பி. திருநாவுக்கரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. திருநாவுக்கரசு (பிறப்பு: ஏப்ரல் 9, 1944) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் அரசு வழக்குரைஞராகவும், சட்டக் கல்விப் பேராசிரியராகவும் பணியாற்றியவர். அதன் பிறகு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார். இவர் எழுதிய "1872 ஆம் ஆண்டு இந்தியச் சான்றுச் சட்டம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சட்டவியல், அரசியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._திருநாவுக்கரசு&oldid=2765759" இலிருந்து மீள்விக்கப்பட்டது