புதுச்சேரியில் சுற்றுலாத்துறை

புதுச்சேரி மற்றும் காரைக்கால் கிழக்கு கடலான, வங்காள விரிகுடா கரையில் அமைந்துள்ளது. இந்த கடற்கரை நகரம் பிரஞ்சு காலனித்துவ கட்டிடங்கள் மற்றும் தமிழ் பாணி நகர்ப்புற கட்டிடக்கலை கொண்டுள்ளது[1].
பேரடைஸ் கடற்கரை
[தொகு]
புதுவை மாநிலம், அரியாங்குப்பத்தை அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளது. புதுவையில் உள்ள சுற்றுலாத்தலங்களில் ஒன்றான இங்கு விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் வெளி மாநிலங்களில் இருந்தும், உள்ளூரில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
பேரடைஸ் கடற்கரைக்கு, சுண்ணாம்பார் உல்லாச விடுதி இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பேரடைஸ் கடற்கரைக்கு சுண்ணாம்பார் ரிசார்டில் இருந்து நாம் படகு மூலம் பயணம் செய்ய வேண்டும். சுண்ணாம்பார் உல்லாச விடுதி NH45A அமைந்துள்ளது.
புதுச்சேரி கடற்கரை
[தொகு]
புரொமனேட் கடற்கரை (Promenade Beach) புதுச்சேரியை ஒட்டிய கடற்கரைகளில் மிகவும் பிரபலமானது. இது வங்காள விரிகுடாவுக்கு கரையாக அமைந்துள்ளது. இதை ஒட்டி 1.2 கிலோமீட்டர் நீண்ட சாலை உள்ளது. இது போர் நினைவகத்தில் (War Memorial) தொடங்கி டூப்ளே பூங்கா (Dupliex Park) வரை உள்ள குபேர் (Goubert) வீதியில் முடிவடைகிறது. இங்கு பிரஞ்சு தூதரகம் அமைந்துள்ளது.
இங்கு லா காபே என்ற ஒரு உணவகம் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. கடற்கரை ஓரத்தில் அதிக பிரஞ்சு பாரம்பரிய கட்டிடத்தை காணலாம்.
ஓயிட் டவுன்
[தொகு]

ஓயிட் டவுன் புதுச்சேரி கடற்கரை அருகில் உள்ளது. பிரஞ்சு காலனித்துவ பாரம்பரிய கட்டிடங்கள், ஓயிட் டவுனில் உள்ளன.
புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு கிடைக்கின்றன. 2014 ஆம் ஆண்டின் டிசம்பர் கணக்கின் படி, ஹொண்டா ஆக்டிவா இரு சக்கர வாகனம், ஏறத்தாழ 300 ரூபாய் நாள் வாடகைக்கும், பல்சர் இரு சக்கர வாகனம் ஏறத்தாழ 350 ரூபாய் நாள் வாடகைக்கும் கிடைக்கிறது. ஓயிட் டவுனில் இரு சக்கர வாகனங்கள் அல்லது மிதிவண்டியில் சுற்றுவது ஒரு சுகமான அனுபவம்.
அரவிந்தர் ஆசிரமம்
[தொகு]அரவிந்தர் ஆசிரமம் அரவிந்த கோஷ் என்ற ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரர், கவிஞர், தத்துவஞானியால் 1926ல் நிறுவப்பட்டது. அரவிந்தர் ஆசிரமத்தின் பார்வையாளர்கள் நேரம் காலை 8 மணி முதல் 12 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை ஆகும்.
ஆரோவில் மாத்ரி மந்திர்
[தொகு]
ஆரோவில்லின் ஆன்மா’ என்று ஸ்ரீஅன்னையால் வருணிக்கப் பெற்ற ‘மாத்ரி மந்திர்’ என்ற வடசொல்லுக்கு ‘அன்னை ஆலயம்’ என்று பொருள். எனினும், அதற்கெனச் சிலையோ, வழிபாடோ பூசனைகளோ இங்கு எதுவும் மேற்கொள்ளப் பெறுவதில்லை. சமய, சமயச் சடங்குகள் கடந்த நிலையில் பிரபஞ்ச அன்னையாகிய மகாசக்தியை உணரும் வண்ணத்தில் உருவாக்கப் பெற்ற இக்கோள வடிவிலான மனஒருமை அரங்கு 1971 ஆம் ஆண்டு ஸ்ரீஅன்னையின் பிறந்த நாளன்று அடிக்கல் நாட்டப் பெற்றுக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பிரபஞ்ச அன்னையின் நான்கு மகாசக்தியின் செயல்பாடுகளைக் குறிக்கும் வண்ணம், இங்கு நான்கு தூண்கள் அமைக்கப் பெற்றுள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேலும் காண்க
[தொகு]