பூதம்புல்லனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூதம்புல்லனார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 190 ஆகும்.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

அவர் செய்பொருட்கு அகன்றார்.
என் கூந்தல் வாரி முடிக்காமல் என் தோளோடு கிடக்கிறது. ஆனால் வளையல் மட்டும் தோளிலிருந்து கழல்கிறது. இதனை அவர் அறிவார்.
அவர் இதனையும் அறிவார். பாம்பு படமெடுத்து ஆடும்போது இடி இடித்தால் அதன் படம் தானே சுருங்கிவிடும்.
அரிமா நடமாட்டம் தெரிந்தால் பாதுகாப்பில் இருக்கும் பசுவின் மணியொலி கேட்கும். அதனைக் கேட்டுக்கொண்டு அவள் உறங்காமல் கிடப்பாள் என்பதும் அவருக்குத் தெரியும். (அவர் சொன்ன இடிமுழக்கக் காலம் வந்துவிட்டதே! திரும்பவேண்டுமே! என்பது மட்டும் அவருக்குத் தெரியவில்லை - என்று தலைவி நினைக்கிறாள்.)


ஒரு கவிஞர் பற்றிய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூதம்புல்லனார்&oldid=3633649" இலிருந்து மீள்விக்கப்பட்டது