பிரியம்வதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரியம்வதா தமிழகத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஆவார். டிவி டுடே எனும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தமிழ்நாட்டுக் குழுவில் சிறப்புச் செய்தியாளராக பணியாற்றுபவர். டிவி டுடே எனும் தொலைக்காட்சி நிறுவனத்தின் அங்கங்களாக ஹெட்லைன்ஸ் டுடே (ஆங்கிலம்), ஆஜ் தக் (இந்தி) போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகள் செயல்படுகின்றன[1].

தமிழீழப் போர் குறித்தான செய்தி ஆவணப் படம்[தொகு]

தமிழீழப் போர் குறித்து இவரால் தயாரிக்கப்பட்ட செய்தி ஆவணப் படம், இவருக்கு விருதுகளைப் பெற்றுத் தந்தது. இனப்படுகொலையை கண்டேன்: இலங்கையின் கொலைக் களங்கள் (I Witnessed Genocide: Inside Sri Lanka's killing fields) என்பது இந்த செய்தி ஆவணமாகும்[2].

பெற்ற சிறப்புகள்[தொகு]

  • ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் செவெனிங் ஸ்காலர்சிப் (Chevening Scholarship), 2013 [3].

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியம்வதா&oldid=3221304" இலிருந்து மீள்விக்கப்பட்டது