பிசாரிக்காவு கோவில்

ஆள்கூறுகள்: 11°27′30″N 75°40′43″E / 11.4582°N 75.6785°E / 11.4582; 75.6785
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிஷாரிக்கவு கோயில்
பிசாரிக்காவு கோவில் is located in கேரளம்
பிசாரிக்காவு கோவில்
கேரளத்தில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:கோழிக்கோடு
அமைவு:கொல்லம்,கோயிலண்டே
ஆள்கூறுகள்:11°27′30″N 75°40′43″E / 11.4582°N 75.6785°E / 11.4582; 75.6785
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரள பாரம்பரிய கட்டிடக்கலை
இணையதளம்:http://pisharikavukollam.in/

பிஷாரிக்காவு கோயில் (പിഷാരിക്കാവ്‌ ക്ഷേത്രം) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், வடக்கு மலபார் பகுதியில், கோழிக்கோடு மாவட்டத்தில், கொயிலாண்டி என்ற ஊரில் உள்ள ஒரு கோயிலாகும். [1] இந்த இடம் கோழிக்கோடில் இருந்து கோழிக்கோடு நெடுஞ்சாலையில் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கோயிலாண்டி என்ற இடத்தில் இக்கோவிலுக்கு மிகவும் அருகில் உள்ள தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.

கோவில் பற்றிய[தொகு]

மார்தாண்டா வர்மருக்கு எதிரான சதிக்குப் பின்னர் " எட்டுவெட்டில் " குடும்பத்தின் எஞ்சிய உறுப்பினர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கோழிக்கோடு மாவட்டத்தில் இன்றைய கொய்லாண்டிக்கு அருகிலுள்ள கொல்லம் என்ற கிராமத்தில் குடியேறினர். இந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் பத்ரகாளியை நோக்கி தவம்புரிந்தார். ஒரு நாள் இரவு ஸ்ரீ போர்க்காளி (எட்டுவீட்டில் பில்லாவின் குல தெய்வம்) அவரது கனவில் தோன்றி அவருக்கு "நந்தகம்" என்ற மிகச் சிறந்த வாளைக் கொடுத்து, இந்த வாளின் வடிவத்தில் அவளை வழிபடச் சொன்னாள். மேலும் அவரது எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்றும் அவரது சொந்த ஊருக்குச் செல்லும்படியும் கூறினாள். அவர் மீண்டும் தனது சொந்த ஊருக்குச் சென்று ஒரு கோயில் கட்டி நந்தகம் வாளை வழிபடத் தொடங்கினார். தாய் பத்ரகாளியின் அருளால் குடும்பம் மிகவும் செல்வம்மிக்கதாகவும் செல்வாக்குமிக்கதாகவும் மாறியது. அவர்கள் கோழிக்கோடு சமூத்திரி-மன்னரிடமிருந்து பணத்துக்கு நிலத்தை வாங்கிக் கொண்டு, அங்கே தங்கள் குடும்பத்தினருடன் குடியேறினர். அந்த இடத்தில் ஒரு அழகிய கோவிலைக் கட்டி, நந்தகம் வாளை வழிபட்டுவந்தனர். கிசியில், வாழயில், எலெயடுத்து, எச்சரதில், புனதில், நானோத்து, முண்டக்கல், ஈரோத்து ஆகிய குடும்பங்கள் தெற்கிலிருந்து வந்தன என்று நம்பப்படுகிறது. இவர்களை பூர்வீக மக்கள் அந்த நேரத்தில் "வியாபரி" என்று அழைத்தனர். பிற்காலத்தில் பேச்சுவழக்கில் "ராவாரி" என்று மருவியது. இந்தச் சமூகத்தினர் இப்போது கூட உள்ளனர். மேலும் "காளியாட்டம்" என்ற விழாவை நடத்தும் சிறப்பு உரிமைகள் இவர்களிடமே உள்ளன.

பிஷாரிகாவின் முக்கிய திருவிழாக்கள்[தொகு]

பிஷாரிகாவு கோயிலின் ஆண்டு விழா மலையாள மாதமான "மீனம்" மாதத்தில் கொண்டாடப்படுகிறது. திருவிழாவானது 8 நாட்கள் விமர்ச்சையாக கொண்டாடப்படுகிறது. 7 வது நாள் "வலிய விளக்கு" என்றும், 8 வது நாள் "காளியாட்டம்" என்றும் கொண்டாடப்படுகிறது. தெய்வீக நந்தகம் வாள் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் அலங்கரிக்கப்பட்ட பெண் யானை மீது ஊர்வலமாக கொண்டுவரப்படுகிறது. நவராத்திரியும் கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. .

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசாரிக்காவு_கோவில்&oldid=3022475" இலிருந்து மீள்விக்கப்பட்டது