பிரம்மகிரி தொல்பொருள் தளம்
பிரம்மகிரி இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் சித்ரதுர்கா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் தளமாகும். [1] இந்த இடம் கவுதம மஹரிஷி ( கௌதம மஹர்ஷி எனும் பெயரிலும்) மற்றும் அவரது மனைவி அகலிகை வாழ்ந்த இடம் என்று மரபுவழிக் கதையாக சொல்லப்படுகிறது. அவர் நங்கு அறியப்பெற்ற ஏழு இந்து துறவிகளில் (சப்தரிஷி மண்டலம்) ஒருவராக இருந்தார். 1891 ஆம் ஆண்டு பெஞ்சமின் எல். ரைஸ் என்பவரால் இந்த தளம் முதன்முதலாக ஆராயப்பட்ட போது, அவர் அசோகர் பேரரசரின் அதிகாரப்பூர்வமான அறிக்கைகள் செதுக்கப்பட்ட பாறைகளை இங்கே கண்டுபிடித்தார். இந்த அறிக்கைகள் செதுக்கப்பட்ட பாறைகள் இந்த வட்டாரம் இசிலா என அழைக்கப்பட்டது என்று குறிப்பிட்டது மட்டுமின்றி மவுரிய சாம்ராஜ்ஜியத்தின் தென்கோடி அளவைக் குறித்தது. [1] [2] பிரம்மகிரி தளம் சுற்றியுள்ள சமவெளிகளுக்கு மேல் 180 மீட்டர் உயர்ந்தும் கிழக்கே-மேற்கே சுமார் 500 மீட்டர் மற்றும் வடக்கே-தெற்கே 100 மீட்டர் அளவிலும் நிற்கும் ஒரு கிரானைட் தெரிபாறையாகும்.[3] இந்த தளம் இங்கே ஏராளமான பெருங்கற்களாலான நினைவுச்சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளதற்காக நன்கு அறியப்படுகிறது . [4] இங்கு காணப்படும் தொடக்க காலத்தில் அல்லது வரலாற்றின் முற்பகுதியில் நிகழ்ந்த குடியேற்றம் குறைந்தது கி.மு. 2 ஆம் நூற்றாண்டிற்கு முந்தையதாக இருக்கலாம் என்று காலம் குறிப்பிடப்பட்டுள்ளது. [5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Excavations - Important - Karnataka". Archaeological survey of India. பார்த்த நாள் 2008-03-14.
- ↑ அமலந்தா கோஷ் (1990), p82
- ↑ பீட்டர் என் பெரேகின், மெல்வின் எம்பர், மனித உறவுகள் பகுதி கோப்புகள். (2001), ப 367
- ↑ கென்னெத் ஆர் கென்னடி (2000), ப 267
- ↑ பார்பரா ஆன் கிப்பர் (2000), பி 78