பிரீத்தி பருவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரீத்தி பருவா (Preeti Barua, அசாமி: প্ৰীতি বৰুৱা) என்பவர் இலக்கியவாதியும், கல்வியாளரும் ஆவார். ரத்தசக்ரா என்ற மராட்டிய நூலை அசாமிய மொழிக்கு மொழிபெயர்த்து, சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் அசாம் மகளிர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஆவார். இவர் ஹாண்டிக் பெண்கள் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியவர்.[1] இவர் நிரர்தக் என்ற கதைத் தொகுப்பை எழுதியுள்ளார். பிற மொழிகளில் இருந்து இலக்கிய நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.[1]

இவர் ஹீரேன் பட்டாச்சாரியா என்ற கவிஞரின் சகோதரி. இவர் 2015ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் ஏழாம் நாளில் இறந்தார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "பிரபல எழுத்தாளரான பிரீத்தி பருவா மறைந்தார் - [[அசாம் டிரிபியூன்]]". Archived from the original on 2015-11-09. பார்க்கப்பட்ட நாள் 2021-10-13.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீத்தி_பருவா&oldid=3563640" இலிருந்து மீள்விக்கப்பட்டது