பாளையம், அரூர்
பாளையம் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636 906 |
பாளையம் (Palayam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் வீரப்பநாய்க்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 257 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°05'13.4"N 78°34'20.4"E[2] ஆகும். இங்கு 230 குடும்பங்களும் 904 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 469 ஆண்களும் 435 பெண்களும் அடங்குவர்.