பிரபந்த கோஷம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரபந்த கோஷம்
நூலாசிரியர்இராஜசேகர சூரி
நாடுஇந்தியா
மொழிசமசுகிருதம்
பொருண்மைஅறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பு
வகைபிரபந்தம்
வெளியிடப்பட்ட நாள்
1349 பொது ஊழி

பிரபந்த-கோஷம்' ( Prabandha Kosha) என்பது சமசுகிருத மொழித் தொகுப்பாகும். இது கிபி 1349 இல் சைன அறிஞரான இராஜசேகர சூரி என்பவரால் தொகுக்கப்பட்டது. [1] [2] இது 10 சமண அறிஞர்கள், 4 சமசுகிருத கவிஞர்கள், 7 மன்னர்கள் மற்றும் 3 சமண அரசவையினர்கள் உட்பட 24 பேரின் வாழ்க்கையை விவரிக்கிறது. [3] இது "சதுர்விஞ்சதி பிரபந்தம்" என்றும் அழைக்கப்படுகிறது. [4]

இத்தொகுப்பின் உள்ளடக்கத்தை இராஜசேகரன் தனது ஆசிரியர் திலகசூரியிடம் பெற்ற தகவலின் அடிப்படையில் அமைந்துள்ளது. மதனசிம்மனின் ஆதரவின் கீழ் தில்லியில் அவர் படைப்பை இயற்றினார். அவருடைய தந்தை முகமது சாகியால் (அநேகமாக முகம்மது பின் துக்ளக் ) கௌரவிக்கப்பட்டார். [5]

தொகுப்பில் 7வது பிரபந்தம் மட்டுமே ( மல்லவாடி -சூரி பற்றியது) முழுவதுமாக வசன வடிவில் எழுதப்பட்டுள்ளது. மீதமுள்ள பிரபந்தங்கள் பேச்சுவழக்கு சமசுகிருத உரைநடையைப் பயன்படுத்துகின்றன. [4]

பிரபந்தகோஷத்தின் 24 பிரபந்தங்கள் (கதைகள்), பின்வரும் நபர்கள் மீது 4,300 சுலோகங்கள் (வசனம்) உள்ளன: [6]

சைன அறிஞர்கள்[தொகு]

ஹேமச்சந்திரன்
  1. பத்ரபாகு மற்றும் வராகமிகிரர்
  2. ஆர்யநந்திலன்
  3. ஜீவதேவன்-சூரி
  4. ஆரியகபட ஆச்சார்யர்
  5. பாடலிப்தாச்சார்யர்
  6. சித்தசேன -சூரி மற்றும் விருத்தாவதி
  7. மல்லவாடி-சூரி
  8. ஹரிபத்ர -சூரி
  9. பாப்பாபட்டி-சூரி
  10. ஹேமச்சந்திரன்

கவிஞர்கள்[தொகு]

  1. ஸ்ரீஹர்ஷர்
  2. ஹரிஹரன்
  3. அமரச்சந்திரன்
  4. மதனகீர்த்தி
  1. சாலிவாகனன்
  2. வாங்கச்சுல
  3. விக்ரமாதித்தியன்
  4. நாகார்ஜுனா
  5. உதயணன்
  6. இலட்சுமண சேனா
  7. மதனவர்மன்

அரசவையினர்[தொகு]

  1. ரத்னா-சிரவகன்
  2. அபாதா-சிரவகன்
  3. வாஸ்துபாலன் மற்றும் தேஜபாலன்

சான்றுகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபந்த_கோஷம்&oldid=3453148" இலிருந்து மீள்விக்கப்பட்டது