பிரசெண்டேசன் மகளிர் உயர் நிலைப்பள்ளி, கொடைக்கானல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரசெண்டேசன் கான்வெண்ட் எனப்படும் பிரசெண்டேசன் மகளிர் உயர் நிலைப்பள்ளி (Presentation Convent, Kodaikanal), என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, கொடைக்கானலில் அமைந்துள்ள ஒரு பள்ளி ஆகும்.

வரலாறு[தொகு]

சென்னைப் பிரசெண்டேசன் திருச்சபையைச் சார்ந்த சேவியர் தாயார் (Rev. Mother Xavier) 1915-ஆம் ஆண்டு கொடைகானலில் ஒரு பள்ளியை நிறுவுவதற்கு ஏற்ற இடத்தைத் தேடினார். கிளென் அருவிக்கு அருகில் அமைந்திருந்த ஒரு மலையுச்சியில் பள்ளியை நிறுவ ஏற்ற இடமாக கண்டார். அதன்படி கி. பி. 1916-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் பிரசெண்டேசன் திருச்சபையைச் சார்ந்த கன்னியர்கள், 'ஹில் சைட்' என்ற அந்த இடத்தில் 17 மாணவியர்களைக் கொண்டு இப்பள்ளி துவக்கப்பட்டது. 1916-ஆம் ஆண்டு சூன் திங்கள் 16-ஆம் நாள் தற்போதுள்ள பள்ளிக் கட்டிடத்திற்குக் அடிக்கல் நடத்தப்பட்டது. கட்டிட வேலை முடிந்ததும் கி. பி. 1917-ஆம் ஆண்டு பெப்ருவரித் திங்களில், பள்ளி புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. பள்ளியில் ஒரு கிருத்தவக் கோவிலும் அமைக்கப்பட்டது. அக்கோவில் காலையில் வழிபாட்டுக்குரிய இடமாகவும், மாலையில் பள்ளியாகவும் பயன்படுத்தப்பட்டது. கி. பி. 1916-ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாகத் துவங்கிய இது கி. பி. 1919-ஆம் ஆண்டு உயர் நிலைப்பள்ளியாக மாறியது. கி. பி. 1920- ஆம் ஆண்டு கோடைக்கானலுக்கு வந்த வெலிங்க்டன் சீமாட்டி, இப்பள்ளிக்கான இரட்டை மாடிக் கட்டிடம் ஒன்றுக்குக் கால்கோள் இட்டார். ஒரு இலட்சம் ரூபாய் செலவில் இக்கட்டிடம் கட்டப்பட்டது. 'கிண்டர் கார்டன்' வகுப்பிலிருந்து, சீனியர் கேம்பிரிட்ஜ் வகுப்பு வரை, இக்கட்டிடத்தில் நடைபெற்றன.[1]

மாணவிகளுக்கு பள்ளியிறுதி வகுப்புவரை கற்பிக்கபடுவதோடு, டிரினிடி கல்லூரி இசைத் தேர்வுக்கும் பயிற்சி பெறுகின்றனர். கோடை நாட்களில் இப்பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழா குறிப்பிடத்தக்கது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 203-268". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.