பாரா சாகித் தர்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்காவின் முகப்பு
பராசாஹித் கல்லறைகளின் ஜியாரத்துக்காக (தரிசனம்) காத்திருக்கும் பக்தர்கள்

பாரா சாகித் தர்கா இந்தியாவின் ஆந்திர மாநிலம் நெல்லூரில் அமைந்துள்ளது. "பாரா சாகித் தர்கா" என்பதற்கு உருது மொழியில் "பன்னிரண்டு தியாகிகளின் ஆலயம்" என்று அர்த்தமாகும். இந்த தர்கா நெல்லூர் ஏரியின் கரையில் அமைந்துள்ளது. மேலும் இந்த தர்காவின் அருகிலேயே ஒரு ஈத்கா, ஒரு சுற்றுலா விடுதி மற்றும் அதன் அருகில் பூங்கா உள்ளது. இது ஹிஜ்ரியில் முஹர்ரம் மாதத்தில் ரொட்டியான் கி ஈத் / ரொட்டி பண்டிகையின் வருடாந்திர திருவிழாவின் சிறப்பிற்காக இசுலாமிய மக்களால் அறியப்படுகிறது. மேலும் இந்தியா முழுவதிலும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும்  இசுலாமிய மக்களை ஈர்க்கிறது.

வரலாறு[தொகு]

உள்ளூர் பாரம்பரியத்தின் படியும் தர்கா வளாகத்தில் உள்ள பாரசீக மொழியில் எழுதப்பட்ட கற்பதக்கத்தின் படியும், அவை அப்பகுதிக்குள் முதன்முதலாக நுழைந்த இசுலாமிய  இராணுவத்தின் ஒரு பகுதியாக இருந்து கரபாலா போரில் வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் பன்னிரண்டு கல்லறைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. [1]

ரொட்டி பண்டிகை[தொகு]

ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வழிபாட்டு தளங்களில் இதுவும் ஒன்றாகும், பல்வேறு இசுலாமிய திருவிழாக்களின் போது இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பல்வேறு பிரபலங்கள், நாடு முழுவதிலும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்களை ஈர்க்கிறது. வருடந்தோறும். [2]மொஹரம் மாதத்தில் மூன்று நாள் சிறப்பாக கொண்டாடப்படும் ரொட்டி திருவிழாவும் அத்தகையதே.


ஏராளமான பக்தர்கள் தங்கள் உடல்நலம், வாழ்க்கை, திருமண தாமதம் போன்றவற்றில் இருந்து விடுபட சிறப்பு பிரார்த்தனைகளுடன் வந்து, தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் வகையில் அருகில் உள்ள குளத்தில் ரொட்டி படைத்து வழிபடும் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. பிரார்த்தனையுடன் வருபவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் போது அந்த ரொட்டிகளை எடுத்து வந்து கொடுப்பதும் வழக்கம். பாரா சாகித் தர்காவில் சந்தன கொண்டாட்டங்கள் ரொட்டேலா பந்துகா என்றும் அழைக்கப்படுகின்றன, இது ரொட்டியோன் கி ஈத் என்று உருது மொழியில் அழைக்கப்படுகிறது, அதாவது இஸ்லாமிய சொற்களில் ரொட்டிகளின் திருவிழா. தர்காவில் இந்த திருவிழாவின் போது செய்யப்படும் வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற அதீத நம்பிக்கை பலருக்கும் உள்ளது. [3]

பார்வையாளர்கள் தங்களின் ரொட்டியை தங்களுக்கு ஒத்த விருப்பமுள்ளவர்களுடன் பரிமாறிக்கொள்வதோடு, தர்காவில் ஃபாத்திஹாவும் நிறைவேற்றப்பபடும். [4] உர்ஸ் (பண்டிகை) காலத்துக்குக் காலம் உருவாகி, சூஃபித்துவத்திற்குக் காரணமாக இருக்கலாம்.

ஈத்கா[தொகு]

ஈத் உல் பித்ர் (ரம்ஜான்) மற்றும் ஈத் அல்-அதா ( பக்ரீத் ) ஆகிய நாட்களில் ஈத் தொழுகைகளை ( கூட்டுத் தொழுகைகள்) தர்கா, அதன் வளாகத்தில் நடத்துகிறது. இதுவே அந்த நகரத்தின் மிகப்பெரிய ஈத்காவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரா_சாகித்_தர்கா&oldid=3663473" இலிருந்து மீள்விக்கப்பட்டது