீண்டும் தன் பெற்றோரைக் காண மலைப்பிராந்தியத்துக்குச் செல்ல முயன்றபோது அவள் கணவன் தடுத்தான். எனினும் அவள் தன் இருகுழந்தைகளுடன் மீண்டும் சந்தன மரத்தில் மிதந்து தன் பெற்றோரைச் சென்றடைந்தாள். சீன மன்னன் அவளை விடாமல் பின் தொடர்ந்தபோது சீற்றமுற்ற அவள், தன் கணவனையும் அவனது கப்பற்படையையும் கல்லாக மாறுமாறு தீச்சொல்லிட்டாள்.[3] பூநகர் அன்னையின் தொன்மம், ஓரளவு புராணக்கதையுடன் ஒத்துச் செல்வது இங்கு நோக்கத்தக்கது.

இன்னொரு மரபுரை தொண்ணூற்றேழு கணவரும் முப்பத்து நான்கு குழந்தைகளும் கொண்டவளாக அவளைச் சித்தரிப்பதன் மூலம், தாய்வழிச் சமூகத்தின் பெரும் குடும்பமொன்றின் தலைவியாக அவள் விளங்கியதைக் குறிக்கின்றது.[4] கடல்நுரைகளுக்கும் மேகங்களுக்கும் மகளாக அவதரித்த பூநகர் அன்னையே அரிசியைத் தம்மண்ணுக்குக் கொணர்ந்தவள் என்றும், சோற்றுமணம் கமழும் இடங்களெல்லாம், அவள் குடிகொண்டிருக்கின்றாள் என்றும் சாம் மக்களின் மூதிகம் சொல்லும்.

வியட்நாமியத் தொன்மம்

[தொகு]
பூநகர்க் கோயில்,வியட்நாம்

சாம் மக்கள் வியட்நாமியரால் வீழ்த்தப்பட்டு, வியட்நாம் தோற்றம் பெற்றதுடன், சாம்களின் பூநகர் அன்னையும் வியட்நாமியரின் தெய்வமாக மாறினாள். வியட்நாமியரால் தியென் வையனா என அழைக்கப்பட்ட பூநகரன்னைக்கென்று, புதிய தொன்மங்களும் உருவாக்கப்பட்டன. கன்பூசிய நெறியரான வியட்நாமியர், சாமர் பூநகருக்குக் கொடுத்திருந்த பழங்குடி இயல்புகளை நீக்கி, என்றென்றும் வாழும் தெய்வீகப் பிறப்பாக - பௌத்த துறவினியாகச் சித்தரித்தனர்.

ஆலயங்கள்

[தொகு]

பூநகர் அன்னையின் முதன்மையான ஆலயம், "பூ நகர்" என்றே அழைக்கப்படுகின்றது. அங்கு வீற்றிருக்கும் அன்னை, சிவ-சக்தி இணைவைச் சுட்டுவதாகச் சொல்லப்படுகின்றது.' எனினும் இளங்கன்னியாக இல்லாமல், சுருக்கம் விழுந்த தோற்றத்துடன், மூ்தாட்டியொருத்தி போல் காட்சிதரும் பூநகரன்னை, தான் பழைமைவாய்ந்த அன்னைத்தெய்வம் என்பதற்கு சான்றாகின்றாள்.[5] "தாவோ மௌ" என்றழைக்கப்படும் வியட்நாமிய அன்னைத்தெய்வ வழிபாட்டினர், அவளது ஆலயங்களுக்குப் பாதயாத்திரை செல்வதும், வெறியாட்டு மூலம் குறிகேட்பதும் என்று பக்திபூர்வமாக பூநகர் அன்னையை வழிபட்டு வருகின்றனர்.

மேலும் காண

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. Barbara Watson Andaya (2006). The Flaming Womb: Repositioning Women in Early Modern Southeast Asia. University of Hawaii Press. pp. 335. ISBN 9780824829551.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; cha என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. J. Hackin, Paul Louis Couchoud (2005). Asiatic Mythology 1932. Kessinger Publishing. pp. p. 226. ISBN 1-4179-7695-0. {{cite book}}: |pages= has extra text (help)
  4. Anne Walthall (2008). Servants of the Dynasty: Palace Women in World History Volume 7. University of California Press. pp. p. 226. ISBN 9780520254442. {{cite book}}: |pages= has extra text (help)
  5. Combs follow GS. Tran Quoc Vuong Historically (வியட்நாமியம்), Culture Publishing House, 1996, p. 551-552.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூநகர்_அன்னை&oldid=4404371" இலிருந்து மீள்விக்கப்பட்டது