பாஷா சம்மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாஷா சம்மான், அங்கீகாரம் பெற்ற 24 இந்திய மொழிகளைத் தவிர, பிற இந்திய மொழிகளின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்களில் நான்கு பேரைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் சாகித்திய அகாதமி நிறுவனம் ரூபாய் ஒரு இலட்சமும், ஒரு செப்புப் பட்டயமும் மற்றும் ஒரு சான்றிதழும் வழங்கி பாராட்டுகிறது. இவ்விருது 1996-ஆம் ஆண்டு முதல் சாகித்திய அகாதமியால் வழங்கப்படுகிறது.

விருது வழங்கும் நடைமுறை[தொகு]

அரசால் அங்கீகரிக்கப்படாத இந்திய மொழிகளில் இரண்டு அறிஞர்களுக்கும் மற்றும் பாரம்பரிய மற்றும் இடைக்கால இலக்கிய வளர்ச்சிக்காகத் தொண்டு புரிந்தவர்களில் இருவருக்கும் ஆண்டுதோறும் பாஷா சம்மான் வழங்கப்படுகிறது. [1]

பாஷா சம்மான் விருது பெற்றவர்கள்[தொகு]

தமிழ்நாட்டில் சௌராட்டிர மொழி, இலக்கியம், பண்பாட்டு வளர்ச்சிக்காக 1996-இல் கே. ஆர். சேதுராமன் மற்றும் தாடா. சுப்பிரமணியம் ஆகியோர் கூட்டாகவும், 2015-இல் டி. ஆர். தாமோதரன் மற்றும் டி. எஸ். சரோஜா சௌந்தரராஜன் ஆகியோர் கூட்டாகவும் பாஷா சம்மான் பெற்றனர். [2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "BASHA SAMMAN". Archived from the original on 2017-07-24. பார்க்கப்பட்ட நாள் 2015-07-22.
  2. "BASHA SAMMAN AWARDEES". Archived from the original on 2017-08-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-22.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஷா_சம்மான்&oldid=3563107" இலிருந்து மீள்விக்கப்பட்டது