பார்வதி பூபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பார்வதி பூபாலன் (பிறப்பு: பெப்ரவரி 4, 1944) சிங்கப்பூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு எழுத்தாளரும், கல்விமானுமாவார். கல்வி, மொழி, இலக்கியம் தொடர்பான மாநாடுகள், ஆய்வரங்குகளில் பங்கேற்று கட்டுரைகள் படைத்துவருபவரும் இவர் கவியரங்குகளிலும், பட்டிமன்றங்களிலும் பங்கேற்றும் வருகின்றார்.

தொழில்[தொகு]

ஆரம்ப காலகட்டங்களில் ஓர் ஆசிரியராக பணியாற்றினார். பின்பு கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவுப் பிரிவில் உயர்நிலைப் பள்ளிகளுக்கான பாடநூல் உருவாக்கப் பணியில் ஈடுபட்டு வந்தார்.

பதவிகள்[தொகு]

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினர்.

இலக்கியப் பணி[தொகு]

1961ல் எழுதத் தொடங்கிய இவர் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், மாணவர்களுக்கான இலக்கிய மேடை நாடகங்கள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரது படைப்புகள் பல நாடுகளிலிருந்தும் வெளிவரும் ஏடுகளிலும், சஞ்சிகைகளிலும் அவ்வப்போது பிரசுரமாகியுள்ளன.

எழுதியுள்ள நூல்[தொகு]

  • இளவேனில் பூக்கள் (கவிதைத் தொகுப்பு)

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்[தொகு]

  • தமிழ்மணி புலவர் பட்டம்
  • இளங்கலைப் பட்டம்

உசாத்துணை[தொகு]

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வதி_பூபாலன்&oldid=2713089" இலிருந்து மீள்விக்கப்பட்டது