உள்ளடக்கத்துக்குச் செல்

பாலகும்மி பத்மராஜூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலகும்மி பத்மராஜூ
பிறப்பு24 சூன் 1915
திருப்பதிபுரம், மேற்கு கோதாவரி மாவட்டம்
இறப்பு17 பெப்ரவரி 1983
புனைபெயர்பி. பத்மராஜூ
தொழில்இலக்கியவாதி
குடியுரிமைஇந்தியா
வகைஎழுத்தாளர், கவிஞர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்கலிவனா
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி விருது

பாலகும்மி பத்மராஜூ (Palagummi Padmaraju), சுருக்கமாக பி. பத்மராஜூ (24 சூன் 1915 - 17 பிப்ரவரி 1983) என்பவர் ஒரு தெலுங்கு எழுத்தாளர் ஆவார். இவர் சாகித்திய அகாதமி விருது பெற்றவர். பாலகும்மிராஜு தெலுங்கு இலக்கியம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தனது பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார்.

துவக்க கால வாழ்க்கை

[தொகு]

இவர் சென்னை மாகாணத்தின் (தற்கால ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில்) உள்ள திருப்பதிபுரத்தில் பிறந்தார்.[சான்று தேவை] இவர் 1939 - 1952 இக்கு இடையில் காக்கிநாடாவில் உள்ள அரசு பி.ஆர். கல்லூரியில் அறிவியல் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.[சான்று தேவை] இவரது தம்பி பாலகும்மி விஸ்வநாதம் ஒரு வீணைக் கலைஞர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் ஆவார். [1]

இலக்கியப் படைப்புகள்

[தொகு]

இவரது முதல் கதை "சுப்பி" என்பதாகும். இவர் சுமார் அறுபது சிறுகதைகளை எழுதியுள்ளார். கலிவனா, பாதவப் பிராயணம், எதிர்ச்சூசின முகுர்த்தம் என மூன்று தொகுதிகளாக அவை வெளிவந்தன . [2]

புதினங்கள்

[தொகு]
  • படிகின காலேஜ்
  • நல்ல ரேகடி
  • ராமராஜ்யனிகி ரகதாரி
  • ரெண்டோ அசோகுடி முனல்லா பலனா

திரைப்படங்கள்

[தொகு]

இவர் சில தெலுங்கு படங்களுக்கு கதை, உரையாடல், பாடல் போன்றவற்றை எழுதியுள்ளார்:

  • பங்காரு பாப்பா (1954)
  • பாக்ய ரேகா (1957)
  • பக்த சபரி (1960);
  • சாந்தி நிவாசம் (1960).
  • பிகாரி ராமுடு (1961)
  • பங்காரு பஞ்சரம் (1965)
  • ரங்குலா ரத்னம் (1966)
  • மஞ்சி வால்லகி மஞ்சிவாடு (1973)
  • ஸ்ரீ ராஜேஸ்வரி விலாஸ் காபி கிளப் (1976)
  • சர்தார் பாப்பராயுடு (1980)
  • இல்லலே தேவதா (1985)
  • ஸ்த்ரி (1995)

விருதுகள்

[தொகு]
  • சிறந்த கதை ஆசிரியருக்கான நந்தி விருது - ரங்குல ரத்னம் (1966) [3]
  • சிறந்த கதை ஆசிரியருக்கான நந்தி விருது - பஹுதூரபு படாசாரி (1983) 
  • 1985 ஆம் ஆண்டு கலிவனா என்ற நூலுக்காக தெலுங்கு மொழிக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர்.[சான்று தேவை]
  • இவரது சிறுகதையான சைக்ளோன் 1952 ஆம் ஆண்டு நியூயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூனால் நடத்தப்பட்ட சர்வதேச பரிசைப் பெற்றது. 23 நாடுகளிலிருந்து வந்த 59 கதைகளில் இருந்து இது தேர்ந்தெடுக்கப்பட்டது.[சான்று தேவை]

மேற்கோள்கள்

[தொகு]
  1. . 18 April 2008. 
  2. Articles : Movie Retrospect : Stri (1995) பரணிடப்பட்டது 2009-04-03 at the வந்தவழி இயந்திரம்
  3. "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF). Information & Public Relations of Andhra Pradesh. Retrieved 21 August 2020.(in Telugu)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலகும்மி_பத்மராஜூ&oldid=4260350" இலிருந்து மீள்விக்கப்பட்டது