பாலக்கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலக்கொடி

பாலக்கொடி நீரோட்டமுள்ள ஒரு கொடி.
இது நீர்வளம் இல்லாத மண்ணில் தானே வளரும்.
ஆடுமாடுகள் இதனை விரும்பி உண்பதில்லை.
வெள்ளாடு எட்டித்தழையை உண்பது போல் ஏதோ ஓரிரு இலையைக் கடித்து உண்ணும்.
பால் வருவதால் இதனைப் பாலக்கொடி என்கின்றனர்.

இதை ஒடித்தால் பால் வரும்.
இந்தப் பாலை தடுமம் (சளி) பிடித்தவர் மூக்கில் உரிஞ்சுவர்.
மூக்கடைப்பு விலகும்.
அதனால் இதன் பெயர் தெரியாதவர் மூக்குரிஞ்சான் கொடி என்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலக்கொடி&oldid=3849557" இலிருந்து மீள்விக்கப்பட்டது