பி. கே. வாசுதேவன் நாயர்
பி. கே. வாசுதேவன் நாயர் P. K. Vasudevan Nair | |
---|---|
7வது கேரள முதலமைச்சர் | |
பதவியில் 29 அக்டோபர் 1978 – 7 அக்டோபர் 1979 | |
ஆளுநர் | ஜோதி வெங்கடாசலம் |
முன்னையவர் | அ. கு. ஆன்டனி |
பின்னவர் | சி.எச் முகமது கோயா |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2004[1] – 12 ஜூலை 2005 | |
முன்னையவர் | வி. எஸ். சிவக்குமார் |
பின்னவர் | பானியன் இரவீந்திரன் |
தொகுதி | திருவனந்தபுரம் |
பதவியில் 1967[2]–1971 | |
முன்னையவர் | உருவாக்கப்பட்டது |
பின்னவர் | எம். எம். ஜோசப் |
தொகுதி | பீர்மேடு |
பதவியில் 1962[3]–1967 | |
முன்னையவர் | பி. டி. புன்னூசு |
பின்னவர் | சுசீலா கோபாலன் |
தொகுதி | அம்பழப்புழா |
பதவியில் 1957[4]–1962 | |
முன்னையவர் | சாலக்குழி பௌலோசு மாதென் |
பின்னவர் | இரவீந்திர வர்மா |
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1977[5]–1982[6] | |
முன்னையவர் | டி. வி. தாமஸ் |
பின்னவர் | கே. பி. இராமச்சந்திரன் நாயர் |
தொகுதி | ஆலப்புழா |
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் கேரள மாநில அமைப்பின் செயலாளர் | |
பதவியில் 1984–1998 | |
முன்னையவர் | எஸ். குமரன் |
பின்னவர் | வெலியம் பார்கவன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | படையாத் கேசவப்பிள்ளை வாசுதேவன் நாயர் 2 மார்ச்சு 1926 கிடங்கனூர், கோட்டயம், திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 12 சூலை 2005 புது தில்லி, இந்தியா | (அகவை 79)
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
துணைவர் | கே. பி. இலட்சுமி குட்டியம்மா |
பிள்ளைகள் | 3 மகன்கள், 2 மகள்கள் |
முன்னாள் கல்லூரி | அரசு சட்டக் கல்லூரி, திருவனந்தபுரம் |
பி.கே.வி என பிரபலமாக அறியப்படும் படையாத் கேசவப்பிள்ளை வாசுதேவன் நாயர் (Padayatt Kesavapillai Vasudevan Nair) (2 மார்ச் 1926 - 12 ஜூலை 2005) கேரளாவின் ஒன்பதாவது முதல்வராகவும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்தார். இவர் 1957, 1962, 1967, 2004 இல் நான்கு முறை மக்களவைக்கும் , 1977, 1980 இல் இரண்டு முறை கேரள சட்டமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அ. கு. ஆன்டனி முதல்வர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, 20 அக்டோபர் 1978இல் இவர் முதல்வர் ஆனார்.[7] எனினும் ஐக்கிய முன்னணியிலுள்ள மற்ற கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இவர் 7 அக்டோபர் 1979இல் பதவி விலகினார்.
பதவி
[தொகு]இவர் திருவிதாங்கூர் மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு, அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு ஆகியவற்றின் நிறுவனர்-தலைவராக இருந்தார். 1964இல் பொதுவுடைமை இயக்கத்தில் பிளவு ஏற்பட்ட பிறகு இவர் இந்திய பொதுவுடைமைக் கட்சியுடன் இருந்தார். மேலும், 1982 இல் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இறப்பு
[தொகு]பி. கே. வாசுதேவன் நாயர், நீண்டகால இதய நோயாலும் கடுமையான நீரிழிவு நோயாலும் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் 12 ஜூலை 2005 அன்று பிற்பகல் 3.35 மணியளவில் புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில்இறந்தார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://loksabhaph.nic.in/Members/statedetailar.aspx?state_name=Kerala&lsno=14 Members 14th of Loksabha 2004-09
- ↑ http://loksabhaph.nic.in/Members/statedetailar.aspx?state_name=Kerala&lsno=4 Members 4th of Loksabha 1967-71
- ↑ http://loksabhaph.nic.in/Members/statedetailar.aspx?state_name=Kerala&lsno=3 Members 3rd of Loksabha 1962-67
- ↑ http://loksabhaph.nic.in/Members/statedetailar.aspx?state_name=Kerala&lsno=2 Members 2nd of Loksabha 1957-62
- ↑ http://www.niyamasabha.org/codes/mem_1_5.htm Members of 5th KLA 1977-80
- ↑ http://www.niyamasabha.org/codes/mem_1_6.htm Members of 6th KLA 1980-82
- ↑ 7.0 7.1 "Veteran CPI leader 'PKV' passes on". outlookindia.com/. பார்க்கப்பட்ட நாள் 2020-09-08.
மேலும் படிக்க
[தொகு]- Chief Ministers, Ministers, and Leaders of Opposition of Kerala (PDF), Thiruvananthapuram: Secratriat of Kerala Legislature, 2018