பின் சம்பா (நெல் பருவம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடை காலமான பின் சம்பாப் பருவம் (Late Samba Season) வேளாண் வழக்கு பின் சம்பாப் பட்டம் என்பது; தென்னிந்திய மாநிலங்களான தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலத்தையும், மற்றும் சாகுபடி கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். அக்டோபர் - நவம்பர் (தமிழ்: ஐப்பசி - கார்த்திகை]) மாதங்களில் துவங்கும் இப்பருவம், மார்ச்சு - ஏப்ரல் (தமிழ்: பங்குனி - சித்திரை) மாதங்களில் முடிவடைகிறது.[1]

130 – 135 நாட்களைக் கொண்ட இந்த பின் சம்பா பருவம், மத்தியகாலம், மற்றும் நீண்டகால நெல் வகைகளை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.

பருவ அட்டவணை[தொகு]

விதைக்கும் மாதம் கால அளவு (நாட்கள்) தகுந்த இரகங்கள் பயிரிடும் இடங்கள்
அக்டோபர் - நவம்பர் 130 – 135 மத்தியகாலம், மற்றும் நீண்டகாலம் திருவள்ளூர், மதுரை, தேனி கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்.[2]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்_சம்பா_(நெல்_பருவம்)&oldid=2480969" இலிருந்து மீள்விக்கப்பட்டது