பாலத்தளி துர்க்கையம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலத்தளி துர்க்கையம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் பட்டுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் 4 கிமீ தொலைவில் உள்ள உதயசூரியபுரத்திற்கு அருகே உள்ள பாலத்தளி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. பாலை மரங்கள் அதிகமாகக் காணப்படுவதால் பாலத்தளி என்றழைக்கப்படுகிறது.

மூலவர்[தொகு]

இக்கோயிலில் மூலவராக துர்க்கையம்மன் உள்ளார். நான்கு கரங்களைக் கொண்டு சங்கு சக்கரத்தினை கைகளில் கொண்டு அபய முத்திரையில் எருமைத்தலையின் மீது நின்ற நிலையில் அம்மன் உள்ளார். [1]

வரலாறு[தொகு]

மேய்ச்சலுக்கு வந்த பசுக்கள் தாமாக குறிப்பிட்ட இடத்தில் பார் சொரிந்து நிற்பதைக் கண்ட மக்கள், அங்கு தோண்ட, நின்ற கோலத்திலிருந்த அம்மன் சிலையைக் கண்டனர். அவருக்காக எழுப்பப்பட்டதே இக்கோயிலாகும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014