உள்ளடக்கத்துக்குச் செல்

பா. கா. மூக்கைய்யாத்தேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பா. கா. மூக்கையாத்தேவர்
பிறப்புஏப்ரல் 4, 1923
பாப்பாபட்டி, உசிலம்பட்டி, மதுரை மாவட்டம், தமிழ்நாடு
இறப்புசெப்டம்பர் 6, 1979(1979-09-06) (அகவை 56)
தேசியம்இந்தியர்
பணிஅரசியல்வாதி
அரசியல் கட்சிஅனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு

பா. கா. மூக்கையாத்தேவர் (P. K. Mookiah Thevar, ஏப்ரல் 4 , 1923 - செப்டம்பர் 6 , 1979) என்பவர் ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, 1957, 1962, 1967, 1971, 1977 ஆகிய ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியின் சார்பாக உசிலம்பட்டி தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக ஐந்துமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்று இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கும் சென்றுள்ளார். இவரது மகன் எம். பசும்பொன் ஆவார்.[1]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

மூக்கையா, காட்டமுத்து ஒச்சாத்தேவர் - செவனம்மாள் தம்பதிகளுக்கு 1923ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் நாள் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள பாப்பாபட்டி என்ற வருவாய் கிராமத்தில் பிறந்தார்.[2]

மூக்கையா, 1963-இல் இவர் அனைத்திந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-இல் திமுக அரசு ஆட்சியமைத்த போது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்காலிகப் பேரவைத் தலைவராகச் செயற்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்களை பதவியேற்பு உறுதிமொழியை வழங்கச் செய்தார். 1971-இல் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவரானார். கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். இவரது முயற்சியால் உசிலம்பட்டி, மேநீலிதநல்லூர், கமுதி ஆகிய இடங்களில் கலைக் கல்லூரிகள் நிறுவப்பட்டன.

மூக்கையா, 1979-ஆம் ஆண்டு செப்டம்பர் ஆறாம் நாள் மறைந்தார். இவரின் கல்லறை உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கல்லூரியில் உள்ளது. இவரது நினைவைப் போற்றும் வகையில் இவரது சிலையொன்று மதுரை நகரத்தில் அரசரடி பகுதியில் 1990-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாடு அரசு மூக்கையாவின் நினைவாக மணிமண்டபம் ஒன்றை நிறுவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.[3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "VCK fields Mookiah Thevar's son". The Hindu (September 30, 2011)
  2. "இதே நாளில் அன்று". தினமலர் நாளிதழ். பா.கா.மூக்கையா தேவர்: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, பாப்பாபட்டி என்ற கிராமத்தில், காட்டமுத்து ஒச்சாத்தேவர் -- -செவனம்மாள் தம்பதிக்கு மகனாக, 1923 ஏப்., 4ல் பிறந்தார்.
  3. "காரல் மார்க்ஸுக்கு சிலை; மூக்கையா தேவருக்கு மணிமண்டபம்: 110-விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு". Hindu Tamil Thisai. 2025-04-04. Retrieved 2025-04-04.