உள்ளடக்கத்துக்குச் செல்

பீகாரில் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநிலமான பீகாரில் தேர்தல்கள், இந்திய அரசியலமைப்பின்படி நடத்தப்படுகின்றன. உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பான சட்டங்களைப் பீகார் சட்டமன்றம் தன்னிச்சையாக இயற்றுகிறது. அதேசமயம் மாநில அளவிலானத் தேர்தல்களை நடத்துவதில் மாநிலச் சட்டமன்றம் செய்யும் எந்தவொரு மாற்றத்திற்கும் இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும்.

பொதுத் தேர்தல் என்றும் அழைக்கப்படும் மக்களவைத் தேர்தல்கள், மத்திய அரசு தனது பதவிக்காலத்தை நிறைவு செய்த பிறகு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடத்தப்படுகின்றன. நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டால், இந்தத் தேர்தலானது பதவிக் காலம் முடிவதற்கு முன்பே நடத்தப்படலாம். இதேபோல், சட்டமன்ற தேர்தல்கள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை நடத்தப்படுகின்றன. கடந்த மக்களவைத் தேர்தல் 2024 ஆம் ஆண்டிலும், சட்டமன்றத் தேர்தல் 2025 ஆம் ஆண்டிலும் நடைபெற்றது. மாநிலங்களவைக்கு மாநிலப் பிரதிநிதியை சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

பீகார் தேர்தல் முறை

[தொகு]

சட்டமன்றம்

[தொகு]

பீகார் சட்டமன்றயில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன. அதன் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, மாநிலம் 243 சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, இதில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறார். 2010-ஆம் ஆண்டில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 206 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தது.[1] பீகார் சட்டமன்றம் 1937இல் உருவாக்கப்பட்டது. சட்டமன்றத்தில் 152 உறுப்பினர்கள் இருந்தனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளின்படி, மாநிலத்தில் முதல் பொதுத் தேர்தல் 1952- ஆம் ஆண்டில் நடைபெற்றது. சட்டமன்றத்தில் ஒரு நியமன உறுப்பினர் உட்பட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 331 ஆக இருந்தது. டாக்டர் ஸ்ரீ கிருஷ்ணா சிங் அவையின் முதல் தலைவராகவும், முதலமைச்சராகவும், டாக்டர் அனுராக் நாராயண் சின்ஹா சட்டமன்றத்தின் முதல் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலத்தின் முதல் துணை முதல்வராகவும் ஆனார். இரண்டாவது பொதுத் தேர்தலின் போது இந்த எண்ணிக்கையானது 318 ஆகக் குறைக்கப்பட்டது. 1977இல் பீகார் சட்டமன்றயில் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 318லிருந்து 324 ஆக உயர்த்தப்பட்டது. பீகார் மறுசீரமைப்புச் சட்டம், 2000 என்ற தலைப்பில் நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் சார்க்கண்டு என்ற தனி மாநிலம் உருவாக்கப்பட்டதன் மூலம், பீகார் சட்டமன்றத்தின் எண்ணிக்கை 325-லிருந்து 243-ஆகக் குறைக்கப்பட்டது. தற்போதைய சாம்ராட் சவுத்ரி அரசாங்கம் ஜே. டி. யு மற்றும் எல். ஜே. பி ஆகிய கட்சிகளால் பெரும்பான்மை பெற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Statewise Results". Archived from the original on 2010-11-27. Retrieved 2010-11-27.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீகாரில்_தேர்தல்&oldid=4542425" இலிருந்து மீள்விக்கப்பட்டது