பாண் ஆற்றுப்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாண் ஆற்றுப்படை என்னும் துறைப் பாடல்கள் புறநானூற்றுத் தொகுப்பில் ஏழு [1] உள்ளன. பாணனை வள்ளலிடம் வழி சொல்லி ஆற்றுப்படுத்துவது பாணாற்றுப்படை.[2][3]

ஆலத்தூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடமும், [4] கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளியிடமும், [5] சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடமும், [6] கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனிடமும், [7] பரணர் பேகனிடமும், [8] மருதன் இளநாகனார் நாஞ்சில் வள்ளுவனிடமும், [9] மோசிகீரனார் கொண்கானங் கிழானிடமும் [10] அந்தப் பாடல்கள் பாணனை ஆற்றுப்படுத்துகின்றன.

சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை நூல்கள் பாணனை ஆற்றுப்படுத்துவதும் இங்குக் கருதத் தக்கது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறநானூறு 68, 69, 70, 138, 141, 155, 180
  2. கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
    ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி
    பெற்ற பெரு வளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ
    சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும் (தொல்காப்பியம் புறத்திணையியல் 30)
  3. சேண் ஓங்கிய வரை அதரில்,
    பாணனை ஆற்றுப் படுத்தன்று. (புறப்பொருள் வெண்பாமாலை 216
  4. புறநானூறு 69,
  5. புறநானூறு 68,
  6. புறநானூறு 70,
  7. புறநானூறு 180,
  8. புறநானூறு 141,
  9. புறநானூறு 138,
  10. புறநானூறு 155,
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்_ஆற்றுப்படை&oldid=1267570" இலிருந்து மீள்விக்கப்பட்டது