பால் தெரிவு கருக்கலைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பால் தெரிவு கருக்கலைப்பு என்பது ஒரு குழந்தையின் பாலை அறிந்தபின் கருவைக் கலைப்பது ஆகும். பொரும்பாலும் பெண் சிசுக்கள் பண்பாட்டு நோக்கில் ஆண்கள் கூடுதலாக மதிக்கப்படும் நாடுகளில் இவ்வாறு கருக்கலைக்கப்படுகின்றன. இந்தியா, பாகிசுத்தான், சீனா, கொரியா போன்ற நாடுகளில் இது மிகவும் பரவலாக நடைபெறுகிறது. சிசுவின் பாலை அறிய உதவும் மீயொலி நோட்டம் போன்ற தொழில்நுட்பங்கள் இந்த செயற்பாட்டை அதிகரித்துள்ளது.

இச் செயற்பாட்டால் பாரிய சமூக விளைவுகளை இந்த நாடுகள் எதிர்நோக்கி உள்ளன. திருமண வயதை அடையும் ஆண்களுக்கு துணையாக பெண்கள் கிடைக்காதது அதில் ஒன்றாகும்.