புத்தனேரி ரா. சுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரா. சுப்பிரமணியன் கவிஞர், எழுத்தாளர், நாடகப் பாடலாசிரியர் எனப் பல்துறையில் திறமைகொண்ட தமிழறிஞராவார். இவர் திருநெல்வேலி மாவட்டம், புத்தனேரியில் இராமையா- தாயம்மாளுக்கு மகனாக 1922 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் நாளன்று பிறந்தார்.

தமிழ்ப் பணிகள்[தொகு]

இளங்கலைப் பட்டம் (பி.ஏ) பெற்ற இவர் பொதுப்பணித் துறையில் பணியாற்றினார். டி. கே. எஸ் சகோதரர்கள், நவாப் ராஜமாணிக்கம், என். எஸ். கே போன்றவர்கள் இயற்றிய நாடகங்கள் பலவற்றிற்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.[1][2] செந்தமிழ்ச் செல்வி எனும் இலக்கிய இதழில் கௌரவ ஆசிரியராகவும் தமிழ் உலகம், குயில், போன்ற இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

இறப்பு[தொகு]

பல்துறை வித்தகராகிய சுப்பிரமணியன் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாளன்று இறந்தார்.

படைப்புகள்[தொகு]

கவிதை நூல்கள்[தொகு]

  1. பொங்கல் விருந்து
  2. பாரதி ஒரு நெருப்பு
  3. அம்புலிப் பாட்டுப் பாடாதே
  4. அன்னை இந்திரா தியாக காவியம்
  5. என்றும் இளமை. உள்ளிட்ட பல

திறனாய்வு நூல்கள்[தொகு]

  1. பாட்டும் கூத்தும்
  2. பாவேந்தர் நெஞ்சில் குழந்தைகள்

நாடகங்கள்[தொகு]

  1. பாரதி யார்?
  2. பிள்ளைப் பாண்டியன்
  3. தலை பிழைத்தது
  4. வீரப் பரம்பரை
  5. பிறந்தது புதுயுகம்

தொகுப்புப் பணிகள்[தொகு]

  1. நாடகக் கலைக்களஞ்சியம்
  2. பண் ஆராய்ச்சி
  3. மகாகவி மலர்
  4. கிராமியக் கலைவிழா மலர்

பெற்ற விருதுகள்[தொகு]

  1. கவிஞர்கோ(1972)
  2. கலைமாமணி(1976)
  3. செஞ்சொற் கவிஞர்(1979)
  4. முத்தமிழ் வித்தகர்(1977)
  5. புதுமைப் பாவலர்(1980) முதலான பல விருதுகள் பெற்றுள்ளார்.[3]

உசாத்துணை[தொகு]

  1. டாக்டர் ஏ.என்.பெருமாள் 'இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாடகம்'- ஐந்திணைப் பதிப்பகம்-1988.
  2. "நான் கண்ட நாடகக் கலைஞர்கள்-திரு. புத்தனேரி ரா. சுப்ரமணியம்", ஆசிரியர்: பம்மல் சம்பந்த முதலியார்
  3. ப.முத்துக்குமாரசுவாமி,'இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள்' பக்கம்-110, பழனியப்பா பிரதர்ஸ்.

வெளி இணைப்புகள்[தொகு]