பாலகோபாலன் நம்பியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலகோபாலன் நம்பியார் (மே 7, 1952 - மே 9, 2015)[1] மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். கப்பல் துறை நிர்வாகியாகப் பணியாற்றியுள்ள இவர் கிள்ளான் வாசகர் வட்டத்தின் தலைவருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1978 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வந்தவர். பெரிதும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், தொடர்கதைகள் ஆகியவற்றை எழுதி வந்தார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • கனவுக் கோலங்கள், புதினம், 2009[2]

உசாத்துணை[தொகு]

  1. "எழுத்தாளர் பாலகோபாலன் நம்பியார் காலமானார்!". செல்லியல். 10 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.
  2. "பாலகோபாலன் நம்பியார் அவர்களின் புத்தகங்கள்". விருபா. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலகோபாலன்_நம்பியார்&oldid=3220597" இலிருந்து மீள்விக்கப்பட்டது