பிராங்கென்ஸ்டைன் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிராங்கன்ஸ்டைன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஃபிராங்கென்ஸ்டைன்; அல்லது, தெ மாடர்ன் புரொமெதயசு (Frankenstein; or, The Modern Prometheus) என்பது 1818 ஆம் ஆண்டு ஆங்கில எழுத்தாளர் மேரி செல்லி எழுதிய புதினம் ஆகும். ஃபிராங்கென்ஸ்டைன் இதில் விக்டர் ஃபிராங்கென்ஸ்டைன் என்ற இளம் விஞ்ஞானியின் கதையைப் பற்றி குறிப்பிடுகிறார், அவர் வழக்கத்திற்கு மாறான அறிவியல் பரிசோதனையில் மதியுடைமையுள்ள ஓர் உயிரினத்தை உருவாக்குகிறார். இந்தப் புதினத்தை தனது 18ஆம் வயதில் எழுதத் தொடங்கினார், மேலும் முதல் பதிப்பு இலண்டனில் சனவரி 1,1818 அன்று அவரது 20ஆம் வயதில் வெளியிடப்பட்டது. 1821 இல் பாரிசில் வெளியிடப்பட்ட இரண்டாவது பதிப்பில் இவரது பெயர் முதன்முதலாக இடம்பெற்றது.

செல்லி, 1815 இல் ஐரோப்பா வழியாகப் பயணம் செய்தார்.ஜெர்மனியில் உள்ள ரைன் நதி வழியாகச் சென்று ,ஜெர்ன்ஷெய்மில் தனது பயணத்தினை நிறைவு செய்தார். ஃபிராங்கென்ஸ்டைன் கோட்டையிலிருந்து 17 கிலோமீட்டர்கள் (11 mi) தொலைவில் உள்ள அந்த இடத்தில், இரசவாத சோதனைகளில் ஈடுபட்டிருந்தார்.[1][2][3] [note 1] பின்னர் அவர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா பகுதிக்குச் சென்றார்.கால்வன் தத்துவம் மற்றும் மறைபொருள் நிலை கொண்ட கருத்துக்களை தனது காதலரும், வருங்காலக் கணவருமான பெர்சி பைச்சு செல்லி மற்றும் தனது நண்பர்களுடன் உரையாடினார். 1816 ஆம் ஆண்டில், மேரி, பெர்சி மற்றும் ஜார்ஜ் கோர்டன் பைரன் ஆகியோருக்கு இடையில் சிறந்த திகில் கதையை எழுதுவதில் போட்டி இருந்தது.[4] பல நாட்கள் யோசனைக்குப் பிறகு, ஷெல்லி உயிரை உருவாக்கிய ஒரு விஞ்ஞானியை கற்பனை செய்து,இந்தப் புதினத்தை எழுதினார்.[5]

கதைச் சுருக்கம்[தொகு]

தலைவர் வால்டனின் அறிமுகம்[தொகு]

ஃபிராங்கென்ஸ்டைன் என்பது ஒரு சட்டகக் கதை (ஒரு கதைக்குள் இன்னொரு கதை இருக்கும் பாணியிலான) கடிதப் புதினமாகும். இது தலைவர் இராபர்ட் வால்டனுக்கும் அவரது சகோதரி மார்கரெட் வால்டன் சவில்லிக்கும் இடையேயான ஒரு கற்பனையான கடிதப் பரிமாற்றத்தை ஆவணப்படுத்துகிறது. இந்தக் கதை பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது (கடிதங்கள் "17-" என குறிப்பிடப்பட்டுள்ளன). இராபர்ட் வால்டன் ஒரு தோல்வியுற்ற எழுத்தாளர் ஆவார், அவர் அறிவியல் அறிவை பெருக்கிக் கொள்ளும் வகையில் வட துருவத்தை ஆராயத் தொடங்கினார். பயணத்தின் போது, ஒரு பிரமாண்டமான உருவத்தால் இயக்கப்படும் ஒரு நாய் சறுக்கு வண்டியைக் குழுவினர் காண்கிறார்கள். சில மணிநேரங்களுக்குப் பிறகு, விக்டர் ஃபிராங்கென்ஸ்டைன் எனும் பெயருடைய உறைந்த மற்றும் மெலிந்த நிலையில் இருந்த மனிதனை அந்தக் குழுவினர் மீட்டனர். வால்டனின் குழுவினரால் கவனிக்கப்பட்ட மாபெரும் மனிதனை ஃபிராங்கென்ஸ்டைன் பின்தொடர்ந்தார். தன்னிடம் இருக்கும் அதே மெனக்கெடல் வால்டனிடம் இருப்பதை அவர் அறிகிறார். மேலும் தனது மிகைவிருப்பம் போலவே அவரும் அதனால் பாதிக்கப்படுவது மற்றொரு கதையாக விரிகிறது.

ஃபிராங்கண்ஸ்டைன் விவரிப்பு[தொகு]

விக்டர் ஃபிராங்கண்ஸ்டைன் தன்னுடைய குழந்தைப்பருவத்திலிருந்து வால்டனுக்கு சொல்லத் தொடங்குகிறார். ஒரு செல்வந்த குடும்பத்தால் வளர்க்கப்பட்ட ஃபிராங்கண்ஸ்டைனுக்கு தன்னைச் சுற்றியிருக்கும் அறிவியல் உலகத்தைப் புரிந்துகொள்ளும்பொருட்டு பயணிக்க ஊக்கம் கிடைக்கிறது. அவர் பாசமிக்க குடும்பம் மற்றும் நண்பர்கள் சூழ பாதுகாப்பாக வளர்கிறார்.

ஃபிராங்கண்ஸ்டைன் ஆதரவற்ற தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரி எலிசபெத் லாவென்சா உடன் நெருக்கமான உறவைப் பேணுகிறார். எலிசபெத்தின் தாயார் இறந்தபின்னர் அவர் ஃபிராங்கண்ஸ்டைன் குடும்பத்தினரிடம் இருக்க அனுப்பப்படுகிறார். இயற்கையின் அதிசயங்களை அடைவதில் கவனம் செலுத்தும் அரதப் பழசான அறிவியல் கோட்பாடுகளின் மீது பற்று கொண்ட ஒரு இளைஞனாக அவர் உருவாகிறார். ஜெர்மனி இங்கோஸ்டாட் பல்கலைக்கழகத்தில் சேர்வது அவரது திட்டம். ஆனால் அவர் பயணத்திற்கு திட்டமிட்ட நாளுக்கு ஒரு வாரம் முன்பாக ஃபிராங்கண்ஸ்டைனின் தாயாரும் சகோதரி எலிசபெத்தும் நச்சுக் காய்ச்சலால் உடல்நலம் குன்றிவிடுகின்றனர். எலிசபெத் மீண்டுவிடுகிறார், ஆனால் ஃபிராங்கண்டைனின் தாயார் இந்த நோயினால் மாண்டு விடுகிறார். மொத்த குடும்பமும் துயரத்திற்கு ஆளாகிறது, ஃபிராங்கண்ஸ்டைன் அந்த மரணத்தை தன் வாழ்வின் முதல் துரதிஷ்டமாகப் பார்க்கிறார். பல்கலைக்கழகத்தில், அவர் வேதியியல் மற்றும் பிற அறிவியல் திரைகளில் நிபுணத்துவம் பெறுகிறார் -அதன் ஒரு பகுதியாக வாழ்வு எவ்வாறு அழிவுறுகிறது என்பதையும் ஆய்வு செய்கிறார் - அத்துடன் உயிரற்ற வாழ்க்கையில் தாக்கமேற்படுத்த ரகசியத்தையும் கண்டுபிடிக்கிறார். அவர் 1790களில் கண்டுபிடிக்கப்பட்ட கால்வினஸம் என்ற உத்தியிலும் ஆர்வம் காட்டுகிறார்.

அசுரனின் உருவாக்கம் குறித்த துல்லியமான விவரங்கள் குழப்பமானதாகவே இருக்கும் நிலையில், தான் மரண வீடுகளிலிருந்து எலும்புகளை சேகரித்துள்ளதாகவும், "மனித சட்டகத்தின் பயங்கரமான ரகசியங்களாக இருக்கும் அருவருப்பான விரல்களால் தொந்தரவிற்கு ஆளாகியிருப்பதாகவும்" விளக்குகிறார். உறுப்புகள் ஆய்வறையும் கசாப்பு மையங்களும் தனக்குத் தேவையான பொருட்களை வைத்திருப்பதாகவும் அவர் கூறுகிறார். இந்த அசுரனை ஒரு சாதாரண மனிதனைக் காட்டிலும் மிகவும் பெரியதாக உருவாக்கும்படி தான் கட்டாயப்படுத்தப்பட்டாத ஃபிராங்கண்ஸ்டைன் கூறுகிறார்—அவர் அதை ஏறத்தாழ எட்டு அடி உயரம் இருக்கும்படி கணக்கிடுகிறார்—இதன் பகுதியளவு காரணம் மனித உடலின் நுண்ணிய பாகங்களை படியெடுப்பதில் உள்ள பிரச்சினையே. அசுரனுக்கு உயிரளித்த பின்னர், ஃபிராங்கண்ஸ்டைன் அந்த அச்சுமூட்டக்கூடிய அசுரனின் தோற்றத்தைக் கண்டு அருவருப்படைகிறார். ஃபிராங்கண்ஸ்டைன் தப்பிச்செல்கிறார்.

மனித வாழ்க்கையை உருவாக்குவதில் தன்னுடைய சோர்வுறச்செய்யும் ரகசிய முயற்சிகள் காரணமாக ஃபிராங்கன்ஸ்டைனுக்கு உடல்நலம் குன்றுகிறது. அவர் தன்னுடைய இளம்வயது நண்பரான ஹென்றி கிளர்வெலால் பராமரிக்கப்பட்டு பழைய ஆரோக்கிய நிலைக்குத் திரும்புகிறார். தன்னுடைய உடல்நலக்குறைபாட்டிலிருந்து மீள ஃபிராங்கன்ஸ்டைனுக்கு நான்கு மாதங்கள் ஆகின்றன. தன்னுடைய ஐந்து வயது சகோதரனான வில்லியம் கொலைசெய்யப்பட்டதாக அறிந்தவுடன் தான் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று அவர் தீர்மானிக்கிறார். வில்லியமின் மரணத்திற்காக எலிசபெத் தன்னையே குற்றம்சாட்டிக்கொள்கிறாள், ஏனென்றால் அவள்தான் தன் தாயாரின் பேழைக்குள் செல்ல அவனை அனுமதித்திருக்கிறாள். வில்லியமின் செவிலித்தாயான ஜஸ்டின், ஃபிராங்கண்ஸ்டைனின் தாயாருடைய பேழை ஜஸ்டினின் பையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில் குற்றம்சாட்டப்படுகிறார். அந்த உருவாக்கப்பட்ட உயிர் வில்லியமைக் கொன்று பேழையை ஜஸ்டினின் கோட்டுப் பையில் வைத்துவிட்டது வெளிப்படுகிறது, வில்லியமின் கொலைக்கான பின்னணிக் கதை சொல்லப்படுகிறது.

மனிதர்களுடனான சில மோசமான அனுபவங்களுக்குப் பின்னர், ஃபிராங்கண்ஸ்டைன் அசுரன் அவர்களைக் கண்டு அச்சம்கொள்கிறான் என்பதோடு ஒரு குடிசைக்கு அருகாமையில் அங்கே ஒரு குடும்பத்தினர் வாழ்வதைக் கண்டபடி ஒரு வருடத்தை செலவிடுகிறான். அந்தக் குடும்பம் செல்வச் செழிப்போடு இருந்தது, ஆனால் அவர்கள் துருக்கிய வியாபாரியை மீட்ட ஃபெலிக்ஸ் டி லாஸே குற்றம்சாட்டி மரண தன்டனை விதித்தபோது அவர்கள் வெளியேற வேண்டியிருந்தது. ஃபெலிக்ஸால் காப்பாற்றப்பட்டவன் அவனுக்கு விருப்பமான சஃபி என்ற பெண்ணின் தகப்பன். காப்பாற்றப்பட்டவுடன் தந்தையானவர் ஃபெலிக்ஸை சஃபிக்கு திருமணம் செய்துவைக்க உடன்படுகிறார். இருப்பினும், முடிவில் அவரால் தன்னுடைய மகளை ஒரு கிறிஸ்துவன் திருமணம் செய்துகொண்டு அவளைக் கூட்டிச்சென்றுவிடுவான் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஐரோப்பிய பெண்களின் சுதந்திரம் குறித்த ஆவலுடன் சஃபி திரும்பி வருகிறாள்.

டி லாஷே குடும்பத்தின் வழியாக தெரிந்துகொண்டதன் மூலம் அந்த அசுரன் கல்வி கற்று சுய விழிப்படைகிறான், தான் பார்க்கும் மனிதர்களிடமிருந்து உடல் தோற்றத்தில் தான் மிகவும் வேறுபட்டவன் என்பதையும் தெரிந்துகொள்கிறான். தனிமையில் இருக்கும் அந்த அசுரன் டி லாஷேஸ் குடும்பத்தினரின் நட்பை நாடுகிறான். அசுரன் அந்த குடும்பத்தினருடன் நட்பாக இருக்க முயற்சிக்கையில் அவன் அவர்களுடைய பயத்தினால் தடுக்கப்பட்டுவிடுகிறான். இந்த மறுப்பு தன்னை உருவாக்கிவருக்கு எதிராக பழிவாங்கும்படி அசுரனைத் தூண்டுகிறது.

ஃபிராங்கண்ஸ்டைன் அசுரன் ஜெனீவாவிற்கு பயணித்து காட்டில் ஒரு சிறுவனைச் சந்திக்கிறான். இந்தச் சிறுவன் இன்னும் இளைமையாகவும் தன்னுடைய பயங்கரம் குறித்த வயதான மனிதர்களின் உணர்தல்களால் பாதிக்கப்படாமலும் இருக்கிறான் என்று நம்பிய அசுரனோடு அந்தச் சிறுவன் நண்பனாகிறான், ஃபிராங்கண்ஸ்டைன் அசுரன் அந்தச் சிறுவனை கடத்திச்செல்ல திட்டமிடுகிறான். ஆனால் அந்தச் சிறுவன் தன்னை ஃபிராங்கண்ஸ்டைனின் உறவினன் என்று தெரிவிக்கிறான். அசுரனைப் பார்த்து அவன் கத்தி அவமானப்படுத்துவது அசுரனை கோபம்கொள்ளச் செய்கிறது. அந்தச் சிறுவனை அமைதிப்படுத்தும் முயற்சியாக அசுரன் அவனுடைய வாயைப் பொத்துகிறான். முடிவில் அசுரன் அந்தச் சிறுவனை மூச்சடைக்கச் செய்து கொன்றுவிடுகிறான். இது அவனுடைய உண்மையான நோக்கம் இல்லையென்றபோதிலும், அசுரன் தன்னை உருவாக்கியவனுக்கு எதிரான முதல் பழிவாங்கலாக இதை எடுத்துக்கொள்கிறான். இறந்த சிறுவனின் உடலிலிருந்து கழுத்தணியை எடுத்துக்கொண்ட அசுரன் ஜஸ்டின் என்ற தூங்கிக்கொண்டிருக்கும் பெண்ணின் மேல் வைத்துவிடுகிறான். ஜஸ்டினோடு கண்டுபிடிக்கப்படும் இந்த கழுத்தணி அவளை குற்றவாளியாக்கிவிடுகிறது. விசாரணை செய்யும் நீதிபதிகள் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க விரும்புவதில்லை; ஆனால், தேவாலயத்தின் அச்சுறுத்தலால் ஜஸ்டினுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

தன்னுடைய சகோதரனின் மரணத்தைத் தெரிந்துகொள்ளும் ஃபிராங்கண்ஸ்டைன் தன் குடும்பத்தினருடன் இருப்பதற்காக ஜெனிவாவிற்கு திரும்புகிறார். தன்னுடைய இளைய சகோதரன் கொலைசெய்யப்பட்ட இடத்தில் ஃபிராங்கண்ஸ்டைன் அந்த அசுரனைப் பார்க்கிறார், இந்த அசுரன்தான் வில்லியத்தை கொலைசெய்வதன் என்று அவர் நிச்சயப்படுத்திக்கொள்கிறார். அதிகப்படியாக அழித்து பழிவாங்கத்துடிக்கும் இந்த அசுரனை உருவாக்கியதன் துயரத்தாலும் குற்ற உணர்வாலும் பீடிக்கப்படும் ஃபிராங்கண்ஸ்டைன் அமைதியைத் தேடி மலைகளில் தஞ்சமடைகிறார். சற்று தனிமையில் இருந்த பின்னர் அசுரன் ஃபிராங்கண்ஸ்டைனை நெருங்குகிறான். தொடக்கத்தில் கோபம் கொண்டு அசுரனைக் கொல்லும்விதமாக ஃபிராங்கண்ஸ்டைன் அவனைக் கொலைசெய்ய முயற்சி்க்கிறார். தன்னைப் படைத்தவனைவிட பெரியதாகவும் பலசாலியாகவும் இருக்கும் அசுரன் ஃபிராங்கண்ஸ்டைனை ஏமாற்றி அவரை அமைதியடையும்படி விடுகிறான். தன்னுடைய உருவாக்கத்திலிருந்து தொடங்கி, ஆரம்பத்தில் தான் ஒரு அப்பாவியாக இருந்து மனிதர்களால் துன்புறுத்தப்பட்ட தன்னுடைய சுருக்கமான வாழ்க்கையை அசுரன் விவரிக்கிறான். தான் தனிமை வசப்பட்டிருப்பது மற்றும் மனிதர்கள் தன்னுடைய இருப்பையும் குணவியல்பையும் ஏற்றுக்கொள்ள மறுப்பது என்ற அடிப்படையில் தனக்கு ஒரு பெண் துணையை உருவாக்க வேண்டும் என்று ஃபிராங்கண்ஸ்டைனிடம் வேண்டுகோள் விடுத்து தன்னுடைய கதையை முடித்துக்கொள்கிறான். ஒரு உயிருள்ள மனிதனாக தான் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு தனக்கு உரிமையுண்டு என்றும், தன்னைப் படைத்தவனாக ஃபிராங்கண்ஸ்டைனுக்கு இந்தக் கடமை இருக்கிறது என்று அசுரன் வாதிடுகிறான். தனக்கு ஒரு துணையை உருவாக்கித் தந்தால் தான் மீண்டும் வரப்போவதில்லை என்று அவன் உறுதியளிக்கிறான்.

தன்னுடைய குடும்பத்தினர் குறித்த அச்சத்தினால் இதற்கு தயக்கத்தோடு ஒப்புக்கொள்ளும் ஃபிராங்கண்ஸ்டைன் தன்னுடைய வேலையச் செய்ய இங்கிலாந்திற்குச் செல்கிறார். கிளர்வால் ஃபிராங்கண்ஸ்டைன் உடன் வருகிறார், ஆனால் அவர்கள் ஸ்காட்லாந்தில் பிரிகின்றனர். ஆர்க்னே தீவுகளில் இரண்டாவதை உருவாக்கும் நிகழ்முறையில் மற்றொரு அசுரன் அழிவை ஏற்படுத்தக்கூடும் என்ற முன் அனுமானங்களால் பீடிக்கப்படுகிறார். ஃபிராங்கண்ஸ்டைன் முடிக்கப்படாத திட்டத்தை அழித்துவிடுகிறார். இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் அசுரன் ஃபிராங்கண்ஸ்டைனின் வரவிருக்கும் திருமண இரவில் பழிவாங்க சபதம் செய்கிறான். ஃபிராங்கண்ஸ்டைன் அயர்லாந்திற்கு திரும்பும் முன்னர் அசுரன் கிளர்வெலை கொலை செய்கிறான். அயர்லாந்திற்கு வரும் ஃபிராங்கண்ஸ்டைன் கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார் என்பதோடு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. நிரபராதி என்று விடுவிக்கப்பட்டு தன்னுடைய உடல் நலத்தை சரிசெய்துகொண்டுவிடுகின்ற ஃபிராங்கண்ஸ்டைன் தன்னுடைய தந்தையுடன் வீட்டிற்குத் திரும்புகிறார்.

வீட்டிற்கு வந்தவுடன் ஃபிராங்கண்ஸ்டைன் தன்னுடைய உறவினரான எலிசபெத்தை திருமணம் செய்துகொள்கிறார், அசுரனின் அச்சுறுத்தல் குறித்து முழுதாக தெரிந்த நிலையில் அசுரனுடன் மரணப் போராட்டத்திற்கு தயாராகிறார். அசுரனைப் பார்ககையில் எலிசபெத் பயந்துவிடக்கூடாது என்று விரும்பும் ஃபிராங்கண்ஸ்டைன் அன்றிரவு அவளை அறையிலேயே தங்கியிருக்கும்படி கேட்டுக்கொள்கிறார். தனிமையிலிருக்கும் எலிசபெத்தை அசுரன் கொன்றுவிடுகிறான். தன்னுடைய மனைவி, வில்லியம், ஜஸ்டின், கிளர்வல் மற்றும் எலிசபெத்தின் மரணத்தால் ஏற்பட்ட துயரத்தால் பீடிக்கப்பட்டு ஃபிராங்கண்ஸ்டைனின் தந்தையும் இறந்துவிடுகிறார். ஒருவர் மற்றொருவரை அழிக்கும்வரை அசுரனைத் தேடிக்கொண்டிருப்பது என்று ஃபிராங்கண்ஸ்டைன் உறுதியெடுத்துக்கொள்கிறார். பல மாதங்கள் தேடலுக்குப் பின்னர் அவர்கள் இருவரும் வட துருவத்திற்கு அருகாமையில் இருக்கும் ஆர்டிக் சுற்றில் சந்தித்துக்கொள்கின்றனர்.

வால்டனின் முடிவு விவரணை[தொகு]

ஃபிராங்கண்ஸ்டைன் விவரத்ததன் முடிவில் கேப்டன் வால்டன் இந்தக் கதையை சொல்லத் தொடங்குகிறார். ஃபிராங்கண்ஸ்டைன் தன்னுடைய கதையை சொல்லி முடித்த சில நாட்களுக்குப் பின்னர் வால்டனும் அவருடை குழுவினரும் பனிக்கட்டியை உடைப்பதில்லை என்றும் வீட்டிற்குத் திரும்புவது என்று தீர்மானிக்கின்றனர். ஃபிராங்கண்ஸ்டைன் இறக்கையில் அசுரன் அவருடைய அறையில் தோன்றுகிறான். கப்பலை விட்டு நீங்கும் முன்னர் தன்னுடைய பழிவாங்கள் குறித்த அசுரனின் உறுதியான நியாயப்படுத்தலையும், தவறுக்காக வருந்துவதையும் வால்டன் கேட்கிறார், அசுரன் துருவத்தை நோக்கிச் சென்று தான் இருந்ததை ஒருபோதும் ஒருவரும் தெரிந்துகொள்ளாமல் இருக்கும் விதமாக தன்னுடைய ஈமச்சடங்கு சிதையில் தன்னைத்தானே அழித்துக்கொள்ளப்போவதாகவும் கூறுகிறான்.

தொகுப்பு[தொகு]

ஃபிராங்கண்ஸ்டைன் முதல் எழுத்துப்படி("அது என்னுடைய மனிதனை நான் கண்டுபிடித்த பயங்கரமான இரவு...")

How I, then a young girl, came to think of, and to dilate upon, so very hideous an idea?[6]

"கோடைகாலம் இல்லாத வருடமான" 1816 ஆம் ஆண்டு மழைக்கால கோடையில் 1815 ஆம் ஆண்டில் டம்போரா மலையின் உமிழ்வால் ஏற்பட்ட நீண்டகால குளிர் எரிமலை மழைக்காலத்தில் உலகம் தன்னைப் பூட்டிக்கொண்டது.[7] பதினெட்டு வயதான மேரி வோல்ஸன்கிராப்ட் கோட்வினும், அவருடைய காதலரான (பின்னாளில் கணவரான) பெர்ஸி பைஷி ஷெல்லியும் சுவிட்சர்லாந்தில் உள்ள லேக் ஜெனிவாவில் இருக்கும் வில்லா டியோடடியில் பைரன் பிரபுவைக் காணச் சென்றனர்.

காலநிலை சீராக அதிக குளிர்ச்சியடைந்த கோடைகாலத்தில் அவர்கள் வெளியே செலவிட திட்டமிட்டிருந்தவை யாவற்றையும் செய்துமுடிக்க முடியாததால் அந்தக் குழு விடியும்வரை உள்ளேயே இருந்துகொண்டிருந்தனர்.

மற்ற விஷயங்களுக்கிடையே, அவர்களுடைய உரையாடல் ரசாயன மின்னியக்கம் மற்றும் ஒரு பிணத்தை திரும்பக்கொண்டுவருவது அல்லது உடல் பாகங்களை ஒன்றிணைத்து உயிர் தருவதன் சாத்தியத்தைப் பற்றியதாகவும், இறந்த பொருள்களுக்கு உயர் தரும் சோதனைகளை செய்துபார்த்த 18 ஆம் நூற்றாண்டு இயற்கைத் தத்துவவாதியும் கவிஞருமான எராஸ்மஸ் டார்வினை நோக்கியும் திரும்பியது.[8] பைரனின் மாளிகையில் மரத் தீயைச் சுற்றி அமர்ந்தபடி இந்தக் குழுவினர் ஜெர்மானிய பேய்க் கதைகளைப் படித்து தங்களை மகிழ்ச்சிப்படுத்திக்கொண்டனர், அவர்கள் ஒவ்வொருவரும் சொந்தமாக இயல்கடந்த கதை ஒன்றை எழுதும்படி பைரன் தூண்டினார். சற்று நேரத்தில் தூக்கத்திலிருந்து எழுந்த மேரி கோட்வின் ஃபிராங்கண்ஸ்டைன் கருத்தாக்கை உருவாக்கியிருந்தார்:

I saw the pale student of unhallowed arts kneeling beside the thing he had put together. I saw the hideous phantasm of a man stretched out, and then, on the working of some powerful engine, show signs of life, and stir with an uneasy, half vital motion. Frightful must it be; for SUPREMELY frightful would be the effect of any human endeavour to mock the stupendous mechanism of the Creator of the world.[9]

சிறுகதையாக அனுமானித்திருந்த கதையை அவர் எழுதத் தொடங்கினார். பெர்ஸி ஷெல்லியின் ஊக்கவிப்பால் அவர் அந்தக் கதையை ஒரு முழு நீள நாவலாக நீட்டித்தார்.[10] அவர் சுவிட்சர்லாந்தில் இருந்த அந்த கோடைகாலத்தை "நான் முதன்முறையாக குழந்தைப் பருவத்திலிருந்து வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த" தருணம் என்று பின்னாளில் குறிப்பிட்டிருந்தார்.[11] பால்கன் நாடுகளில் பயணம் செய்தபோது தான் கேட்டிருந்த இரத்தக் காட்டேரி கதைகளின் அடிப்படையில் பைரனால் ஒரு துணுக்கு கதையை மட்டுமே எழுத முடிந்தது, இதிலிருந்து ஜான் பொலிடோரி தி வாம்பயர் (1819) கதையை உருவாக்கினார், இது இரத்தக்காட்டேரி காதல் இலக்கிய வகைக்கு முன்னோடியாக அமைந்தது. இவ்வாறு, அந்த ஒரே சூழ்நிலையிலிருந்து இரண்டு முன்னோடியான திகில் கதைகள் தோன்றியிருந்தன.

1818 (எழுதப்பட்டது 1816–1817) இல் முதல் மூன்று தொகுப்பு பதிப்பிற்கான மேரி மற்றும் பெர்ஸி பைஷே ஷெல்லியின் எழுத்துப்படிகளும், பதிப்பாளருக்கான மேரி ஷெல்லியன் அசல் பிரதியும் தற்போது ஆக்ஸ்ஃபோர்ட் போட்லியன் நூலகத்தில் ஆவணமாக வைக்கப்பட்டிருக்கின்றன. போட்லியன் இந்தப் பிரதிகளை 2004 இல் பெற்றார், அவை தற்போது அபிஞ்சர் தொகுப்பிற்கு சொந்தமாக இருக்கின்றன.[12] 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 1 இல், பெர்ஸி ஷெல்லியன் கூடுதல் இணைப்புகள் மற்றும் குறுக்கீடுகள் ஆகியவற்றுடனான மெரி ஷெல்லியின் அசல் உரையின் ஒப்பீடுகளை உள்ளடக்கிய ஃபிராங்கண்ஸ்டைனின் புதிய பதிப்பை போட்லியன் பதிப்பித்திருக்கிறது. புதிய பதிப்பு சார்லஸ் இ. ராபின்ஸன் தொகுத்தது: தி ஒரிஜினல் ஃபிராங்கண்ஸ்டைன் (ISBN 978-1-85124-396-9).[13]

பதிப்பு[தொகு]

மேரி ஷெல்லி, ரிச்சர்ட் ரோட்வெல் ஓவியம் (1840–41)

மேரி ஷெல்லி 1817 ஆம் ஆண்டு மேயில் ஃபிராங்கண்ஸ்டைன்; அல்லது, நவீன பிரமீதீயஸை எழுதி முடித்தார், இது முதலில் 1818 ஆம் ஆண்டு ஜனவரி 1 இல் ஹார்டிங், மேவர் & ஜோன்ஸ் என்ற சிறிய லண்டன் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டது. பெயர் குறிப்பிடப்படாமல் வெளியிடப்பட்ட இதில், மேரிக்காக பெர்ஸி பைஷே ஷெல்லி எழுதிய முன்னுரை மற்றும் அவருடைய தந்தையான தத்துவவாதி வில்லயம் கோட்வினுக்கான அர்ப்பணிப்பு ஆகியவை இடம்பெற்றிருந்தன. இது மூன்று தொகுப்புக்களோடு வெறும் 500 பிரதிகள் மட்டுமே பதிப்பிக்கப்பட்டன, இது 19 ஆம் நூற்றாண்டு பதிப்புக்களுக்கான வழக்கமான "மூன்று-அடுக்கு" வடிவத்தில் இருந்ததாகும். இந்த நாவல் முதலில் பெர்ஸி பைஷே ஷெல்லியின் பதிப்பாளரான சார்லஸ் ஓலியர் மற்றும் பைரனின் பதிப்பாளர் ஜான் முர்ரே ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஃபிராங்கண்ஸ்டைனின் இரண்டாவது பதிப்பு 1823 ஆகஸ்ட் 11 இல் இரண்டு தொகுப்புகளாக பதிப்பிக்கப்பட்டது (ஜி. மற்றும் டபிள்யு.பி. விட்டேகர்), இந்த முறை மேரி ஷெல்லியின் பெயர் ஆசிரியராக பதிவானது.

1831 அக்டோபர் 31 இல், ஒரு தொகுப்பிலான முதல் "வெகுஜன" பதிப்பு வெளிவந்தது, இது ஹென்றி கோல்பர்ன் & ரிச்சர்ட் பெண்ட்லியால் பதிப்பிக்கப்பட்டது. இந்தப் பதிப்பு முற்றிலும் தீவிரமாக மேரி ஷெல்லியால் திருத்தியமைக்கப்பட்டது என்பதுடன் இந்தக் கதையின் தோற்ற மூலம் குறித்த அலங்காரமான பதிப்பை வழங்கும் நீண்ட முன்னுரையும் அவரால் இணைக்கப்பட்டது. இந்தப் பதிப்பு இன்று மிகவும் விரிவாக படிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது, இருப்பினும் 1818 ஆம் ஆண்டின் அசல் உரையை உள்ளிட்டிருக்கும் பதிப்புக்கள் இப்போதும் பதிப்பிக்கப்படுகின்றன. உண்மையில் பல ஆய்வாளர்கள் 1818 ஆம் ஆண்டு பதிப்பிற்கே முன்னுரிமையளிக்கின்றனர். இது ஷெல்லியின் அசலான ஜுவனைத் தக்கவைத்திருப்பதாக வாதிடுகின்றனர் (பார்க்க டபிள்யு. டபிள்யு, நார்டன் விமர்சனப் பதிப்பில் ஆன் கே. மெல்லரின் "சூஸிங் எ டெக்ஸ்ட் ஆஃப் ஃபிராங்கண்ஸ்டைன் டு டீச்").

பெயர் தோற்றங்கள்[தொகு]

ஃபிராங்கண்ஸ்டைன் உருவாக்கம்[தொகு]

ஆங்கில கேலிச்சித்திரம் வரைபவர் உருவாக்கிய ஃபிராங்கண்ஸ்டைன் அசுரனுடன் தொடர்புடைய ஐரிஷ்காரர்; 1843 ஆம் ஆண்டு வெளியீட்டைச் சேர்ந்த படம்.[14]

ஃபிராங்கண்ஸ்டைன் தன்னுடைய படைப்பை மறுதலித்ததன் ஒரு பகுதியாக உள்ள உண்மை என்னவெனின் அவர் அதற்கு பெயரிடவில்லை, இதனால் அது அடையாளமின்றிப் போகிறது. பதிலாக அது "அசுரன்", "பேய்", "பிசாசு", "ஈனன்", மற்றும் "அது" போன்ற வார்த்தைகளால் குறிப்பிடப்படுகிறது. ஃபிராங்கண்ஸ்டைன் பத்தாவது அத்தியாயத்தில் அசுரனுடன் உரையாடும்போது அவர் அதை "வெறுக்கத்தகுந்த பூச்சி", "விரும்பத்தகாத அசுரன்", "பிசாசு", "ஈன சாத்தான்" மற்றும் "விரும்பத்தகாத சாத்தான்" என்று குறிப்பிடுகிறார்.

ஃபிராங்கண்ஸ்டைன் சொல்லும்போது ஷெல்லி இந்தப் படைப்பை "ஆதாம்" என்று குறிப்பிடுகிறார். ஷெல்லி தனது கல்வெட்டுக் குறிப்பில் ஈடன் தோட்டத்தில் உள்ள முதல் மனிதனைக் குறிக்கிறார்:

என்னைக் களிமண்ணிலிருந்து படைத்த உன்னிடம் நான் வேண்டினேனா
என்னை மனிதனாக்கும்படி? நான் உன்னிடம் மன்றாடினேனா
இருளே என்னை மேம்படுத்து என்று?
ஜான் மில்டன், பாரடைஸ் லாஸ்ட் (X.743–5)

இந்த அசுரன் தவறுதலாக "ஃபிராங்கண்ஸ்டைன்" என்று அழைக்கப்படுகிறான். 1908 இல் ஒரு எழுத்தாளர் "அறிவிப்பூர்வமானவர்கள்கூட சில அருவருப்பான அசுரனை விவரிப்பதற்கு "ஃபிராங்கண்ஸ்டைன்" என்ற சொற்பதத்தை உலகம் முழுவதிலும் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனிப்பது விநோதமானது" என்று எழுதியிருக்கிறார்.[15] எடித் வார்டனின் தி ரீஃப் (1916) கட்டுக்கடங்காத குழந்தையை "குழந்தை ஃபிராங்கண்ஸ்டைன்" என்று குறிப்பிடுகிறது.[16] தி ரோவரில் 12 ஜுன் 1844 இல் பதிப்பிக்கப்பட்ட டேவிட் லிண்ட்ஸேயின் "தி பிரைடல் ஆர்ணமண்ட்" "மோசமான ஃபிராங்கண்ஸ்டைன் உருவாக்குநர்" என்று குறிப்பிடுகிறது. ஜேம்ஸ் வேலின் பிரபலமான 1931 ஆம் ஆண்டு திரைப்படமான ஃபிராங்கண்ஸ்டைன் வெளிவந்த பின்னர் பெரிய அளவிலான பொதுமக்கள் இந்த அசுரனை "ஃபிராங்கண்ஸ்டைன்" என்றே பேசத் தொடங்கினர். இதற்கான குறிப்பு பிரைட் ஆஃப் ஃபிராங்கண்ஸ்டைன் (1935) மற்றும் அதே தொடரில் அடுத்தடுத்து வந்த சில திரைப்படங்களிலும், அபாட் அண்ட் காஸ்டெல்லோ மீட் ஃபிராங்கண்ஸ்டைன் போன்ற திரைப்படத் தலைப்புகளிலும் தோன்றுகின்றன.

ஃபிராங்கண்ஸ்டைன்[தொகு]

மேரி ஷெல்லி "ஃபிராங்கண்ஸ்டைன்" என்ற பெயரை ஒரு கனவுக் காட்சியிலிருந்து பெற்றதாகவே கூறிவந்தார். அசல் படைப்பு என்ற அவருடைய கோருதல் இருந்தபோதிலும் இந்தப் பெயரின் முக்கியத்துவம் அனுமானத்திற்கான மூலாதாரமானது. நேரடியாகவே, ஜெர்மனில், ஃபிராங்கண்ஸ்டைன் என்றால் "ஃபிராங்குகளின் கல்" என்று பொருள். இந்தப் பெயர், மேரி ஷெல்லி இந்த நாவலை எழுதும் முன்னர் படகில் செல்லும்போது பார்த்திருக்கக்கூடிய ஃபிராங்கண்ஸ்டைன் கோட்டை (பர்க் ஃபிராங்கண்ஸ்டைன் ) போன்ற பல்வேறு இடங்களோடு இது சம்பந்தப்பட்டிருக்கிறது. ஃபிராங்கண்ஸ்டைன் பாலடினேட்டில் உள்ள நகராகவும் இருக்கிறது; 1946க்கு முன்னர் போலந்து சிலேசியாவில் உள்ள Ząbkowice Śląskie ஷிலேஷியா ஃபிராங்கண்ஸ்டைன் என்றே அறியப்பட்டது.

மிகச் சமீபத்தில், இன் சர்ச் ஆஃப் ஃபிராங்கண்ஸ்டைன் என்ற தன்னுடைய புத்தகத்தில் ராடு ஃப்ளோரஸூ, மேரியும் ஷெல்லியும் தாங்கள் சுவிட்சர்லாந்திற்கு செல்லும் வழியில் டர்மாஸ்டட் அருகில் ரைன் ஆற்றை சுற்றி அமைந்திருக்கும் ஃபிராங்கண்ஸ்டைன் கோட்டைக்கு வருகை புரிந்திருக்கின்றனர், அங்கே கான்ராட் டிப்பில் என்ற ரசவாதி மனித உடல்களைக் கொண்டு பரிசோதனை செய்திருக்கிறார், ஆனால் மேரி தன்னுடைய படைப்பு அசலானது என்ற பொதுக் கோருதலை தக்கவைத்துக்கொள்ள இந்த வருகையை வெளியிடவில்லை என்று வாதிடுகிறார். ஏ.ஜே.டே எழுதிய சமீபத்திய இலக்கியக் கட்டுரையில்[17] மேரி ஷெல்லி தன்னுடைய அறிமுக நாவலை எழுதுவதற்கு முன்பாக அவர் ஃபிராங்கண்ஸ்டைன் கோட்டைக்கு[18] சென்றுவந்திருக்கிறார் என்ற ஃப்ளோரஸூவின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறார். மேரி ஷெல்லியின் 'தொலைந்த' நாட்குறிப்புகளில் இருந்தது என்ற ஃபிராங்கண்ஸ்டைன் குறித்த குற்றச்சாட்டு ரீதியிலான விவரத்தை டே இணைத்திருக்கிறார். இருப்பினும், இந்தக் கருத்தமைவு குறித்த விமர்சனங்கள் இல்லாமல் இல்லை; ஃபிராங்கண்ஸ்டைன் நிபுணரான லியோனார்ட் வுல்ஃப் இதனை "ஏற்றுக்கொள்ள முடியாத...திட்டமிட்ட சதி"[19] என்கிறார், அத்துடன் 'தொலைந்த' நாட்குறிப்புகளும் ஃப்ளோரஸுவின் ஒப்புதல்களும் சரிபார்க்கப்படவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.[20]

விக்டர்[தொகு]

விக்டர் எனற பெயரின் சாத்தியமுள்ள விளக்கம் ஜான் மில்டன் எழுதிய பாரடைஸ் லாஸ்ட்டில் இருந்து பெறப்பட்டிருக்கிறது, இது ஷல்லியின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகும் (பாரடைஸ் லாஸ்ட்டைச் சேர்ந்த ஒரு மேற்கோள் ஃபிராங்கண்ஸ்டைனின் முதல் பக்கத்தில் காணப்படுகிறது என்பதுடன் ஷெல்லியும்கூட அந்த அசுரன் இதைப் படித்துப்பார்ப்பதற்கு அனுமதிக்கிறார்). மில்தொடர் கடவுளை "தி விக்டர்" என்றே பாரடைஸ் லாஸ்ட்டில் குறிப்பிடுகிறார், அத்ததுடன் வாழ்க்கையை உருவாக்கி விளையாடும் கடவுளாக ஷெல்லி விக்டரைப் பார்க்கிறார்.

இதற்கும் மேலாக, அசுரனை ஷெல்லி சித்தரித்த விதம் பாரடைஸ் லாஸ்ட்டில் உள்ள சாத்தான் கதாபாத்திரக்கும் அதிக கடன்பட்டிருக்கிறது; உண்மையில், காவியக் கவிதையைப் படித்த பின்னர் தான் சாத்தானின் கதாபாத்திரத்திற்காக அனுதாபப்படுவதாகவும் அசுரன் கூறுகிறான்.

விக்டருக்கும் மேரியின் கணவரான பெர்ஸி ஷெல்லிக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. விக்டர் என்பது பெர்ஸி ஷெல்லி அவருடைய சகோதரி எலிசபெத்துடன் இணைந்து எழுதிய கவிதைத் தொகுப்பில் அவருடைய புனைப்பெயராக இருக்கிறது, அதாவது அசல் கவிதை - எழுதியது - வி்க்டர் மற்றும் கேஸிர் .[21] விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனுக்கான மேரி ஷெல்லியின் மாதிரிகளுள் ஒன்றுதான் பெர்ஸி என்ற யூகமும் நிலவுகிறது, இவர் ஈடனில் "மின்சாரம் மற்றும் காந்தவிசையையும், வெடிமருந்து மற்றும் பல்வேறு ரசாயன எதிர்வினைகளையும் பரிசோதித்துப் பார்த்தவராவார்", அத்துடன் ஆக்ஸ்போர்டில் உள்ள அவருடைய அறை அறிவியல் உபகரணங்களால் நிரம்பியிருந்தது.[22] பெர்ஸி ஷெல்லி செல்வந்தரான கிராம நிலக்கிழாரும், வலுவான அரசியல் செல்வாக்குள்ள மற்றும் கோரிங் கோட்டை கோமகனான சர் பைஷே ஷெல்லி, மற்றும் அருண்டெல் முதல் இளவசரான ரிச்சர்ட் ஃபிட்ஸலானின் வழிவந்தவருடைய முதல் மகனாவார்.[23] விக்டரின் குடும்பம் அந்தக் குடியரசில் மிகவும் குறி்ப்பிடத்தக்க ஒன்றாக இருந்தது என்பதுடன் அவர்களுடைய முன்னோர்கள் நகர்மன்ற உறுப்பினர்களாகவும் அரசு அதிகாரிகளாகவும் இருந்தவர்கள். பெர்ஸிக்கு எலிசபெத் என்ற பெயர்கொண்ட சகோதரி உண்டு. விக்டருக்கு எலிசபெத் என்ற பெயர்கொண்ட தத்து சகோதரி உண்டு. 1815 பிப்ரவரி 22 இல், மேரி ஷெல்லி இரு மாதங்கள் முதிர்வுறாத குழந்தையைப் பெற்றெடுத்தார் அந்தக் குழந்தை இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இறந்துவிட்டது. பெர்ஸி அந்த முதிர்வுறாத குழந்தை குறித்து அக்கறை காட்டவில்லை என்பதோடு ஒரு மோசமான விவகாரத்திற்காக மேரியின் ஒன்றுவிட்ட சகோதரி கிளேரிடம் விட்டுவிட்டார்.[24] அந்த படைப்பிற்கு உயிர் வந்ததும் அதைப் பார்க்கும் விக்டர் இருப்பிடத்தை விட்டு சென்றுவிடுகிறார், இருப்பினும் புதிதாகப் பிறந்த அந்த உயிர் தன்னுடைய பெற்றோர் என்பதாக ஒரு குழந்தையாக அவரை அணுகுகிறது. அந்த உயிருக்கு விக்டரின் பொறுப்பு குறித்த கேள்வி இந்தப் புத்தகத்தின் முக்கியமான கருக்களுள் ஒன்றாக இருக்கிறது.

நவீன பிரமீதீயஸ்[தொகு]

நவீன பிரமீதீயஸ் என்பது நாவலின் துணைத்தலைப்பாகும் (சில நவீன பதிப்புகள் இந்தத் துணைத்தலைப்பை விட்டுவிட்டன, அது வெறும் அறிமுகம் மட்டுமே என்று குறிப்பிடுகின்றன). கிரேக்க தொன்மத்தின் வடிவங்களுள் ஒன்றான பிரமீதீயஸ் மனிதகுலத்தை உருவாக்கிய டைட்டன் ஆவார். சொர்க்கத்திலிருந்து ரகசியமாக தீயை எடுத்து அதை மனிதர்களுக்கு அளித்ததும் பிரமீதீயஸ்தான். சியுசு இதைக் கண்டுபிடித்ததும், அவர் பிரமீதீயஸை ஒரு பாறையில் வைத்து கட்டுகிறார், தினமும் ஒரு வேட்டைப் பறவை வந்து அவருடைய கல்லீரலை கொத்தித் திண்ணும், மறுநாள்தான் அந்த கல்லீரல் மீண்டும் வளரும் எனும்படி தண்டனையளிக்கிறார்; ஹீராக்கிள்ஸ் (ஹெர்குலிஸ்) வந்து அவரை மீட்கும்வரை அந்தப் பறவை மீண்டும் வந்துகொண்டிருந்தது.

பிரமீதீயஸ் லத்தீன் தொன்மத்திலும் குறிப்பிடப்படுகிறார், ஆனால் வேறுபட்ட கதையோடு. இந்தப் பதிப்பில் பிரமீதீயஸ் மனிதனை களிமண் மற்றும் தண்ணீரிலிருந்து உருவாக்குகிறார், இதுவும்கூட விக்டர் இயற்கையின் விதிகளுக்கு (வாழ்வு இயல்பாக எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது) எதிராக கலகம் செய்வதும், அதற்குப் பலனாக தண்டனை அடைவதுமாக ஃபிராங்கண்ஸ்டைனுக்கான கருவாக அமைந்திருக்கிறது.

1910 இல், எடிசன் ஸ்டுடியோஸ் ஷெல்லியின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் சலனப் படத்தை வெளியிட்டது.

பிரமீதீயஸின் கிரேக்க தொன்மத்தில் வரும் டைட்டன் விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனுக்கு இணையாக இருக்கிறார். மனிதர்களை உருவாக்குவதில் டைட்டனின் புத்துருவாக்கப் பணிக்கு ஒத்ததாக புதிய அர்த்தங்களைப் பிரதிபலிப்பதன் மூலம் விக்டரின் பணியும் மனிதனை உருவாக்குவதாக இருக்கிறது. இவ்வழியில் சொர்க்கத்திடமிருந்து டைட்டன் தீயைத் திருடி மனிதர்களுக்கு அளித்ததைப் போன்று விக்டர் கடவுளிடமிருந்து படைப்பு ரகசியத்தைத் திருடுகிறார். டைட்டன் மற்றும் விக்டர் ஆகிய இருவருமே தங்களுடைய செயல்களுக்காக தண்டிக்கப்படுகின்றனர். விக்டர் தனக்கு நெருக்கமானவர்களின் இழப்பால் பாதிக்கப்படுவதன் மூலம் கண்டிக்கப்படுகிறார், தன்னுடைய படைப்பால் கொலைசெய்யப்படுவோம் என்ற பேரச்சத்தால் அவர் பீடிக்கப்படுகிறார்.

மேரி ஷெல்லிக்கு பிரமீதீயஸ் கதாநாயகன் அல்ல, ஒருவகையான பேய், அவனை அவர் மனிதர்களுக்கு நெருப்பைக் கொணர்ந்து மனித இனத்தை சுவைமிக்க உணவை உண்ணும்படி தூண்டியதாக குற்றம்சாட்டுகிறார் (வேட்டையாடுதல் மற்றும் கொலை செய்தலைத் தூண்டும் சமைத்தல் என்பதை நெருப்பு கொண்டுவந்துவிடுகிறது).[25] இந்த ஒப்புதலுக்கான ஆதரவு இந்த நாவலின் 17வது அத்தியாயத்தில் காணப்படுவதாக இருக்கலாம், இங்கே "அசுரன்" விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனிடம் பின்வருமாறு பேசுகிறான்: "என்னுடைய உணவு அந்த மனிதன் அல்ல; என்னுடைய பசியை ஆற்றிக்கொள்ள நான் அந்தப் பையனையும் ஆட்டையும் கொல்லவில்லை; சோளமும் பெர்ரிக்களுமே என்னுடைய ஊட்டச்சத்திற்கு போதுமானவையாக இருக்கின்றன." ரொமாண்டிக் யுகத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு, மனிதர்களுக்கான பிரமீதீயஸின் பரிது 18 ஆம் நூற்றாண்டின் இரண்டு பெரிய உடோப்பிய உறுதிப்பாடுகளின் எதிரொலியாக இருக்கிறது: தொழில் புரட்சி மற்றும் பிரெஞ்சு புரட்சி, இவை இரண்டுமே உறுதிப்பாடுகளையும் அறியப்படாத சாத்தியமுள்ள குரூரம் ஆகிய இரண்டையும் கொண்டிருந்தன.

பைரன் குறிப்பாக அஸ்கிலஸ் எழுதிய பிரமீதீயஸ் பவுண்ட் என்ற நாடகத்தோடு பற்று கொண்டிருந்தார், பெர்ஸி ஷெல்லி விரைவிலேயே தன்னுடைய பிரமீதீயஸ் அண்பவுண்ட் (1820) நாடகத்தை எழுதவிருந்தார். "நவீன பிரமீதீயஸ்" என்ற சொற்பதம் உண்மையில் பெஞ்சமின் ஃபிராங்க்ளினையும் அவருடைய அப்போதைய சமீபத்திய பரிசோதனைகளாக இருந்த மின்சாரம் குறித்த பரிசோதனைகளையும் குறிப்பிடுவதற்கு இம்மாணுவல் காண்ட்டால் உருவாக்கப்பட்டதாகும்.[26]

ஷெல்லியின் மூலாதாரங்கள்[தொகு]

ஷெல்லி தன்னுடைய படைப்போடு நிறைய மூலாதாரங்களை இணைத்துக்கொண்டிருந்தார், இவற்றில் ஒன்று ஒவிட்டைச் சேர்ந்த பிரமீதீயன் தொன்மம் ஆகும். ஜான் மில்லடனுடைய பாரடைஸ் லாஸ்ட் , சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜின் தி ரிம் ஆஃப் தி ஏன்ஷியண்ட் மரைனர் ஆகியவற்றின் தாக்கம் அந்த அசுரன் அவற்றைக் கேபினில் காண்பது இந்த நாவலில் சொல்லப்படுவதன் மூலம் தெள்ளத்தெளிவாகிறது. அத்துடன், இரண்டு ஷெல்லிக்களும் வில்லியம் தாமஸ் பெக்ஃபோர்டின் கோதிக் நாவலான வாடெக்கைப் படித்திருக்கின்றனர்.[சான்று தேவை] ஃபிராங்கண்ஸ்டைன் அவருடைய தாயார் மேரி வோல்ட்ஸ்டன்கிராஃப்டிற்கான நிறைய குறிப்புகளையும் உள்ளிட்டிருந்தது, அத்துடன் அவருடைய பிரதான படைப்பான எ விண்டிகேஷன் ஆஃப் தி ரைட்ஸ் ஆஃப் உமன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சமநிலையற்ற கல்வி குறித்து விவாதித்தது. அவருடைய படைப்பில் தன்னுடைய தாயாரின் கருத்தாக்கங்கள் என்ற உள்ளிடல் இந்த நாவில் படைப்பின் கருவோடும் தாய்மையோடு தொடர்புகொண்டதாக இருக்கிறது. ஃபிராங்கண்ஸ்டைன் கதாபாத்திரத்திற்கான சில கருத்தாங்களை ஹம்ப்ரி டேவியின் புத்தகமான எலிமண்ட்ஸ் ஆஃப் கெமிக்கல் ஃபிலாசபியிலிருந்து மேரி பெற்றுக்கொண்டிருக்கலாம், இந்தப் புத்தகம் குறித்து அவர் "படைப்பு என்று அழைக்கப்படக்கூடிய மனித சக்திகளுக்கு அறிவியல் வழங்கியிருக்கக்கூடியது; இவை அவனைச் சுற்றியுள்ள இருப்புக்களை மாற்றவும் மேம்படுத்தவும் அவனுக்கு சக்தியளிக்கக்கூடியவை..." என்று எழுதியிருக்கிறார்.

பகுப்பாய்வு[தொகு]

தன்னுடைய நாவலைப் பற்றிய ஒரு விளக்கம் அவர் தன்னுடைய தந்தையான வில்லியம் கோல்ட்வினின் அடிப்படைவாத அரசியல் குறித்து எழுதும்போது ஷெல்லியாலேயே மறைகுறிப்பாகத் தரப்படுகிறது:

The giant now awoke. The mind, never torpid, but never rouzed to its full energies, received the spark which lit it into an unextinguishable flame. Who can now tell the feelings of liberal men on the first outbreak of the French Revolution. In but too short a time afterwards it became tarnished by the vices of Orléans — dimmed by the want of talent of the Girondists — deformed and blood-stained by the Jacobins.[27]

ஒரு கட்டத்தில் ஷெல்லியின் நாவலில் அந்த அசுரன் பனிக்கட்டியாற்றில் விக்டரை எதிர்கொள்கிறான். அந்த அசுரன் தன்னுடைய தனிமையையும் தான் கைவிடப்பட்டதையும் விளக்குகிறான். விக்டரால் இப்போதும் தான் அந்த அசுரனைக் கைவிட்டதாக பார்க்க முடியவில்லை, தன்னுடைய பெற்றோர்கள் தான் குழந்தையாக இருக்கும்போது செய்ததைப் போன்று தான் அந்த அசுரனை நேசிக்கவும் அவனுக்காக நேரத்தை செலவிடவும் விரும்புவதாக நினைக்கிறார். இதுபோன்று விக்டருக்கு பற்றில்லாமல் போனது எதனால்? தன்னை ஒரு பெற்றோராக அவரால் ஏன் பார்க்க முடியவில்லை? தி நைட்மேர் ஆஃப் ரொமாண்டிக் ஐடியலிஸம் என்ற கட்டுரையில் அதன் ஆசிரியர், "ஃபிராங்கண்ஸ்டைன் தந்தையாகிவிடும்போது […], அவர் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளிடத்தில் கொண்டிருக்க வேண்டிய கடமைகளை வசதியாக மறந்துவிடுகிறார் […] ஒரு படைத்தோனாக அவரிடம் இல்லாத ஒரு பண்பு என்னவெனில் ‘தாங்கள் வாழ்வளித்த உயிரிடத்தில் அவர்கள் கடமைப்பட்டிருக்கும் ஆழமான பிரக்ஞை’ என்ற தன்னுடைய சொந்த பெற்றோர்களிடத்தில் இருந்த பாராட்டுணர்வு அவரிடம் இல்லாமல் போனதுதான் " (ஷெல்லி 391) "[ஃபிராங்கண்ஸ்டைனால்] வாழ்வில் வயது முதிர்ந்த பாத்திரம் ஏற்றுக்கொள்ள மறுக்கப்படுவதால் […] அவர் படைப்பதற்கான சக்தியைத் […] தக்கவைத்துக்கொள்கிறார். அதேநேரத்தில் அவர் முற்றிலும் பொறுப்பற்றவராக இருக்கிறார் […] அத்துடன் தன்னுடைய ஒப்பந்தங்களின் தொடர்விளைவுகளை எதிர்கொள்ளும் துணிச்சலின்றியும் இருக்கிறார்" என்றும் இந்த ஆசிரியர் வாதிடுகிறார்.(ஷெல்லி 391) இந்தப் பத்திகள் விக்டர் தன்னுடைய படைப்பை நோக்கி தன்னுடைய மனதை அமைத்துக்கொண்ட விதத்தை விளக்குவதற்கு உதவுகிறது. எதிர்பாராதவிதமாக, விக்டரின் மகிழ்ச்சியான குழந்தைப்பருவம் யதார்த்த உலகிற்கு தயாராகவில்லை. அவர் வளரவேயில்லை என்பதோடு தன்னுடைய செயல்களுக்கான பொறுப்பையும் அவர் எடுத்துக்கொள்ளவில்லை. ஃபிராங்கண்ஸ்டைன் படைத்தவருக்கும் படைப்புக்கும் இடையிலுள்ள உறவையும், அன்பின் உலகளாவிய தேவை மற்றும் ஒருவருடைய பெற்றோர் மற்றும் சமூகத்திடமிருந்து ஏற்பிற்கான தேவையையும் கண்டுபிடிக்க முயல்கிறது. தன்னுடைய படைப்பை விக்டர் மறுதலிப்பது அந்த அசுரனை யாருமற்றவனாக்குகிறது, இந்த படைப்பினிடத்தில் கலங்க வைக்கும் கோபம் மற்றும் சீற்றத்தை உருவாக்குகிறது, அதனால் அவன் விக்டர் தன்னை மாய்த்துக்கொண்டும், அந்த அசுரன் தன்னை அழித்துக்கொள்ள விலகும் வரையிலும் விக்டரின் அன்புக்குரியவர்களைக் கொன்று குரூரமாக எதிர்வினை புரிகிறான்.

ஃபிராங்கண்ஸ்டைனில் காணக்கிடைக்கும் மற்றொரு கரு தனிமையும், அது மனிதர்கள் மீது ஏற்படுத்தும் விளைவும் ஆகும். இந்தக் கரு மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் சிந்தனைகள் மற்றும் அனுபவங்கள் வழியாக தெரிய வருகிறது: வால்டன், ஃபிராங்கண்ஸ்டைன் மற்றும் அசுரன். இந்தக் கதையின் தொடக்கத்தில் வரும் கடிதங்கள் முற்றிலும் வால்டனின் சாகசம் அதனுடைய மேன்மையையும் கவர்ச்சியையும் இழக்கத்தொடங்கும்போது தோன்றும் தனிமையின் உணர்வுகளாக இருக்கிறது. விக்டர் இந்தப் புத்தகம் முழுவதிலும் அச்சத்தையும் கவலையையுமே எதிர்கொள்கிறார். கதையின் தொடக்கத்தில் விக்டரின் வேலை அவரை அவருடைய குடும்பத்திலிருந்து பிரிக்கிறது. அவர் பல வருடங்களைத் தனிமையிலேயே கழிக்கிறார். அவருடைய குடும்பமும் நண்பர்களும் கதையில் பின்னாளில் இறக்கத்தொடங்கும்போது இந்த ஆரோக்கியமற்ற உணர்வுகள் தீவிரமடைகின்றன. அவர் "நீடித்த முதல் அதிர்ச்சியிலிருந்து முற்றிலுமாக மீண்டுவிட்ட இந்த மனநிலை என் ஆரோக்கியத்தை காவுகொள்கிறது. நான் மனிதனின் முகத்தைத் தவிர்த்தேன்; மகிழ்ச்சி அல்லது மனநிறைவின் ஓசைகள் அனைத்தும் என்னை வதைத்தன; தனிமை மட்டுமே என்னுடைய ஒரே ஆறுதல் - ஆழ்ந்த, இருளடைந்த, மரணம் போன்ற தனிமை.” ஃபிராங்கண்ஸ்டைன் பின்வருமாறு கூறுகையில் இதேபோன்ற உணர்ச்சிகளைக் காட்டுகிறார் "இவ்வகையில் அமைவிக்கப்பட்ட சூழ்நிலையில் மிகவும் வெறுக்கத்தக்க வேலையில் ஈடுபடுவது, நான் ஈடுபட்டுள்ள உண்மைக் காட்சியிலிருந்து உடனடியாக என் கவனத்தை ஈர்ப்பதற்கான எதுவும் இல்லாத தனிமையில் மூழ்கிவிடுவது என் ஆன்மா சமநிலை குலைந்துபோகிறது; நான் அமைதியின்றியும் படபடப்புடனே பிறந்தேன்.” தனிமை தன்னை எவ்வளவு அழிவுப்பூர்மாக மாற்றிவிட்டது என்று பின்வருமாறு கூறுகையில் அசுரன சுருக்கமாக விவரிக்கிறான் “மாண்புமிக்க மற்றும் இயல்கடந்த அழகின் தொலைநோக்கு மற்றும் நற்பேறின் மாண்பு ஆகியவற்றால் நிரம்பியிருக்கும் ஒருவருடைய சிந்தனையின் பிறப்பாக நான் இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் அது இவ்வாறுதான் நடந்தது; வீழ்ந்துவிட்ட தேவதை ஒரு குரோதம் நிறைந்த பேய் ஆகிவிட்டது. இன்னும் கடவுள் மற்றும் மனிதனின் எதிரி தன்னுடைய தனிமையில் நண்பர்களையும் கூட்டாளிகளையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்; நான் முற்றிலும் தனிமையாகிவிட்டேன்.” ஷெல்லி தெளிவாகவே இந்தக் கருவை நாடியறிகிறார், தனிமை அவருடைய மையக் கதாபாத்திரங்களுக்கான மையக் கருவாக இருக்கிறது.

நைட்மேர்: பர்த் ஆஃப் ஹானரில் கிறிஸ்டோபர் ஃபிரேலிங் ஷெல்லி ஒரு சைவ உணவுக்காரர் என்பதால் நாவலில் விவரிக்கப்பட்டுள்ள வெட்டிக்கூறுபடுத்தலுக்கு எதிராக விவாதிக்கிறார். 3வது அத்தியாயத்தில் விக்டர் "உயிரற்ற களிமண்ணாக உருவாக்குவதற்கு வாழும் விலங்கை வதைத்தது" என்று எழுதுகிறார். அந்த அசுரன் கூறுகிறான்: "அந்த மனிதன் என்னுடைய உணவு அல்ல; என்னுடைய பசியை ஆற்றிக்கொள்ள நான் அந்த ஆட்டையும் மனிதனையும் கொல்லவில்லை."

சிறுபான்மை அபிப்பிராயத்தைக் குறிப்பிடும் ஆர்தர் பெல்ஃபேண்ட் தன்னுடைய ஃபிராங்கண்ஸ்டைன், தி மேன் அண்ட் தி மான்ஸ்டர் (1999, ISBN 0-9629555-8-2) என்ற புத்தகத்தில் மேரி ஷெல்லியின் நோக்கம் அந்த அசுரன் என்ற ஒருவன் இல்லவே இல்லை என்றும், விக்டர் ஃபிராங்கண்ஸ்டைன் மூன்று கொலைகளைச் செய்கிறார் என்றும் வாசகரைப் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்பதே என்று வாதிடுகிறார். இந்த விளக்கத்தில், இந்தக் கதை விக்டரின் அறம்சார் தரக்குறைவு குறித்த ஆய்வாக இருக்கிறது என்பதுடன் இந்தக் கதையின் அறிவியல் புனைவு அம்சங்கள் விக்டரின் கற்பனையே.

மற்றொரு சிறுபான்மை அபிப்பிராயமாக விமர்சகர் ஜான் லாரிட்ஸன் தன்னுடைய 2007 ஆம் ஆண்டு புத்தகமான "தி மேன் ஹு ரோட் ஃபிராங்கண்ஸ்டைனில் ",[28] மேரியின் கணவரான பெர்ஸி பைஷே ஷெல்லியே இதன் ஆசிரியர் என்று குறிப்பிடுகிறார். லாரிட்ஸனின் கருதுகோளுக்கு முக்கியமான மேரி ஷெல்லியின் ஆய்வாளர்களால் ஆதரவு அளிக்கப்படவில்லை[சான்று தேவை], ஆனால் இந்தப் புத்தகம் விமர்சகர் கேமிலி பேக்லியாவின்[29] பாராட்டுதலையும், ஜெர்மெய்ன் கிரீரின் விமர்சனத்தையும் பெற்றது.[30]

டெலாவர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆங்கிலப் பேராசிரியரான சார்லஸ் இ. ராபின்ஸன் தன்னுடைய 2008 ஆம் ஆண்டு ஃபிராங்கண்ஸ்டைன் பதிப்பில் இந்த விவாதத்திற்குரிய கூற்றிற்கு ஓரளவு ஆதரவளிக்கிறார். ராபின்ஸன் கையெழுத்துப் பிரதிகளை மீண்டும் பார்வையிட்டார் என்பதோடு ஃபிராங்கண்ஸ்டைன் கையெழுத்துப்படிகள் முழுவதிலும் பெர்ஸி ஷெல்லியின் உதவி இருந்ததையும் ஏற்றுக்கொள்கிறார்.[சான்று தேவை]

வரவேற்பு[தொகு]

இந்தப் புத்தகத்திற்கான தொடக்கநிலை விமர்சன வரவேற்பு சாதகமானதாக இல்லை, ஆசிரியரின் அடையாளம் குறித்த குழப்பமான யூகங்களால் இது சூழ்ந்திருந்தது. சர் வால்டர் ஸ்காட் "முழுமையாகப் பார்க்கையில் இந்தப் படைப்பு ஆசிரியரின் அசலான மேதைமையும் வெளிப்படுத்தலின் மகிழ்ச்சியான சக்தியும் சேர்ந்து எங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது", ஆனால் பெரும்பாலான விமர்சகர்கள் இதை "பயங்கரமான அருவருப்பை ஏற்படுத்தும் முட்டாள்தனமான பின்னல்" என்று கருதுகின்றனர் (குவார்டர்லி ரிவ்யூ ).

இத்தகையா விமர்சனங்கள் இருந்தபோதிலும் ஃபிராங்கண்ஸ்டைன் உடனடி வெகுஜன வெற்றியைப் பெற்றது. இது மெலோடிராமா நாடக அரங்கு தழுவல்களின் மூலமாக பரவலான புகழ்பெற்றது - மேரி ஷெல்லி 1823 இல் ரிச்சர்ட் பிரின்ஸ்லே பீகேயின் நாடகமான பிரிசம்ஷன்; ஆர் தி ஃபேட் ஆஃப் ஃபிராங்கண்ஸ்டைன் என்ற நாடகத்தின் தயாரிப்பைப் பார்த்திருக்கிறார். பிரெஞ்சு மொழிபெயர்ப்பு 1821 இல் வெளிவந்திருக்கிறது (ஃபிராங்கண்ஸ்டைன்: ou le Prométhée Moderne மொழிபெயர்ப்பு ஜுல்ஸ் சலாதின்).

ஃபிராங்கண்ஸ்டைன் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதுடன் 1818 இல் பெயர் குறிப்பிடாமல் வெளிவந்ததால் அலட்சியம் செய்யப்பட்டும் இருக்கிறது. அந்தக் காலத்தைச் சேர்ந்த விமர்சனக் கண்ணோட்டங்கள் இரண்டு பார்வைகளை முன்வைக்கின்றன. பெல்லே அசெம்பிளி இந்த நாவலை "மிகவும் துணிச்சலான புனைவு" என்று குறிப்பிட்டிருக்கிறது (139). குவார்டர்லி ரிவ்யூ "கருத்துருவாக்கம் மற்றும் மொழி ஆகிய இரண்டிலுமே ஆசிரியர் வலிமையை பெற்றிருக்கிறார்" என்று கூறியிருந்தது (185). பிளாக்வுட்டின் எடின்பர்க் பத்திரிக்கையில் சர் வால்டர் ஸ்காட் இதன் ஆசிரியரை "அசலான மேதைமையும் வெளிப்படுத்தலின் மகிழ்ச்சியான சக்தியும்" என்று பாராட்டியிருந்தார், இருப்பினும் ஆசிரியர் அந்த அசுரன் உலகையும் மொழியையும் பற்றிய அறிவைப் பெறும் முறையை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளும்படிச் செய்யவில்லை.[31] எடின்பர்க் மேகஸின் மற்றும் லிட்டரரி மி்ஸ்ஸிலேனி "இந்த ஆசிரியரிடமிருந்து மிகவும் ஆக்கப்பூர்வமான படைப்புகளை" எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்திருந்தது (253).

இதன் ஆசிரியர் வில்லியம் கோல்ட்வினின் மகளாக அறியப்படுகின்ற இரண்டு விமர்சனப் பார்வைகளில் இந்த நாவலின் விமர்சனம் மேரி ஷெல்லியின் பெண் இயல்பின் மீது தாக்குதல் தொடுக்கிறது. பிரித்தானிய விமர்சகர்கள் இந்த நாவலின் குறைபாடுகளை ஆசிரியரின் தவறு என்றே விமர்சித்தனர்: "இதை எழுதியவர் ஒரு பெண் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்; இந்த நாவலில் மேலோங்கியிருக்கும் தவறு இதை இன்னும் மோசமாக்குகிறது; ஆனால் நம்முடைய ஆசிரியை தன்னுடைய பாலினத்தின் மேன்மையை மறந்திருப்பாரேயானால், நாமும் ஏன் கூடாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை; அத்துடன் நாம் மேற்கொண்டு கருத்தேதும் கூறாமல் இந்த நாவலை தள்ளுபடி செய்துவிடலாம்" (438). லிட்டரரி பனோரமா மற்றும் நேஷனல் ரிஜிஸ்டர் ஆகியவை இந்த நாவலை "பிரபலமான வாழும் நாவலாசிரியரின் மகளால்" படைக்கப்பட்ட "மிஸ்டர் கோல்ட்வின் நாவல்களின் அற்பமான சாயல்" என்று கடுமையாக விமர்சித்திருந்தது (414).

இந்த தொடக்ககால தள்ளுபடிகள் இருந்தபோதிலும் 20 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலிருந்து விமர்சன வரவேற்பு பெருமளவிற்கு நேர்மறையானதாகவே இருந்தது.[32] எம்.ஏ. கோல்ட்பெர்க் மற்றும் ஹெரால்ட் புளூம் போன்ற முன்னணி விமர்சகர்கள் இந்த நாவலின் "அழகியல் மற்றும் அறம்சார்" சார்புநிலையைப் பாராட்டினர்[33] என்பதோடு சமீபத்திய ஆண்டுகளில் இந்த நாவல் உளவியல் பகுப்பாய்வு மற்றும் பெண்ணிய விமர்சனங்களுக்குரிய பிரபலமான விஷயமாக இருந்துவருகிறது. இந்த நாவல் இன்று பொதுவாக ரொமாண்டிக் யுகம் மற்றும் கோதிக் இலக்கியம், மற்றும் அறிவியல் புனைகதை ஆகியவற்றிற்கான முக்கியப் படைப்பாக கருதப்படுகிறது.[34]

வெகுஜன கலாச்சாரத்தில் ஃபிராங்கண்ஸ்டைன்[தொகு]

பிரைட் ஆஃப் ஃபிராங்கண்ஸ்டைனில் (1935) வரும் காவிய அசுரனும், ஃபிராங்கண்ஸ்டைன் அசுரன் குறித்த ஹாலிவுட்டின் விளக்கமுமாக இருக்கும் போரிஸ் கார்லாஃப், ஜேக் பியர்ஸின் ஒப்பனை.

ஷெல்லியின் ஃபிராங்கண்ஸ்டைன் தற்போது பிரபலமாகியிருக்கும் பித்த அறிவியலாளர் வகையின் முதல் நாவல் என்று அழைக்கப்படுகிறது.[35] இருப்பினும், வெகுஜன கலாச்சாரம் விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனை எளிமையான, சிறந்த பொருளைத் தரக்கூடிய மிகமிக களங்கமுற்ற கதாபாத்திரமாக மாற்றிவிட்டது. இது அந்த அசுரனை உண்மையில் சித்தரிக்கப்பட்டதைக் காட்டிலும் மிகவும் உணர்ச்சிபெருக்குள்ள, மனிதத் தன்மை நீக்கப்பெற்ற ஒன்றாகவும் மாற்றிவிட்டது. அசல் கதையில் விகடர் செய்யும் மிக மோசமான விஷயம் என்னவெனில் இந்த அசுரனை பயமில்லாதவனாக படைத்ததுதான். திகிலை உருவாக்குவது அவர் நோக்கமாக இருக்கவில்லை. மேலும் இந்த அசுரனும்கூட ஒரு அப்பாவியான, விரும்பத்தகுந்த உயிராகவே தொடங்குகிறான். உலகம் அவன் மீது வன்முறையைத் திணித்து அவன் வெறுக்கத் தொடங்கும்வரை கூட அல்ல. அறிவியல்பூர்வ அறிவு தீமைக்கு சாத்தியமுள்ளதாகவும் அபாயகரமான முறையில் கவர்ந்திழுப்பதாகவும் நாவலின் முடிவில் விக்டரால் குறிப்பிடப்படுகிறது.[36]

இருப்பினும் இந்தப் புத்தகம் பதிப்பிக்கப்பட்ட உடனேயே, மேடை நாடக இயக்குநர்கள் இந்தக் கதையை மிகவும் காட்சிப்பூர்வமாகப் படைப்பதில் உள்ள பிரச்சினையைக் காணத்தொடங்கினர். 1823 இல் தொடங்கிய நாடகங்களில், நாடக எழுத்தாளர்கள் நாடகத்தைக் காட்சிப்படுத்தியது, அறிவியலாளரின் உள்புற பகுத்தறிவு மற்றும் அந்த அசுரன் வெட்டிவிடப்படுவது ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். அசுரன் தன்னுடைய காட்சிப்பூர்வமான மற்றும் மிகவும் உணர்ச்சிப்பெருக்கான வன்முறையால் அந்த நிகழ்ச்சியின் நட்சத்திரமானான். இயற்கையின் புதிர்களை ஆராய்வதற்காக விக்டர் முட்டாளாக சித்தரிக்கப்படுகிறார். இந்த மாற்றங்கள் இருந்தபோதிலும் பின்னாளில் வந்த திரைப்படங்களைக் காட்டிலும் இந்த நாடகம் அசலான படைப்பிற்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது.[37] சித்திரக்கதை பதிப்புக்களும் நிறைய வெளிவந்திருக்கின்றன, அத்துடன் ஃபிராங்கண்ஸ்டைன், ஆர் தி வாம்பயர்ஸ் விக்டிம் என்ற இசை பகடிப் பதிப்பு 1887 இல் லண்டனில் தயாரிக்கப்பட்டது.[38]

ஊமைப் படங்கள் இந்தக் கதையை உயிருடன் வழங்குவதைத் தொடர்வதற்கு போராடின. எடிசன் கம்பெனியின் ஒரு ரீல் ஃபிராங்கண்ஸ்டைன் (1910) மற்றும் லைஃப் வித்தவுட் சோல் (1915) என்ற திரைப்படம் போன்ற முந்தைய வடிவங்கள் கருவிற்கு நெருக்கமான வகையில் இருப்பதற்கு முனைந்தன. இருப்பினும், 1931 இல் ஜேம்ஸ் வேல் இந்தக் கதையை அதிரடியாக மாற்றி ஒரு திரைப்படத்தை இயக்கினார். யுனிவர்சல் பிக்சர்ஸில் பணியாற்றி வேலின் திரைப்படம் "டாக்டரின்" பிம்பம் என்று நவீன பார்வையாளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கின்ற சில ஆக்கக்கூறுகளை கதையின் கருவோடு சேர்த்திருந்தார். ஃபிராங்கண்ஸ்டைன் தொடக்கத்தில் ஒரு இயல்பான, இளம் மாணவராக இருக்கிறார்; உடல் பாகங்களை சேகரித்துக்கொண்டே தன்னுடைய எஜமானருக்கு ஒரு குற்றச்செயல் மூளையைக் கொண்டுவரும் தவறைச் செய்கின்ற இகோர்-போன்ற பாத்திரங்களின் (இந்தப் படத்தில் ஃபிரிட்ஸ் என்று அழைக்கப்படுவது) அறிமுகம்; மற்றும் பரபரப்பான படைப்பு உருவாக்க காட்சி ரசாயன நிகழ்முறைகளைக் காட்டிலும் மின்சார சக்தியிலேயே கவனத்தை செலுத்தியது. (ஷெல்லியின் அசல் உரையில் கதை சொல்பவராக வரும் ஃபிராங்கண்ஸ்டைன் தான் அசுரனை இந்த உலகிற்கு கொண்டுவந்த நிகழ்முறைகளை விவரிப்பதை உள்நோக்கத்தோடு தவிர்த்துவிடுகிறார், இதேபோன்ற பரிசோதனையை வேறு யாரேனும் செய்து பார்க்க முயற்சிப்பார்களோ என்ற அச்சமே காரணம்.) இந்தத் திரைப்படத்தில், அறிவியலாளர் இளமையை அறிந்துகொள்வதைக் காட்டிலும் ஒரு திமிர்பிடித்த, அறிவுஜீவியான, வளர்ந்த மனிதனாக வருகிறார். மற்ற அறிவியலாளர் தன்னார்வலர்கள் அவருக்காக அந்த அசுரனை அழிக்கின்றனர், இந்தத் திரைப்படம் அவருடைய செயல்களுக்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்படி கட்டாயப்படுத்தவில்லை. வேல்ஸின தொடரான பிரைட் ஆஃப் ஃபிராங்கண்ஸ்டைன் (1935) மற்றும் பின்னாளில் வந்த சன் ஆஃப் ஃபிராங்கண்ஸ்டைன் (1939), மற்றும் கோஸ்ட் ஆஃப் ஃபிராங்கண்ஸ்டைன் (1942) ஆகியவை டாக்டர் ஃபிராங்கண்ஸ்டைனும் அதேபோன்ற பிற கதாபாத்திரங்களும் மேலும் மேலும் தீமை நிரம்பியவர்களாவதால் பரபரப்பான, திகிலான மற்றும் மிகைப்படுத்தல் என்ற பொது மையக்கருவை தொடர்ந்தது.[39]

குறிப்புகள்[தொகு]

  1. This seems to mean Johann Konrad Dippel (1673–1734), one century before (not two). For Dippel's experiments and the possibility of connection to Frankenstein see the Dippel article.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hobbler, Dorthy and Thomas.
  2. Garrett, Martin.
  3. Seymour, Miranda.
  4. McGasko, Joe. "Her 'Midnight Pillow': Mary Shelley and the Creation of Frankenstein". Biography. Archived from the original on 19 February 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-02-18.
  5. "The Project Gutenberg eBook of Frankenstein: or, The Modern Prometheus, by Mary W. Shelley". www.gutenberg.org. பார்க்கப்பட்ட நாள் 2022-12-29.
  6. "Preface", 1831 edition of Frankenstein
  7. சன்ஸ்டீன், 118.
  8. ஹோம்ஸ், 328; மேலும் பார்க்க மேரி ஷெல்லியின் 1831 ஆம் ஆண்டு ஃபிராங்கண்ஸ்டைன் பதிப்பின் அறிமுகம்.
  9. Quoted in Spark, 157, from Mary Shelley's introduction to the 1831 edition of Frankenstein.
  10. பென்னட், அன் இண்ட்ரடக்சன் , 30–31; சன்ஸ்டீன், 124.
  11. சன்ஸ்டீன், 117.
  12. OX.ac.uk
  13. Amazon.co.uk
  14. ஃபிராங்கண்ஸ்டைன்:அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகத்தில் உள்ள செல்லுலாய்ட் அசுரன் சுகாதாரத்திற்கான தேசிய நிறுவனங்கள்
  15. ஆதர்ஸ் டைஜஸ்ட்: தி வேர்ல்ட்ஸ் கிரேட் ஸ்டோரிஸ் இன் பிரீஃப் , ரோஸிட்டர் ஜான்சன், 1908
  16. தி ரீஃப் , பக்கம் 96.
  17. இந்தக் கட்டுரை ஃபண்டாஸ்மகோரியானாவின் 2005 ஆம் ஆண்டு பதிப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது ; இலக்கியப் போட்டியில் 'பேய்க் கதைகள்' என்ற புத்தகத்தின் முதல் முழுநீள ஆங்கில மொழிபெயர்ப்பு மேரி ஃபிராங்கண்ஸ்டைனை எழுதுவதற்கு உந்துதலாக அமைந்தது.
  18. "Burg Frankenstein". burg-frankenstein.de. பார்க்கப்பட்ட நாள் 2007-01-02.
  19. (லியோனார்ட் வுல்ஃப், பக்.20)
  20. RenegadeNation.de பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம் ஃபிராங்கண்ஸ்டைன் கோட்டை, ஷெல்லி மற்றும் தொன்மத்தின் கட்டுமானம்
  21. Sandy, Mark (2002-09-20). "Original Poetry by Victor and Cazire". The Literary Encyclopedia. The Literary Dictionary Company. பார்க்கப்பட்ட நாள் 2007-01-02.
  22. "Percy Bysshe Shelley (1792–1822)". Romantic Natural History. Department of English, Dickinson College. பார்க்கப்பட்ட நாள் 2007-01-02.
  23. பெர்ஸி ஷெல்லி#வம்சம்
  24. "ஜர்னல் 6 டிசம்பர் —மிகுந்த உடல்நலமின்மை. ஷெல்லி & கிளார்க் வெளியேறியது, வழக்கமாக, பெருமளவு இடங்களுக்கு...ஹேரியட் ஒரு மகனையும் வாரிசையும் கொண்டுவந்திருக்கிறார் என்பதைக் கூறும் ஹுகமின் கடிதம். ஷெல்லி இந்த நிகழ்வு குறித்து நிறைய சுற்றுக்கடிதங்களை எழுதினார், இது மணிகள் ஒலிப்பதற்கு இட்டுசெல்லும் தேவையாக இருந்தது, இது அவருடைய மனைவியின் மகனுக்கானது. ஸ்பார்க்கில் மேற்கோள் காட்டப்பட்டது, 39.)
  25. (லியோனார்ட் வுல்ஃப், பக். 20).
  26. RoyalSoc.ac.uk "லண்டனில் பெஞ்சமின் ஃபிராங்க்ளின்." தி ராயல் சொசைட்டி. ஆகஸ்ட் 8, 2007 இல் பெறப்பட்டது
  27. Mary Wollstonecraft Shelley, "Life of William Godwin," p. 151
  28. Amazon.com
  29. "Salon.com". Archived from the original on 2009-01-14. பார்க்கப்பட்ட நாள் 2010-06-09.
  30. Guardian.co.uk
  31. "Crossref-it.info". Archived from the original on 2010-01-09. பார்க்கப்பட்ட நாள் 2010-06-09.
  32. Enotes.com
  33. "KCTCS.edu". Archived from the original on 2004-11-15. பார்க்கப்பட்ட நாள் 2010-06-09.
  34. UTM.edu லின் அலெக்ஸாண்டர், ஆங்கிலத்துறை, டென்னஸி பல்கலைக்கழகம் மார்டினில் உள்ளது. 27 ஆகஸ்ட் 2009 இல் திரும்பப் பெறப்பட்டது.
  35. டோமே கிறிஸ்டோபர் பி. "தி மாரல் கேரக்டர் ஆஃப் மேட் சயின்டிஸ்ட்: எ கல்ச்சரல் கிரிட்டிக் ஆஃப் சயின்ஸ்." சயின்ஸ், டெக்னாலஜி, ஹ்யூமன் வேல்யூஸ். 17.4 (இலையுதிர்க்காலம், 1992) பக். 8
  36. டோமே, பக்கங்கள். 423–425
  37. டோமே, பக்கம். 425
  38. Towson.edu
  39. டோமே, பக்கங்கள். 425–427

புற இணைப்புகள்[தொகு]