பாப்பாக்கோயில் கஸ்தூரிரெங்கப் பெருமாள் கோயில்
தோற்றம்
கஸ்தூரி ரெங்கப் பெருமாள் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | கஸ்தூரி ரெங்கப் பெருமாள் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | பாப்பாக்கோயில் |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | ![]() |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கஸ்தூரி ரெங்கப் பெருமாள் |
சிறப்பு திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதசி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
பாப்பாக்கோயில் கஸ்தூரிரெங்கப் பெருமாள் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.
அமைவிடம்
[தொகு]இக்கோயில் நாகப்பட்டினம்-வேதாரண்யம் சாலையில் நாகப்பட்டினத்திற்குத் தென்மேற்கில் 5 கி.மீ. தொலைவில், அந்தணப்பேட்டைக்கு அடுத்தபடியாக உள்ளது.
இறைவன், இறைவி
[தொகு]மூலவர் சன்னதியில் திருவடி அருகே திருமகளும், நிலமகளும் இருக்க, நாபியில் பிரமன் இருக்க, ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது சயனித்த கோலத்தில் இறைவன் கஸ்தூரிரெங்கப் பெருமாள் என்ற பெயரில் ஒரே கல்லால் ஆன திருமேனியாகக் காட்சியளிக்கின்றார். [1]
அமைப்பு
[தொகு]ஐந்து நிலை ராஜகோபுரமும், மகாமண்டபமும் கொண்டு கோயில் அமைந்துள்ளது. விநாயகர் விஷ்ணு கணபதியாக உள்ளார். வடபுறத்தில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.[1]