பாலை நண்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலை நண்டுகள் என்பது தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு நூல். இதன் தொகுப்பாசிரியர் மௌ.சித்திரலேகா. இதில் இடம்பெறும் 25 சிறுகதைகள் அனைத்தும் இலங்கையைத் தாயகமாகக் கொண்ட பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. 1996 முதல் 2007 வரை வெளியானவை. நயீமா சித்திக், தமிழ்நதி, இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் முதலிய எழுத்தாளர்களின் கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்நூல் 2008 ஆம் ஆண்டு மாற்று வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலை_நண்டுகள்&oldid=1373542" இலிருந்து மீள்விக்கப்பட்டது