பீடபதம் (சிற்பநூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒன்பது பதங்களைக் கொண்ட பீடபதம்

இந்தியச் சிற்ப மரபில் பீடபதம் என்பது, 32 வகைகளாகச் சொல்லப்படும் தள அமைப்புக்களில் ஒன்று. இது ஒன்பது பதங்களைக் (நிலத்துண்டு) கொண்டது. இந்த அமைப்பில், கிழக்குப் பக்கம் ஆதித்தனுக்கும் (சூரியன்), தெற்குப் பக்கம் யமனுக்கும், மேற்குப் பக்கம் வருணனுக்கும், வடக்குப் பக்கம் சந்திரனுக்கும் உரியது. இவர்களைவிடச் சிவன் வடகிழக்குப் பகுதிக்கும், அக்கினி தென்கிழக்குக்கும், காற்றுக் கடவுளான பவனன் தென்மேற்குக்கும், ஆகாயத்துக்கு உரிய கடவுள் ககனன் வடமேற்குக்கும் உரிய கடவுளர் எனவும் மானசாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மையத்தில் உள்ள பதம் "பிரிதிவி" அல்லது "புவி"க் கடவுளுக்கு உரியது.[1]

குறிப்புக்கள்[தொகு]

  1. Acharya, Prasanna Kumar., 2010. பக். 25, 26.

உசாத்துணைகள்[தொகு]

  • Acharya, Prasanna Kumar., Architecture of Manasara, Translated from Original Sanskrit Text, New Barathiya Book Corporation, Delhi, 2010.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீடபதம்_(சிற்பநூல்)&oldid=1603569" இலிருந்து மீள்விக்கப்பட்டது