பித்துரு உலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பித்துரு உலகம் அல்லது பித்ரு லோகம் (Pitru loka) என்பது இந்து தர்மத்தின் படி, உடலைத் துறந்த ஆன்மாக்கள் மறு பிறப்பின் போது, வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும்.[1]இதனை பிரேத லோகம் என்றும் அழைப்பர்.[2] பித்துரு லோகம் பூமிக்கும், அந்தரிட்சத்திற்கும்[3] [4] நடுவில் இருப்பதாக பாகவத புராணம் (காண்டம் 5, அத்தியாயம் 24)  கூறுகிறது.[5]

இந்து சமய நம்பிக்கைகளின் படி, உடலை நீத்த ஆன்மா முற்பிறவியில் செய்த புண்ணிய - பாவ கர்மவினைகளுக்கு ஏற்ப, நரகத்தையும், சொர்க்கத்தையும் அனுபவித்து, செய்த பாவ - புண்ணியங்கள் தீர்ந்த பின்னர், பித்துரு லோகத்தில் மறு பிறவிக்கான உடல் கிடைக்கும் வரை தங்கியிருப்பர். பித்துரு லோகத்தினர் முற்பிறவியில் செய்த கருமவினைகளுக்கு ஏற்ப, மீண்டும் மனிதப் பிறவியாகவோ அல்லது வேறு பிறவியாகவோ பிறப்பர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. SOUL'S JOURNEY AFTER DEATH
  2. Preta loka (world of Spirits
  3. http://www.tamilvu.org/slet/servlet/lexpg?pageno=82[தொடர்பிழந்த இணைப்பு]
  4. அந்தரிட்சம்[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "SRIMAD BHAGAVATA by Krsna-Dwaipayana Vyasa" (PDF). Archived from the original (PDF) on 2017-01-10. பார்க்கப்பட்ட நாள் 2016-06-26.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பித்துரு_உலகம்&oldid=3847817" இலிருந்து மீள்விக்கப்பட்டது