பாலநாகம்மா (1942 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலநாகம்மா
இயக்கம்சி. புல்லையா
தயாரிப்புசுப்பிரமணியம் சீனிவாசன்
கதைபாலிஜெபள்ளி லட்சுமிகாந்தக் கவி
இசைஎம். டி. பார்த்தசாரதி
எஸ். ராஜேஸ்வர ராவ்
நடிப்புகாஞ்சனமாலா
கோவிந்தராஜுலு சுப்பா ராவ்
ஒளிப்பதிவுசைலென் போஸ்
பி. எஸ். இரங்கா
படத்தொகுப்புசந்துரு
என். கே. கோபால்
கலையகம்ஜெமினி ஸ்டூடியோஸ்
விநியோகம்ஜெமினி ஸ்டூடியோஸ்
வெளியீடு17 திசம்பர் 1942 (1942-12-17)(இந்தியா)
ஓட்டம்220 நிமிடங்கள்
மொழிதெலுங்கு

பாலநாகம்மா (Bala Nagamma) 1942 இல் வெளியான ஒரு தெலுங்குத் திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குநர் சி. புல்லையா மற்றும் தயாரிப்பாளர் சுப்பிரமணியம் சீனிவாசன் ஆவர். பாலநாகம்மா திரைப்படைக்கதை மிகவும் பிரபலமான புர்ரகதைகளுள் ஒன்றாகும். ஜெமினி ஸ்டியோவால் தயாரிக்கப்பட்டத் துவக்ககால வெற்றிபெற்ற தெலுங்குத் திரைப்படங்களுள் இதுவும் ஒன்று. இத்திரைப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன.[1] இப்படம் தமிழிலில் மறுஆக்கம் செய்யப்படவில்லை. ஆனால் அதே ஜெமினி ஸ்டியோவால் இந்தியில் மதுபாலாவின் நடிப்பில் 1954 இல் மறுஆக்கம் ("பகுத் தின் குவே") செய்யப்பட்டது.[2] இதே திரைப்படம் 1959 ஆம் ஆண்டில் இதே தலைப்பில் வேதாந்த ராகவய்யா இயக்கத்தில் மீண்டும் வெளியானது.

கதை[தொகு]

இக்கதை, பாலநாகம்மா என்ற இளவரசியைப் பற்றியது. நவபோஜராஜு என்ற அரசரின் மனைவியான ராணி புலலட்சுமி, ஜடாக முனிவரிடம் குழந்தைப்பேறு வேண்டிக்கொள்ள அவரது வாழ்த்துகளினால் அவளுக்கு ஏழு குழந்தைகள் பிறக்கின்றன. அவற்றுள் கடைசிக் குழந்தைதான் பாலநாகம்மா (காஞ்சனமாலா). அவளை கார்யவார்தி ராஜு என்பருக்குத் திருமணம் செய்து தருகின்றனர். ஆனால் அவளை மாயால மாரதி (கோவிந்தராஜுலு சுப்பாராவ்) என்பவன் கடத்திச் சென்று நாகுள்ளபுடி காட்டு என்ற இடத்திலுள்ள குகையொன்றில் நாயாக மாற்றி அடைத்துவைத்து விடுகிறான். அங்கு அவன், அவளைக் கட்டாயத் திருமணம் செய்துகொள்ள முயற்சிசெய்ய, அவள் சில விரதங்களும் பூசைகளும் செய்யவேண்டும் எனக்கூறி காலம் கடத்துகிறாள். இவ்வாறாக அக்குகையிலேயே அவள் 14 ஆண்டுகாலம் அடைபட்டுக் கிடக்கிறாள். இச்சமயத்தில் மாயால மாரதியின் மனைவி ராணி சங்கு (புஷ்பவல்லி) பாலநாகம்மாவின் மீது பொறாமை கொள்கிறாள். பாலநாகம்மாவின் மகன் பாலவார்தி ராஜு வளர்ந்தபின் தனது அன்னைக்கு நேர்ந்ததை அறிந்துகொள்கிறான். தனது தாயைக் கடத்தி அடைத்து வைத்திருக்கும் குகைக்குப் பூ விற்கும் தம்பலி பெடி என்ற பென்ணின் பேரனாக நடித்து அங்கு சென்று மாயால மாரதியைத் தோற்கடித்துத் தன் தாயை மீட்கிறான்.

நடிகர்கள்[தொகு]

ஆண் நடிகர்கள்[3]
  • கோவிந்தராஜுலு சுப்பாராவ்-மாயாள மாரதி
  • பந்த கனகலிங்கேஸ்வர ராவ்-கார்யவார்தி ராஜு
  • பலிஜெபல்லி லட்சுமிகாந்தக் கவி-நவபோஜ ராஜு
  • சிறுவன் விஸ்வம்-பாலவார்தி ராஜு
  • பொடில வெங்கட கிருஷ்ணமூர்த்தி-ராமவார்தி ராஜு
  • [[இரேலங்கி (நடிகர்)|இரேலங்கி வெங்கடராமையா-கோத்வால் ராம சிங்
  • இலங்கா சத்தியம்
  • வி.லட்சுமிகாந்தம்-சோதிடர்
  • கார்ர சூர்யநாராயணா-புலி ராஜு

பெண் நடிகர்கள்[3]
  • காஞ்சனமாலா-பாலநாகம்மா
  • புஷ்பவல்லி-ராணி சங்கு
  • பெல்லாரி லலிதா-புலலட்சுமி
  • கமலா தேவி
  • சீத்தாபயம்மா-துர்கா
  • இரத்தினமால
  • அஞ்சனி பாய்
  • சரசுவது (இள பாலநாகம்மா)
  • கமலா
  • கமலாகுமாரி

வரவேற்பு[தொகு]

திரைப்பட வரலாற்றாளர் ராண்டார் கையின் கூற்றின்படி இத்திரைப்படம் 40 இலட்சம் (US$50,000) இலாபம் ஈட்டியது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lyrical details of Bala Nagamma at Ghantasala Galamrutamu". 18 April 2012. பார்க்கப்பட்ட நாள் 15 July 2021.
  2. Randor Guy (23 May 2003). "With a finger on people's pulse". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 June 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030629133534/http://www.thehindu.com/thehindu/fr/2003/05/23/stories/2003052301510600.htm. பார்த்த நாள்: 3 May 2018. 
  3. 3.0 3.1 Pullayya, C. (1942). Balanagamma (motion picture) (in தெலுங்கு). ஜெமினி ஸ்டூடியோஸ். Opening credits, from 0:57 to 1:41.
  4. Randor Guy (December 2008). "... And thus he made Chandralekha sixty years ago". Madras Musings XVIII இம் மூலத்தில் இருந்து 24 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130524070957/http://madrasmusings.com/Vol%2018%20No%2017/and_thus_he_made_chandralekha_sixty_years_ago.html. 

வெளியிணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Gemini Studios