புருதுராஜு ராமராஜு
புருதுராஜு ராமராஜு | |
---|---|
![]() புருதுராஜு ராமராஜு | |
பிறப்பு | வாரங்கல் மாவட்டம், ஐதராபாத் இராச்சியம் (தற்போதைய தெலங்காணா), இந்தியா | 16 ஏப்ரல் 1925
இறப்பு | 8 பெப்ரவரி 2010 ஐதராபாத்து (இந்தியா), ஆந்திரப் பிரதேசம் (தற்போதைய தெலங்காணா), இந்தியா | (அகவை 84)
புருதுராஜு ராமராஜு (Biruduraju Ramaraju) (16 ஏப்ரல் 1925-8 பிப்ரவரி 2010) என்பவர் ஒரு இந்திய எழுத்தாளரும் அறிஞரும் பேராசிரியரும் ஆவார். இவர் தெலுங்கு மொழி நாட்டுப்புறக் கதைகளைப் ஆராய்ந்ததற்காக நன்கு அறியப்பட்டவர்.
ராமராஜு இந்து தேசியவாத அமைப்புகளிலும் தீவிரமாக இருந்தார். 1974இல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் (ஆர். எஸ். எஸ்.) முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். 1980களில் விசுவ இந்து பரிசத் ஆந்திரப் பிரதேச மாநிலத் தலைவரான இவர், 1984-ஆம் ஆண்டில் இராம ஜென்மபூமி இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார்.

வாழ்க்கை மற்றும் தொழில்
[தொகு]ராமராஜு இந்தியாவின் இன்றைய தெலுங்கானாவில் அமைந்துள்ள தேவுனூரு என்ற தொலைதூர கிராமத்தில் 1925 ஏப்ரல் 16 அன்று பணக்கார நிலப்பிரபுக்கள்களின் குடும்பத்தில் பிறந்தார்.[1][2] இவர் தனது தொடக்கக் கல்வியை கிராமத்தில் முடிக்க முடிந்தது, ஆனால் இடைநிலைப் பள்ளிப் படிப்பிற்காக ஹனாம்கொண்டாவுக்கு அருகிலுள்ள மடிகொண்டாவிற்கு 14 கி. மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டியிருந்தது. மடிகொண்டா இப்போது வாரங்கல் மாவட்ட மையத்தின் ஒரு பகுதியாக உள்ளது. 1940 களில், ராமராஜு அரசியலில் ஈடுபட்டார், ஆரிய சமாஜ், ஆந்திர மகாசபை போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மேலும், இவர் இந்திய விடுதலை இயக்கத்திலும் பங்கேற்றார், 1947 ஆம் ஆண்டில் காந்தியின் சத்தியாகிரகங்களில் ஒன்றில் பங்கேற்றதற்காக மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.[3] இவர் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் சேர விரும்பினாலும், அந்த ஆண்டின் பிற்பகுதியில் இவரது தந்தையின் மரணம் காரணமாக வீட்டிலேயே தங்கி தனது குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது, ஆனாலும், இவர் தனது கல்வி ஆர்வத்தில் உறுதியாக இருந்தார். தான் கற்க விரும்பிய உயர்கல்வியை தனது மாநிலத்திலேயே முடிக்க முடிவு செய்தார்.
இவர் தனது முதுகலை படிப்புக்காக உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன்பு நிஜாம் கல்லூரியில் பட்டப்படிப்பு வரை படித்தார், தனது பட்டப்படிப்பை 1951 ஆம் ஆண்டு முடித்தார்.[3] 1952 ஆம் ஆண்டில் ராமராஜு நாட்டுப்புறக் கலைகளைப் பற்றி ஆழமாகப் படிக்க முடிவு செய்து, 1956 ஆம் ஆண்டில் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகளில் முனைவர் பட்டம் பெற்றார், உஸ்மானியாவில் தெலுங்கு மொழி மற்றும் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் நபராகவும், தென்னிந்தியா முழுவதும் நாட்டுப்புறக் கலைகளில் முனைவர் பட்டம் வென்ற முதல் நபராகவும் இவர் இருந்தார்.[3] 1952ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை வென்ற போதிலும், ராமராஜு தனது நாட்டுப்புறக் கல்வியைத் தொடர்வதற்காக அதை ஏற்க மறுத்தார்.
"தெலுங்கு ஜனபத கேய சாகித்யமு" (தெலுங்கு நாட்டுப்புற பாடல் இலக்கியம்), இவரது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரை, 1950 களின் பிற்பகுதியில் முதன்முதலில் வெளியிடப்பட்டது, பின்னர் அதன் முக்கியத்துவம் காரணமாக பல முறை மறுபதிப்பு செய்யப்பட்டது, இது தெலுங்கு நாட்டுப்புற ஆய்வுகளின் "பைபிள்" என்று கருதப்படுகிறது.[2] 1953-ஆம் ஆண்டில் ஒரு பூசாரியைச் ன் சந்தித்தபோது, பனை-ஓலை கையெழுத்துப் பிரதி பராமரிக்கப்பட்டதன் மோசமான நிலையைப் பார்த்த ராமராஜு, அவற்றை ஆராய்ச்சி செய்து சேகரிக்க முடிவு செய்தார், அவ்வாறு செய்ய நாடு முழுவதும் பயணம் செய்தார். இந்தக் காலகட்டத்தில் இவர் சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டமும் மற்றொரு முனைவர் பட்டமும் பெற்றார். தெலுங்கு மற்றும் சமஸ்கிருத இலக்கியத்திற்கு தெலுங்கு மக்களின் பங்களிப்பை விளம்பரப்படுத்திய சமஸ்கிருத இலக்கியத்திற்கு ஆந்திரர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் இவரது ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. முந்தைய அறிஞர்களால் ஆந்திரப் பிரதேசத்தின் துறவிகளுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காததை அறிந்த இவர் அவர்களின் பணிகளை ஆவணப்படுத்திய முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றார். கூடுதலாக, இவர் உருது மொழியிலும் தேர்ச்சி பெற்றார். இவர் உருது-தெலுங்கு அகராதியைத் தொகுத்தார், மேலும் சரத் சந்திர சாட்டர்ஜி, பிரேம்சந்த் ஆகியோரின் படைப்புகளை முதன்முறையாக தெலுங்கில் மொழிபெயர்த்தார்.[4] பின்னர் ஒஸ்மானியாவில் தெலுங்குத் துறையில் பேராசிரியராக இருந்த ராமராஜு, நாட்டின் ஐம்பதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் வருகைg; பேராசிரியராகவும், கலாச்சார பரிமாற்றத் திட்டங்களின் ஒரு பகுதியாக வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புகளையும் பெற்றார். தனது பிற்கால வாழ்க்கையில், இவர் துறையின் தலைவர் ஆனார், ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகள், கலைக்களஞ்சிய கட்டுரைகளை வெளியிட்டார், மேலும் இவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு வானொலியில் உரைகளை வழங்கினார். 1995 ஆம் ஆண்டில், இந்திய அரசு அவருக்கு தேசிய ஆராய்ச்சி பேராசிரியர் என்ற பட்டத்தை வழங்கியது.
ராமராஜு 2010 பிப்ரவரி 8 அன்று ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார். இவரைப் புகழ்வதற்காக காகதீய பல்கலைக்கழக தெலுங்குத் துறை ஒரு கூட்டத்தை நடத்தியது, மேலும் இவரது பல்துறை சேகரிப்புகள் கடப்பாவில் உள்ள சி. பி. பிரவுன் நினைவு நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Forgotten Telugu literary hero and Osmania's first PhD: Biruduraju Rama Raju". தி நியூஸ் மினிட். 12 July 2015. Retrieved 2022-05-03.
- ↑ 2.0 2.1 (in te).
- ↑ 3.0 3.1 3.2 .
- ↑ "Highly Decorated Personalities". The Hans India. 16 December 2017. Retrieved 2022-05-04.