பிட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிட்டன் சங்க காலச் சிற்றரசர்களில் ஒருவன். குதிரைமலைப் பகுதி இவன் நாடு. [1]

இவன் வேல் வீரன். [2]

வானவர் எனப்படும் சேரர்களின் படைத்தலைவனாக இவன் விளங்கினான். நறவு என்னும் இன்னீரை மற்றவர்களுக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சி காண்பவன் இவன். இவனது வேலைக் கண்டு பகைவர்கள் நடுங்கினார்களாம். [3]

இவன் வயது முதிர்ந்த காலத்தில் சமணத் துறவியாக மாறி ஆறுநாட்டான் மலையிலுள்ள சமணர் குகையில் வாழ்ந்ததைப் புகழூர்க் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

காண்க

அடிக்குறிப்பு[தொகு]

  1. வெல்போர் வானவன் மறவன் நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும் பொய்யா வாய்வாள் புனைகழல் பிட்டன் மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன் - ஆலம்பேரி சாத்தனார் - அகம் 143
  2. மலை கெழு நாடன் கூர்வேல் பிட்டற் குறுகல் ஓம்புமின் – உறையூர் மருத்துவன் தாமோதரனார் - புறம் 170
  3. வானவன் மறவன் வணங்குவில் தடக்கை ஆனா நறவின் வண்மகிழ் பிட்டன் – மருதன் இளநாகனார் அகம் 77 வடமவண்ணக்கன் தாமோதரனார் புறம் 172.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிட்டன்&oldid=3851534" இலிருந்து மீள்விக்கப்பட்டது