பா‌லு மலர்‌வண்‌ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலு மலர்வண்ணன் (ஆங்கிலம்:Balu Malarvannan) என்பவர் ஒரு திரைப்பட இயக்குனர், நாவல் எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ஆவர்.[1]

வரலாறு[தொகு]

தமிழ் நாடு, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வடசங்கந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு மலர்வண்ணன். இவரது தந்தை பெயர் கோபாலகிருஷ்ணன், தாயார் பெயர் பாப்பாத்தி அம்மாள். இவருக்கு சண்முகசுந்தரம் நமசிவாயம் என்கிற இரு சகோதரர்களும், வைரக்கண்ணு, ராஜலட்சுமி என்கிற இரு சகோதரிகளும் உள்ளனர். மேலும் இவர் எம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதி உள்ளார். ராசாத்தி என்கிற சின்னத்திரை இயக்கியுள்ள இவர், ஒத்த வீடு என்கிற திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். அடுத்து பையன் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "புத்தாண்டில் வெளியாகும் 'ஒத்தவீடு'". தமிழ் முரசு. 19 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் சூன் 8, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்பு[தொகு]

பாலு மலர்வண்ணன் வலைப்பதிவு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா‌லு_மலர்‌வண்‌ணன்&oldid=3577783" இலிருந்து மீள்விக்கப்பட்டது