உள்ளடக்கத்துக்குச் செல்

பிரபுல்லா தானுகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரபுல்லா திலீப் தானுகர்
பிறப்புபிரபுல்லா சுரபி ஜோஷி
(1934-01-01)1 சனவரி 1934
கோவா, போர்த்துகேய இந்தியா
இறப்பு1 மார்ச்சு 2014(2014-03-01) (அகவை 80)
மும்பை, இந்தியா
தேசியம் இந்தியா
கல்விசர் ஜே. ஜே. கலைப்பள்ளி
அறியப்படுவதுகாட்சிக் கலை, ஓவியக் கலை, வரைதல்
அரசியல் இயக்கம்முற்போக்கு கலை இயக்கம்
வாழ்க்கைத்
துணை
திலீப் தானுகர்
பிள்ளைகள்கௌரி மேத்தா, கோபிகா தானுகர்

பிரபுல்லா தானுகர் (Prafulla Dahanukar) (1934-2014) ஓர் இந்திய ஓவியர் ஆவார். நவீன ஓவியக் கலைகளில் நிபுணரான இவர் இந்தியாவில் பல இளம் கலைஞர்களுக்கு உதவினார். மேலும் அவர்களிடம் செல்வாக்கு செலுத்தினார்.[1][2][3]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

சுப்பாராய் ஆனந்த் ஜோஷி மற்றும் பாடகர் கேசரபாய் பந்தோத்கர் ஆகியோருக்கு கோவாவின் பந்தோராவில் பிரபுல்லா ஜோஷி பிறந்தார்.[4] பின்னர், மும்பையில் வளர்ந்தார். அங்குள்ள சர் ஜே. ஜே. கலைப் பள்ளியில் நுண்கலை பயின்ற இவர் 1955 இல் அங்கு தங்கப் பதக்கத்துடன் பட்டம் பெற்றார்.[5][6] இந்தியாவில் கலை மற்றும் கலாச்சார காட்சியை மாற்றிய பிரமுகர்களால் அந்த நிறுவனம் இருந்தது. 1961 ஆம் ஆண்டில் பாரிசில் நுண்கலை படிக்க பிரான்சு அரசு இவருக்கு உதவித்தொகை வழங்கியது.[5]

தானுகர் தனது வாழ்நாள் முழுவதும் கலை மற்றும் ஓவியத்திற்காக பணியாற்றினார். புதுதில்லியில் உள்ள லலித் கலா அகாதமியில் 1974 முதல் 1979 வரை குழு உறுப்பினராகவும், 1993 முதல் 1998 வரை 11 ஆண்டுகள் மும்பை கலைச் சங்கத்தின் தலைவராகவும், 2010 முதல் 2014 இல் தான் இறக்கும் வரை இருந்தார். ஜஹாங்கீர் கலைக்கூடத்தின் அறங்காவலராகவும் (40 ஆண்டுகளுக்கும் மேலாக), கோவாவின் கலா அகாதமியின் குழு உறுப்பினராகவும் (30 ஆண்டுகளுக்கும் மேலாக) பணியாற்றினார். இந்தியக் கலைச் சங்கத்தின் தலைவராகவும், மும்பையில் உள்ள கலைஞர்கள் மையத்தின் தலைவராகவும் இருந்தார். மும்பையில் 2010-11 இல் தொடங்கிய இந்திய கலை விழா என்ற கலைக் கண்காட்சியின் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார்.

பிரபுல்லா தானுகர், சங்கீத கலா கேந்திராவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். அதன் தலைவரான ஆதித்யா பிர்லா 3 ஆண்டுகள் இக்குழுவில் தொடர்ந்து பணியாற்றினார். பிரபுல்லா இசை மன்றத்தின் குழு உறுப்பினராக இருந்தார். 4 ஆண்டுகளாக இந்திய தேசிய நாடகத்தின் அறங்காவலர் குழுவில் இருந்தார். கலைஞர்களுக்கான பணிகளைத் தவிர, லோணாவ்ளாவிலுள்ள பால் ஆனந்த்கிராம் என்ற அனாதை இல்லத்தின் அறங்காவலராகவும் இருந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் (கௌரி மேத்தா மற்றும் கோபிகா தானுகர்) இருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nehru Centre Art Gallery Organises the Millennium Show, a Century of Art from Maharashtra (Exhibition catalog) (in ஆங்கிலம்). Mumbai: Nehru Centre. 2000. கணினி நூலகம் 51264805 – via கூகுள் புத்தகங்கள்.
  2. Baria, Zeenia (14 July 2014). "An ode to a master". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 22 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220922132227/https://timesofindia.indiatimes.com/life-style/spotlight/an-ode-to-a-master/articleshow/38362438.cms. பார்த்த நாள்: 24 September 2014. 
  3. Murdeshwar, Sheila (November 2008). "'Eternal Space' in Her Heart Prafulla Dahanukar". Dignity Dialogue: pp. 6–7 இம் மூலத்தில் இருந்து 10 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110710125354/http://www.dignityfoundation.com/pdf/DD-Nov-08/Prafulla-Dahanukar.pdf. 
  4. Gehi, Reema (2 March 2014). "Art community bids goodbye to Dahanukar". Mumbai Mirror (in ஆங்கிலம்). Archived from the original on 25 June 2024. Retrieved 24 June 2024.
  5. 5.0 5.1 Pillai, Akshaya G. (12 January 2023). "Prafulla Dahanukar: An Iconic Feminist In The History of Women In Art | #IndianWomenInHistory". Feminism in India (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 10 March 2024. Retrieved 24 June 2024.
  6. "Artist Profile - Prafulla Dahanukar". Goa Art Gallery. Archived from the original on 6 February 2024. Retrieved 24 June 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Prafulla Dahanukar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபுல்லா_தானுகர்&oldid=4361840" இலிருந்து மீள்விக்கப்பட்டது