பபும் பரே மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாபும் பாரே மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பபும் பரே மாவட்டம்
பபும் பரேமாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம்
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்யுபியா
பரப்பு2,875 km2 (1,110 sq mi)
மக்கட்தொகை176,573 (2011)
படிப்பறிவு82.1%
பாலின விகிதம்950
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பபும் பரே மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இதுவே அருணாசலப் பிரதேசத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட முதல் மாவட்டமாகும். இது அருகில் உள்ள கீழ் சுபன்சிரி மாவட்டத்தில் இருந்து, 1999 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக பிரித்து உருவாக்கப்பட்ட மாவட்டமாகும்.

அமைப்பு[தொகு]

3,462 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,76,573 மக்கள் தொகையும் கொண்ட இம்மாவட்டம் 4 தாலுக்காக்களும், 6 ஊராட்சி ஒன்றியங்களும் கொண்டது. எழுத்தறிவு 68.55%. இதன் தலைமையிடம் யுபியா நகரம் ஆகும்.

அருணாசலப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமான இடாநகர் இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு சகலீ, யுபியா, மேங்கியோ, லெபோரியாங், தொரு, கிமின், டோய்முக், பலிஜான், தாராசோ, நகர்லகுன், மற்றும் இடாநகர்.

இந்த மாவட்டம் மூன்று சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.

மக்கள்[தொகு]

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான நிஷி, மற்றும் மிகிர் இனத்தை சேர்ந்தவர்களே. நிஷி மக்கள் அனைவரும் டோன்யி-போலோ மதத்தை பின்பற்றினாலும், மிகிர் மக்கள் அதிகமானோர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டனர்.

சுற்றுலாத் தளங்கள்[தொகு]

1978 ஆம் ஆண்டு இந்த மாவட்டத்தில் இடாநகர் வனவிலங்கு சரணாலயம் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பபும்_பரே_மாவட்டம்&oldid=3890603" இலிருந்து மீள்விக்கப்பட்டது