பி. டி. சீனிவாச அய்யங்கார்
Appearance
பி. டி. சீனிவாச அய்யங்கார் (P. T. Srinivasa Iyengar, 1863–1931) என்பவர் வரலாற்றாய்வாளர், மொழியியல் அறிஞர், மற்றும் கல்வியாளர் ஆவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியவர்.
பிறப்பும் கல்வியும்
[தொகு]தஞ்சை மாவட்டம் புள்ளைபூதங்குடி என்னும் ஊரில் பிறந்த சீனிவாச அய்யங்கார், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியிலும் திருச்சிராப்பள்ளி புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி கற்றார்.
பணிகள்
[தொகு]- தாம் படித்த அதே புனித சூசையப்பர் கல்லூரியில் விரிவுரையாளராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். விசாகப்பட்டினம் திருமதி ஏ வி.என். கல்லூரியில் முதல்வராக 27 ஆண்டுகள் பணியாற்றினார்.
- இவரது வரலாற்று அறிவைக் கண்டுணர்ந்த சென்னைப் பல்கலைக் கழகம் இவரை இந்திய வரலாற்றுத் துறையில் இணைப் பேராசிரியர் பொறுப்பில் பணி யமர்த்தியது.[1]
- பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வரலாறு மற்றும் அரசியல் துறையில் பேராசிரியராகப் பணியமர்த்தியது.
- சீனிவாச அய்யங்கார் வரலாற்றில் புலமை கொண்டவராய் இருந்தபோதிலும் விசய நகரக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.
- சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிப் பேரவை உறுப்பினராகவும் பல ஆண்டுகள் இருந்துள்ளார்.
- சென்னை மாநிலக் கல்வி மாநாட்டுக்கு மூன்று முறை தலைமை தாங்கினார்.
- பல்லவர் சரித்திரம், இந்தியர் சரித்திரம், திருச்சி ஜில்லா, மராட்டிய காலம் என நான்கு நூல்கள் தமிழில் எழுதினார். பிற நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டன.
மேற்கோள்
[தொகு]தமிழக வரலாற்றறிஞர்கள், இளங்கணி பதிப்பகம்,சென்னை--15
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-04-22. பார்க்கப்பட்ட நாள் 2008-04-22.